மேலும் அறிய

1.3 கோடி ரூபாய் சம்பளம்.. வேலையே இல்லை… போரடிக்குது! கம்பெனி மேலயே வழக்கு போட்டவரை தெரியுமா?

அவருக்கு நிறுவனம் வேலை எதுவும் தராமல் சம்பளம் மட்டும் தருவதால் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்ததாக கூறப்படுகிறது.

வேலை தரவில்லை சம்பளம் மட்டுமே தருகிறார்கள் என்று தான் வேலை செய்யும் நிறுவனத்தின் மீது ஊழியர் ஒருவர் வழக்கு தொடுத்த சம்பவம்  பாடாய்ப்பட்டு வேலை செய்து சம்பாதிக்கும் மக்களை உச்சு கொட்ட வைத்துள்ளது.

சலிப்பான வேலை

ஊழியர்கள் தாங்கள் பணிபுரியும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது மிகவும் பொதுவான நிகழ்வாகும். ஆனால் இப்படி ஒரு காரணத்திற்காக வழக்கு பதிவு செய்வது, நெட்டிசன்கள் இடையே சலசலப்பை உருவாக்குகிறது. ஒரு ரயில்வே ஊழியர் தனது நிறுவனத்தின் மீது வழக்குத் தொடர்ந்த காரணத்தினால்தான், இது தற்போது பெரும் பேசுபொருள் ஆகியுள்ளது.

அவருக்கு நிறுவனம் வேலை எதுவும் தராமல் சம்பளம் மட்டும் தருவதால் நிறுவனத்தின் மீது வழக்குத் தொடுத்ததாக கூறப்படுகிறது. "ஒன்றும் செய்யாத" "சலிப்பான வேலை" என்று அவர் இதனை குறிப்பிடுகிறார்.

1.3 கோடி ரூபாய் சம்பளம்.. வேலையே இல்லை… போரடிக்குது! கம்பெனி மேலயே வழக்கு போட்டவரை தெரியுமா?

1.3 கோடி ரூபாய் சம்பளம்

டப்ளினில் உள்ள ஐரிஷ் ரெயிலில் நிதி மேலாளராகப் பணிபுரியும் டெர்மட் அலாஸ்டர் மில்ஸ், £105,000 ($1,20,000 க்கு மேல்) சம்பளமாக பெரும் வருடாந்திர வேலையில், சாப்பிடுவது, குடிப்பது மற்றும் செய்தித்தாள்கள் படிப்பது என்று பொழுதைக் கழிப்பதாக கூறுகிறார். இந்திய ரூபாய் மதிப்பில் வருடத்திற்கு 1.3 கோடி ரூபாய் சம்பளமாக பெறுகிறார். இவ்வளவு சம்பளம் வாங்கி வேலைக்கு சென்று எதையும் செய்யாமல் தனது நாட்களைக் கழிப்பதாகப் பகிர்ந்து கொண்டுள்ளார். "வாரத்திற்கு ஒருமுறை வேலை செய்ய வேண்டும் என்று ஏதாவது கிடைத்தால் கூட நான் மகிழ்ச்சி அடைவேன்" என்று மில்ஸ் பணியிட உறவுகள் ஆணையத்திடம் (WRC) கூறியதாக டெய்லி மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்: Gujarat, Himachal Pradesh election result LIVE: குஜராத், இமாச்சலில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தும் பாஜக; தடுமாறும் காங்கிரஸ்; சோடை போன ஆம் ஆத்மி..!

ஒர்க் ஃபிரம் ஹோம் உண்டு

"நான் வீட்டிலிருந்தும் வேலை செய்கிறேன், அலுவலகத்திற்கும் செல்கிறேன் - இரண்டு நாட்கள் வீட்டில், மூன்று நாட்கள் அலுவலகத்தில்," என்று பணியிட உறவுகள் ஆணையத்தில் நடந்த விசாரணையின் போது அவர் வெளிப்படுத்தியதாக டெய்லி மெயில் மேலும் கூறியது. விசாரணையின்போது அவர் தனது பணியிடத்தில்தான் என்ன செய்வேன் என்ற அன்றாட நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். மேலும், முழு சூழ்நிலையும் தன்னை தனது சக ஊழியர்களிடமிருந்து தனிமைப்படுத்தியதாக அவர் கூறினார்.

1.3 கோடி ரூபாய் சம்பளம்.. வேலையே இல்லை… போரடிக்குது! கம்பெனி மேலயே வழக்கு போட்டவரை தெரியுமா?

அலுவலகத்தில் என்ன செய்வார்?

"நான் அலுவலகத்திற்குச் சென்றால், காலை 10 மணிக்கு உள்ளே செல்வேன். நான் போகும்போதே இரண்டு செய்தித்தாள்கள் வாங்கிச்செல்வேன், தி டைம்ஸ் மற்றும் தி இன்டிபென்டன்ட். அதோடு ஒரு சாண்ட்விச் வாங்குகிறேன். நான் எனது அறைக்குள் சென்று, எனது கணினியை ஆன் செய்து, மின்னஞ்சல்களைப் பார்ப்பேன். பணியுடன் தொடர்புடைய மின்னஞ்சல்கள் எதுவும் இருக்காது. பணியிடத்தில் இருந்து செய்திகள் இல்லை, தகவல்தொடர்புகள் இல்லை, சக ஊழியர் தொடர்புகள் இல்லை. நான் தனியாக உட்கார்ந்து செய்தித்தாள் வாசிப்பேன், பிறகு வாங்கிச்சென்ற சாண்ட்விச்சை சாப்பிடுவேன்.

பின்னர் காலை 10.30 மணியளவில், பதில் தேவைப்படும் மின்னஞ்சல் இருந்தால், அதற்கு நான் பதிலளிப்பேன். அதனுடன் தொடர்புடைய வேலை இருந்தால், அந்த வேலையைச் செய்வேன், ”என்று அவர் பகிர்ந்து கொண்டார். பணியிட உறவுகள் ஆணையத்தில் நீதிபதி பெனிலோப் மெக்ராத், வழக்கு தொடர்பாக ஆஜராகுமாறு முதலாளியின் தரப்பைக் கேட்பதாகப் பகிர்ந்து கொண்டார். இந்த வழக்கு விசாரணை இன்னும் நடந்து வருவதாகவும், அடுத்த விசாரணை பிப்ரவரியில் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
612
Active
28518
Recovered
157
Deaths
Last Updated: Sun 13 July, 2025 at 12:57 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget