மேலும் அறிய

உலகின் முதல் பைலட் ராவணன்? நிரூபிப்பதற்கு ஆதாரங்களை திரட்டும் இலங்கை அரசு..!

போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டால் நிச்சயம் ராவணன்தான் விமானத்தில் பறந்த முதல் மனிதர் என்று நிரூபிப்போம் என இலங்கை அரசு தெரிவிக்கிறது

இராமாயண கதையில் வரக்கூடிய ராவணன்தான் உலகில் பைலட் என்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதனை எங்களிடம் தாருங்கள் என மக்களிடம் இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

 இராமயண கதாபாத்திரத்தில் வரக்கூடிய ராமன் , இராவணன் தொடர்பான சர்ச்சைப் பேச்சுகள் சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது. கடந்த சில நாள்களுக்கு முன்னதாக  நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஒலி, ராமர் இந்தியர் அல்ல என்றும், அவர் ஒரு நேபாளி என்றும் தெரிவித்திருந்தார். மேலும் நேபாளத்தில் பிர்குஞ் மேற்கில் இருக்கும் சிறிய கிராமத்தில் பிறந்தவர் ராமர் என்றும், உண்மையான அயோத்தி நேபாளத்தில்தான் உள்ளது என்று உரிமை கொண்டாடிய நிலையில் அது மிகப்பெரிய  சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் இது தொடர்பான கருத்தினை அந்நாட்டு முன்னாள் துணை பிரதமர் கமல் தபாவே ஏற்றுக்கொள்ளவில்லை. மேலும் இந்தியா- நேபாள உறவை மேலும் சிதைக்கும் வகையில் ஷர்மா ஒலியின் பேச்சு இருந்ததாக அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

உலகின் முதல் பைலட் ராவணன்? நிரூபிப்பதற்கு ஆதாரங்களை திரட்டும் இலங்கை அரசு..!

இந்நிலையில் இந்த சர்ச்சை முடிவத்திற்குள்ளாகவே இலங்கை அரசு, ராவணன் தான் உலகின் முதல் விமானி என்றும், அவர் முதன் முதலாக  விமானத்தில் பறந்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்து புராணத்தின் படி, ராமாயணத்தில் சீதையை ஆகாயம் மார்க்கமாக விமானம் மூலம் ராவணன் கடத்திச்சென்று இலங்கையில் சிறை வைத்ததாகக் கூறப்படுகிறது.  அதனால் ராவணன்தான் முதன்முதலில் விமானத்தைப் பயன்படுத்தினார், அவர்தான் உலகின் முதல் விமானி என்று இலங்கை அரசு கூறி வருகிறது. இந்நிலையில் தான் இலங்கைச் சுற்றுலாத்துறை மற்றும் விமானப் போக்குவரத்து அமைச்சகம் சார்பில் பத்திரிகைகளில் ஒரு விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதில்‘‘மன்னர் ராவணன் தொடர்பான ஆவணங்கள், தரவுகள் அல்லது புத்தகம் இருந்தால் அதனை அரசிடம் பகிர்ந்து கொள்ளுங்கள். ராவணனின் பெருமை மற்றும் நம் நாட்டின் விமான ஆதிக்கத்தின் பாரம்பரியம் ஆகியவைக் குறித்து அரசு ஆழமான ஆராய்ச்சியை நடத்துகிறது. எனவே உங்களின் ஆவணங்கள் அதற்கு உதவிகரமாக இருக்கும்’’ என்றும் தெரிவித்துள்ளது. இதற்கு முன்பும் இப்படியான விளம்பரம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உலகின் முதல் பைலட் ராவணன்? நிரூபிப்பதற்கு ஆதாரங்களை திரட்டும் இலங்கை அரசு..!

இதோடு நாம் இராமாயணத்தில், இராவணன் இலங்கையின் அரக்கன் என்றுதான் நமக்கு தெரியும். ஆனால் இலங்கையில் ராவணன் என்பவர் சிறந்த ஆட்சியாளராகவும், சிறந்த அறிஞராகவும் அங்குள்ள மக்களால் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் ராவணன் சீதையை கடத்திச் செல்வதற்காக இந்தியா செல்லவில்லை என்றும், அது இந்திய தரப்பில் கூறப்படும் கட்டுக்கதை என்றும் அதில் தங்களுக்கு உடன்பாடு இல்லை என இலங்கை அரசு குறிப்பிடுகிறது. எனவே இதுதொடர்பான போதுமான தகவல்கள் சேகரிக்கப்பட்டால் நிச்சயம்   ராவணன்தான் விமானத்தில் பறந்த முதல் மனிதர் என்றும், அவர் வில்லன் இல்லை எனவும், தலைச்சிறந்த ஆட்சியாளராகப் பணியாற்றினார் என்பதை அடுத்த ஐந்து ஆண்டுகளில் நிரூபிப்போம் என்று இலங்கை அரசு கூறுகிறது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Edappadi Palaniswami : ராஜ்யசபா சீட் யாருக்கு? OPS, TTV-க்கு  செக்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்Savukku Sankar: சவுக்கு வீட்டில் சாக்கடை.. அடித்து உடைத்த கும்பல்! வெளியான பகீர் காட்சி | CCTVPuducherry Assembly | திமுக MLA-க்கள் ஆவேசம் குண்டுக்கட்டாக வெளியேற்றம் சட்டப்பேரவையில் பரபரப்புMadurai Police Murder | மதுரையில் துப்பாக்கிச் சூடு குற்றவாளியை பிடித்த போலீஸ் காவலர் எரித்துக் கொன்ற விவகாரம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
இபிஎஸ் டெல்லி பயணம்.. பேரவையில் போட்டு உடைத்த ஸ்டாலின்.. என்ன கூறினார் தெரியுமா.?
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
Siddha Ayush Ministry: சித்த மருத்துவத்தை திருடும் ஆயுர்வேதம்? ஆதரவாக மோடி அரசு? கொதிக்கும் தமிழ் சமூகம்
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
EPS Delhi Visit : ’விமானத்தில் ஏறிய எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி’ டெல்லியில் ரகசிய டீல்!
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
ராகுல் காந்தி எந்த நாட்டு குடிமகன்.? முடிவு செய்ய மத்திய அரசுக்கு 4 வாரம் கெடு.. நடந்தது என்ன.?
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Actor Hussaini: திரையுலகம் அதிர்ச்சி..! பலனளிக்காத சிகிச்சை, நடிகர் ஹுசைனி மரணம் - உடல் தானம்
Watch Video: உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
உன் பொண்ணா இருந்தா இப்படி பண்ணுவியா.? +2 மாணவியை ஓடவிட்ட அரசுப் பேருந்து ஓட்டுநர்...
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
kunal kamra: ”சி.எம்., சொன்னா? மன்னிப்புலா கேட்க முடியாது” ஏக்நாத் ஷிண்டே விவகாரம், குணால் கம்ரா திட்டவட்டம்
Turkey Protest: துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
துருக்கியில் போராட்டக்காரர்களை பறக்கவிட்ட போலீஸ்காரர்கள்.. உச்சகட்ட பதற்றம்.. 1,100 பேர் கைது...
Embed widget