மேலும் அறிய

இலங்கையில் மீண்டும் பதற்றம்...கோத்தபய ராஜபக்சேவை நேரில் சென்று சந்தித்த அதிபர் ரணில் விக்கிரமசிங்க

அதிபர் ரணில் விக்கிரமசிங்க நேற்று கோத்தபய ராஜபக்ச தங்கி உள்ள வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்கள் நாட்டின் பொருளாதார நெருக்கடி குறித்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க அந்நாட்டு முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை முன்னதாக சந்தித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடியை அடுத்து அந்நாட்டில் மக்கள் புரட்சி வெடித்தது. தொடர்ந்து அது வன்முறையாக மாறி கிளர்ச்சி ஏற்பட்ட நிலையில் நாட்டைவிட்டு முன்னதாக கோத்தபய ராஜபக்ச தப்பியோடினார். மேலும் ராஜபக்ச குடும்பத்தை சேர்ந்த அனைவரும் பதவியை விட்டு விலகினர். 

அதனையடுத்து நடைபெற்ற அதிபர் தேர்தலில் 225 உறுப்பினர்களில் 134 பேரின் ஆதரவைப் பெற்று ரணில் விக்கிரமசிங்க அதிபரானார்.

இச்சூழலில் கடந்த ஜூலை மாதம் மத்தியில் நாட்டை விட்டுத் தப்பியோடிய முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்ச ஒன்றரை மாதங்களுக்குப் பின்னர் தற்போது தாயகம் திரும்பியுள்ளார்.

இலங்கை ஸ்ரீமாவோ பண்டாரநாயகே சர்வதேச விமானநிலையத்துக்கு முன்னதாக வந்த அவரை, அவரது கட்சியை சேர்ந்த முக்கியப் பிரமுகர்கள் விமான நிலையத்தில் சந்தித்தனர். கோத்தபய ராஜபக்சவுடன் அவரது மனைவி லோமா ராஜபக்சவும் உடனிருந்தார்.

அங்கிருந்து அரசாங்கம் அவருக்காக ஒதுக்கிய ரகசிய பங்களாவுக்கு கோத்தபய சென்றார். அந்த பங்களா பற்றிய விவரங்கள் ஏதும் வெளியாகவில்லை. அதேபோல் கோத்தபய ராஜபக்சவை நேரில் சந்தித்த கட்சியினரும் கூட அவரது அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் பற்றி ஏதும் தெரிவிக்க மறுத்து அமைதி காத்து வந்தனர்.

இருப்பினும் விமான நிலையத்தில் கோத்தபய ராஜபக்ச வந்தபோது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.

தற்போது அவர் கொழும்பில் உள்ள அரசு பங்களாவில் தங்கி உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பொதுமக்கள் மீண்டும் அவருக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்கும் வகையில் இந்த பங்களாவைச் சுற்றி பாதுகாப்புக்காக ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டு உள்ளனர். 

அவரை பாதுகாக்கும் வகையில் அதிபர் ரணில் விக்கிரமசிங்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இதனிடையே அதிபர் ரணில் விக்கிரமசிங்கே நேற்று கோத்தபய ராஜபக்ச தங்கி உள்ள வீட்டுக்கு நேரில் சென்று சந்தித்தார். அப்போது அவர்கள் இரண்டு பேரும் நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம், பொருளாதார நெருக்கடி சூழல் குறித்து பேசியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளது.

இலங்கையில் விரைவில் 12 பேர் புதிய மந்திரிகளாக பதவி ஏற்க உள்ளனர். இதில் மகிந்த ராஜபக்சவின் மூத்த மகன் நமல் ராஜ பக்சவுக்கு மந்திரி பதவி வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் அதிபர் கோத்தபய ராஜபக்சவை சந்தித்து பேசி உள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் மீண்டும் இலங்கையில் ராஜபக்ச குடும்பத்தினரின் ஆதிக்கம் தலை தூக்கலாம் என பொதுமக்கள் அச்சம் தெரிவித்தும் குற்றம்சாட்டியும் வருகின்றனர். இந்நிலையில், மீண்டும் அந்நாட்டில் அசாதாரண சூழல் உருவாகும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் படிக்க: The Royal Family Reunion: குடும்ப சர்ச்சைகளுக்கு நடுவே சர்ப்ரைஸ்...எலிசபெத்துக்கு ஒன்றாக அஞ்சலி செலுத்த வந்த வில்லியம்-கேட், ஹாரி-மேகன் தம்பதி!

Pitbull: தொடரும் ’பிட்புல்’ இன நாய்களின் கொடூர தாக்குதல்... ஆபத்தான நாய் இனங்களுக்கு தடை விதிக்க பீட்டா அழுத்தம்...

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Murugan Temple Theft CCTV | மருதமலை கோவிலில் திருட்டு!சாமியார் வேடத்தில் வந்த திருடன்TVK Leader Vijay Next Plan: நல்ல நேரம் குறிச்சாச்சு.. Operation 234! ஆட்டத்தை தொடங்கும் விஜய்!CV Shanmugam: அமித்ஷா - சி.வி.சண்முகம் சந்திப்பு.. வக்பு சட்டத்துக்கு ஆதரவா? அதிர்ச்சியில் எடப்பாடிஓசி டிக்கெட் கேட்ட கிரிக்கெட் சங்கம் காவ்யா மாறனுக்கு மிரட்டல்! HOME GROUND-ஐ மாற்றும் SRH?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
” என் பெயர் ஸ்டாலின்” அதிர்ந்த அரங்கம்..கட்சி மாற கட்டாயப்படுத்துறீங்க- சிபிஎம் மாநாட்டில் சூளுரை
"முஸ்லிம்கள் மீதான உளவியல் தாக்குதல்" பாஜகவுக்கு எதிராக பொங்கி எழுந்த தவெக விஜய்
Reciprocal Tariffs: பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
பரஸ்பர வரி-ன்னா என்ன.? எந்தெந்த நாட்டுக்கு எவ்வளவு.? ட்ரம்ப் விதிச்ச வரி பத்தி தெரிஞ்சுக்கோங்க...
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
மாணவர்களே… 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் மாற்றமா? ஏப்.7 தேர்வு ஒத்திவைப்பு- ஏன்? மறுதேர்வு எப்போது?
World Richest Person: உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
உலக பணக்காரர்.. மீண்டும் தட்டித் தூக்கிய எலான் மஸ்க்.. அம்பானி, அதானிக்கு எந்த இடம் தெரியுமா.?
Gold Rate 3rd April: வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
வெளுத்து வாங்கும் தங்கத்தின் விலை.. மீண்டும் மீண்டும் புதிய உச்சம்.. இன்று எவ்வளவு தெரியுமா.?
Nithyananda Alive: “ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
“ஆரோக்கியமாக ஆனந்தமாக இருக்கிறேன்“ நேரலையில் வந்து புரளிகளை உடைத்த நித்யானந்தா...
Chennai Weather: சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
சென்னை மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்திய காலை மழை.. 20 மாவட்டங்களில் தொடர வாய்ப்பு...
Embed widget