மேலும் அறிய

Sri Lanka: இலங்கையில் புது அச்சுறுத்தல்! 2மாதத்தில் 23 பேரை சுட்டுக்கொன்ற போதைப் பொருள் கும்பல்!

இலங்கையில் கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் இதுவரை 23 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் கடந்த மே மாதம் 30ம் தேதி முதல் இதுவரை 23 க்கும் மேற்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதன்படி கடந்த நான்காம் தேதி மட்டும் 3 துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் நடத்தப்பட்டுள்ளன. அதில் அவற்றில் இருவர் உயிரிழந்தனர்.

கொழும்பு கல்கிஸ்ஸை நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். போதைப்பொருள் கடத்தல் தொடர்பிலான வழக்கு விசாரணை நடைபெற்ற போதே இந்த துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது.

வழக்குடன் தொடர்புடைய எதிர்தரப்பு, நீதிமன்ற விசாரணை கூட்டில் இருந்த போதே துப்பாக்கியை பயன்படுத்தியதும் அம்பலமாகியுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட நபரை நோக்கி, இரண்டு தடவைகள் துப்பாக்கி சுடப்பட்டதாகவும், இந்த துப்பாக்கி சூட்டில்  எவருக்கும், எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.


Sri Lanka: இலங்கையில் புது அச்சுறுத்தல்! 2மாதத்தில் 23 பேரை சுட்டுக்கொன்ற போதைப் பொருள் கும்பல்!

அதனைத் தொடர்ந்தும், நீதிமன்றத்திற்குள் துப்பாக்கி பயன்படுத்திய சந்தேக நபருடன் மேலும் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு  தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம் தொடர்பாக கல்கிஸ் காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

 இதேவேளை, கொழும்பை அடுத்த லுனுகம்வெஹேர மற்றும் அஹங்கம ஆகிய பகுதிகளில் நடத்தப்பட்ட இருவேறு துப்பாக்கி சூட்டு சம்பவங்களில் இருவர் உயிரிழந்துள்ளனர். கடந்த பத்து வருடங்களில் ஆட்சியாளர்கள் செய்த அபிவிருத்திகளில் இதுவும் ஒன்று என கூறலாம்.

 இலங்கைக்கு கடல் வழியாக போதை பொருள் கடத்தல். அதேபோல் போதைப் பொருள் மாபியாக்கள் கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது. இதில் அரசியல்வாதிகள் ,பெரும் வர்த்தகர்களுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. இலங்கையின் எதிர்காலமே இந்த போதை பொருள் கும்பலால் கேள்விக்குறியாகி இருப்பதை காண முடிகிறது .

 ஒரு புறம் அரசியல் ,பொருளாதாரம் பிரச்சனை என்றாலும் நாட்டில் என்றும் இல்லாதவாறு இந்த துப்பாக்கி சூடு சம்பவங்கள் கடந்த இரு மாதங்களில் அதிக அளவில் பதிவாகி இருக்கிறது. இது கடந்த பத்து வருடங்களுக்குள்ளாக நாட்டிற்குள் வர வைக்கப்பட்ட தேவையில்லாத ஒரு சமூகத்தை சீரழிக்கும் கலாச்சார சீர்கேடாகவே பார்க்கப்படுகிறது .

தற்போதும் கடல் வழியாக போதைப்பொருள் மூட்டைகளுடன் ஏராளமானோர் பிடிபடுவதையும் செய்திகள் வாயிலாக அறிய முடிகிறது .இலங்கையில் பொதுமக்கள் மீது வன்முறைகளை கட்டவிழ்த்து விடும் ஆட்சியாளர்களால் ,போதை பொருள் கடத்தல் மாஃபியாக்களையும், குற்றத்தில் ஈடுபடுபவோரையும் கட்டுப்படுத்த முடியவில்லை என தெரிகிறது.

 ஆனாலும் விசாரணைகளை  மேற்கொண்டுள்ள இலங்கை போலீசார் இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கு என்ன  காரணம் என்று விளக்கத்தையும் அவர்கள் தெளிவாக இதுவரை ஊடகங்களுக்கு வழங்கவில்லை. பொத்தம் பொதுவாக போதை பொருள் சம்பவங்கள் என்று மட்டுமே பதிவாகி இருக்கின்றன.

