மேலும் அறிய

Ranil Wickremesinghe: இலங்கை தமிழர்களின் பிரச்சனை.. தமிழ் கட்சி தலைவர்களுடன் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க சந்திப்பு..

இலங்கையில் இருக்கும் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் வகையில் இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இலங்கை அதிபராக ரணில் விக்ரமசங்க பதவி ஏற்றது முதல் அங்கு இருக்கும் தமிழர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு தொடர்ந்து முயற்சிகள் மேற்கொண்டு வருகிறார். இதற்காக தமிழ் தலைவர்களுடன் பேச்சுவார்த்தையும் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நேற்றைய தினம் இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் ரணில் விக்ரமசிங்க தமிழ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார். அப்போது இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் உள்ள மக்களுக்கான நில உரிமைகளை வழங்குதல், மீள்குடியேற்றம் மற்றும் நல்லிணக்கம், 13வது திருத்தச் சட்டம் தொடர்பான சட்டங்களை அமல்படுத்துவது உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியாவில் அகதி முகாம்களில் உள்ள இலங்கையர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் பிரச்சனைகள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது என்று இலங்கை அதிபர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.         

இலங்கையில் தமிழர்களுக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான இனப்பிரச்சினையைத் தீர்க்கும் முயற்சியில் 1987 ஆம் ஆண்டு 13 வது திருத்தம் நிறைவேற்றப்பட்டது. அப்போதைய பிரதமர் ராஜீவ் காந்தி மற்றும் இலங்கை ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனே ஆகியோர் கையெழுத்திட்ட இந்தியா-இலங்கை ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக இது செய்யப்பட்டது. அந்த நேரத்தில் தமிழ் கிளர்ச்சி வேகமாக நடைபெற்றது, பின்னர் அரசாங்கத்திற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் (LTTE) இடையே மோதல் போக்கு நிலவியது.  குறிப்பாக தனித் தமிழ் நாடு கோரிக்கையை முன்வைத்தது இந்த கிளர்ச்சி நடைப்பெற்றது. அதுமட்டுமின்றி ராணுவத்தையும் களமிறக்கி பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. 2009 ஆம் ஆண்டு வேலுப்பிள்ளை பிரபாகரனின் மறைவுக்கு பின் அந்த அமைப்பு வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.  

1948 இல் ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நாடு சுதந்திரம் பெற்றதிலிருந்து இலங்கையில் உள்ள தமிழர்கள் கிழக்கு மற்றும் வடக்கு பிராந்தியங்களில் அரசியல் சுயாட்சியைக் கோரியுள்ளனர். கல்வி, விவசாயம், நிலம், காவல்துறை, நிதி மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றின் மீதான அதிகாரங்களை நாட்டின் ஒன்பது மாகாணங்களுக்கு இந்த திருத்தச்சட்டம் வழங்கும். எனினும், நாட்டில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்களால் அது முழுமையாக தற்போது வரை நடைமுறைப் படுத்தப்படவில்லை. மேலும், ஆங்கிலத்தை இணைப்பு மொழியாகவும், தமிழை அலுவல் மொழியாகவும் ஆக்குவதற்கும் வழிவகுத்தது. 

இந்த ஒப்பந்தம் போடப்பட்டதிலிருந்து, 13 வது திருத்தத்தை அமுல்படுத்துமாறு இந்தியா அழுத்தம் கொடுத்து வந்தது. ஒருங்கிணைந்த  இலங்கையை உருவாக்குவதற்கு, இன சமூகங்களுக்கிடையிலான பிரச்சினையில் நீண்டகால நல்லிணக்கத்திற்காக தமிழ் பிரதேசங்களுக்கு அதிகாரப் பகிர்வு அவசியம் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. இந்நிலையில் நேற்று இலங்கை அதிபர் தமிழ் கட்சி தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PIT BULL , ROTTWEILLER DOG: பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
பிட்புல், ராட்வீலர் நாய்களை வளர்த்தால் இனி அவ்வளவு தான்.. நாளை முதல் ரூ.1 லட்சம் அபராதம்
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
TN SIR Voter List: வரைவு வாக்காளர் பட்டியல் - உங்கள் பெயர் இருக்கா? இல்லையா? அறிந்துகொள்வது எப்படி? வழிகள் இதோ
Country Chicken : ‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
‘நாட்டுக்கோழியை கண்டுபிடித்து வாங்குவது எப்படி?’ சென்னை மக்களுக்கு ஒரு அடடே அப்டேட்..!
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
BS6 Vs BS5 Vs BS4: கார்களுக்கு விதிக்கப்பட்ட தடை.. BS6 Vs BS5 Vs BS4 என்ன வித்தியாசம்? ஏன் அவசியம்?
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
Robotics Labs: அரசுப் பள்ளிகளில் ரோபோட்டிக்ஸ் புரட்சி; மாணவர்கள் எதிர்காலத்தை வடிவமைக்கும் புதிய லேப்கள் தொடக்கம்!
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
பாகிஸ்தானிற்கு வார்னிங்.. 24 ஆயிரம் பிச்சைக்காரர்களை அனுப்பிய சவுதி அரேபியா - காரணம் என்ன?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
Car Price Hike: ரெண்டே வாரம்.. கிடுகிடுவென உயரப்போகும் விலை, எந்தெந்த ப்ராண்ட், கார்களுக்கு தெரியுமா?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
தமிழ் கலை ஆசிரியர்கள் பணி: ரூ.1.25 லட்சம் ஊதியம்- என்ன தகுதி? விண்ணப்பிப்பது எப்படி?
Embed widget