ஆபிரிக்க கண்டத்தில் உள்ள நாடுகளைப் போல் தற்போது இலங்கையும் துப்பாக்கி கலாச்சாரம் என்ற ஒரு சீரழிக்குள் மாட்டிக் கொண்டுள்ளது. தற்போது முக்கியமாக எதற்கெடுத்தாலும்  துப்பாக்கி சூடு என என்ற நிலை இலங்கையில் வந்திருக்கிறது. அமெரிக்காவைப் போல இலங்கையிலும் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. கடந்த 2 மாதங்களில் 23 பேர் பலியாகியுள்ளதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்காவில் பள்ளி வளாகம், வணிக வளாகங்களில் திடீரென நடத்தப்படும் துப்பாக்கிச்சூடு சம்பவங்களால் பலர் உயிரிழக்கின்றனர். அதே போல இலங்கையில் திடீரென துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்துள்ளது. இது சிறிது சிறிதாக இலங்கைக்குள் கொண்டுவரப்பட்ட ஒரு அழிவின் அடையாளமாகும். இது தற்போது இலங்கை பூராகவும் பரவி இருக்கிறது தமிழ் பிரதேசங்கள் ,சிங்கள பிரதேசங்கள் என்றில்லாமல் அனைத்து பகுதிகளிலும் இந்த துப்பாக்கி கலாச்சாரம் பரவி இருப்பதை நாம் அறிய முடிகிறது.

இதில் அதிகளவாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கூலிப்படையினரே இந்த சம்பவங்களின் பின்னணியில் உள்ளார்கள் என இலங்கை காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இருந்தபோதிலும் மக்களை கட்டுப்படுத்த ஆட்சியாளர்களால், இந்த துப்பாக்கி சூடு சம்பவங்களையும், போதைப்பொருள் கடத்தல் மாஃபியாக்களையும் கட்டுப்படுத்த முடியவில்லை என  அண்மை காலங்களில் பதிவாகியுள்ள துப்பாக்கி சூடு சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவங்களுக்கும், போதைப் பொருள் வர்த்தகத்திற்கும் இடையில் தொடர்புகள் காணப்படலாம் என போலீஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.இருந்த போதும் இந்த 23 உயிரிழப்புக்கள் நடந்த பிறகும் இலங்கையின் அரசியல் தரப்பில் இருந்தோ ,அதிகாரிகள் தரப்பிலிருந்தோ இதற்கான காரணங்கள், பின்னணியில் இருப்பவர்கள் குறித்தோ எந்த தகவலும் இதுவரை வெளியிபப்டவில்லை.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

கோவை, மதுரைக்கு NO METRO ஏன், பின்னணி என்ன?
Nitish Kumar |
MK Stalin Phone Call | ‘’கவலைப்படாதமா அப்பா நான் இருக்கேன்’’மாணவிக்கு முதல்வர் PHONE CALL
Saudi Bus Accident | 42 இந்தியர்கள் பலி!விபரீதமாய் முடிந்த ஹஜ் பயணம்சவுதி அரேபியாவில் பயங்கரம்
Vaithiyalingam joins ADMK| ”வாங்க வைத்திலிங்கம்”EPS கொடுத்த அசைன்மெண்ட்அதிமுகவின் டெல்டா கணக்கு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
TN TET 2026: சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்; எப்படி? என்ன தகுதி? முக்கிய தேதிகள்!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
வெளிநாடு கனவு நனவாகும்! ரூ.36 லட்சம் கல்வி உதவித்தொகை & பல திட்டங்கள்: ஆதிதிராவிடர், பழங்குடியினருக்கு தமிழக அரசின் சாதனை!
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
Metro Rail: கோவை, மதுரைக்கான மெட்ரோ திட்டம் என்ன? எத்தனை ஆயிரம் கோடிகள் பட்ஜெட்? எவ்வளது தூரம் - விவரங்கள்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
காதலிக்க மறுத்த மாணவி படுகொலை: தமிழ்நாட்டில் சமூக விரோதிகளுக்குத்தான் பாதுகாப்பு- அன்புமணி கண்டனம்
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
Airplane: விமானங்கள் இரவில் சிவப்பு, மஞ்சள், பச்சை விளக்குகளில் ஒளிர்வது ஏன்? காரணம் தெரியுமா?
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
RE Shotgun 650 : ஷாட்கன் 650 பைக் வாங்க திட்டமா? இந்த விஷயங்கள் தெரியாமா முடிவு பண்ணாதிங்க - டீடெய்ல் லிஸ்ட்
Salary Hike: குஷியோ குஷி.! ரூ.12 ஆயிரத்திலிருந்து 18ஆயிரமாக ஊதியம் அதிகரிப்பு.! ஊழியர்கள் கொண்டாட்டம்
குஷியோ குஷி.. இரண்டு மடங்காக உயர்ந்த ஊதியம் .! ஊழியர்கள் கொண்டாட்டம்- யாருக்கெல்லாம் தெரியுமா.?
மதுரைக்கும், கோவைக்கும்
மதுரைக்கும், கோவைக்கும் "NO METRO"... பாஜகவின் பழிவாங்கும் சதியை முறியடிப்போம்- சீறும் மு.க.ஸ்டாலின்
Embed widget