மேலும் அறிய

Queen Elizabeth II Funeral: ராணியின் இறுதிச்சடங்கு 'ஆபரேஷன் யூனிகார்ன்'.! தயாராகும் அதிகாரிகள்! இறுதி ஊர்வல விவரம்!

ராணி இரண்டாம் எலிசபெத் கோட்டையின் கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இங்கிலாந்து நாட்டின் மகாராணி எலிசபெத் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று உயிரிழந்தார். இதையடுத்து அவரது மறைவிற்கு உலகத் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். உலகின் நீண்டகாலம் ராணியாக ஆட்சி செய்த பெருமைக்குரிய இரண்டாவது நபர் என்ற பெருமைக்கு ராணி எலிசபெத் சொந்தக்காரர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் யூனிகார்ன் :

ஸ்காட்லாந்தின் பால்மோரலில் ராணி இரண்டாம் எலிசபெத் இறந்ததைத் தொடர்ந்து பிரிட்டிஷ் அரசாங்கத்தின் "ஆபரேஷன் யூனிகார்ன்" நடந்து வருகிறது.

ராணியின் மரணம் மற்றும் இறுதிச் சடங்கிற்கு இடையேயான முதல் 10 நாட்களில் நிகழ்வுகளை நிர்வகிக்க இங்கிலாந்து அதிகாரிகள் ”ஆபரேஷன் பிரிட்ஜ்” என பெயர் வைத்திருந்தனர். ஆனால், இங்கிலாந்து ராணி ஸ்காட்லாந்தில் இறந்ததால் தற்போது ”ஆபரேஷன் யூனிகார்ன்” பெயரை மாற்றியுள்ளனர். 

ஆபரேஷன் யூனிகார்ன் என்பது ராணி இரண்டாம் எலிசபெத் இறந்தநாளில் இருந்து அடுத்த 10 நாட்களுக்கு நடைமுறைபடுத்தப்படும் திட்டமாகும். அதன்படி, இன்று மறைந்த இங்கிலாந்து ராணியின் உடல் லண்டனுக்கு திரும்ப இருக்கிறது. தி பொலிட்டிகோ பார்த்த ஆவணங்களின்படி, நேற்று " டி நாள்" என்று அறிவிக்கப்படும், மேலும் இறுதிச் சடங்கிற்கு முதல் நாளுக்கு ஒவ்வொரு நாள் அதாவது 10வது நாள் வரை "D+1," "D+2" என்று குறிப்பிடப்படும்.

பொலிட்டிகோ பார்த்த ஆவணங்களின்படி, அரச குடும்பம் அடுத்ததாக ராணியின் இறுதிச் சடங்கிற்கான திட்டங்களை அறிவிக்கும். ராணி இறந்த பத்து நாட்களுக்குப் பிறகு, புதிதாக நியமிக்கப்பட்ட இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் ஒரு அறிக்கையை வெளியிடும் அரசாங்கத்தின் முதல் உறுப்பினராக இருப்பார்.

பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் மற்ற உறுப்பினர்களின் அறிக்கையைத் தவிர, பிற முக்கிய இடங்களில் துப்பாக்கி முழங்க மரியாதை செலுத்தப்பட இருக்கிறது. அரசு இறுதி சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் நடைபெறும் என்றும், வின்ட்சர் கோட்டையில் உள்ள செயின்ட் ஜார்ஜ் தேவாலயத்தில் பிற அரசாங்க மரியாதைகள் நடைபெறும் என்றும் தெரிகிறது. 

அதன் பிறகு, ராணி இரண்டாம் எலிசபெத் கோட்டையின் கிங் ஜார்ஜ் VI நினைவு தேவாலயத்தில் அடக்கம் செய்யப்படுவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ராணி இரண்டாம் எலிசபெத் :

ராணி இரண்டாம் எலிசபெத் ஏப்ரல் 21, 1926 அன்று லண்டனில் உள்ள மேஃபேரில் உள்ள 17 புருடன் தெருவில் பிறந்தார். விக்டோிய மகாராணி 63 ஆண்டுகள் ராணியாக அலங்கரித்த ராணி மகுடத்தை, ராணி எலிசபெத் 70 ஆண்டுகள் அலங்கரித்துள்ளார். அவர் கடந்த 1947ம் ஆண்டு மறைந்த மன்னர் பிலிப்பை திருமணம் செய்து கொண்டார். புகழ்பெற்ற பிரதமர் வின்ஸ்டன் சர்ச்சில் முதல் தற்போதைய இங்கிலாந்து பிரதமர் லிஸ் ட்ரஸ் வரை சுமார் 15 இங்கிலாந்து பிரதமர்களை மகாராணி எலிசபெத் நியமித்துள்ளார்.

எலிசபத் மகாராணி வரலாறு:

உலகையே உள்ளங்கையில் வைத்து ஆட்சி செய்த பெயர் இங்கிலாந்துக்கு உண்டு. அந்த நாட்டிற்கு 70 ஆண்டுகளாக ராஜ மாதாவாக இருப்பவர் தான் இரண்டாம் எலிசபத் மகாராணி. ஜனநாயகம் தழைத்தோங்கும் காலத்திலும் இங்கிலாந்து ராஜ குடும்பம் மட்டும் வசீகரம் குறையாமல் அப்படியே இருக்கிறது. இதற்கு இரண்டாம் எலிசபத் ராணியின் புரட்சிகளும் காரணம் தான். ராஜா, ராணி மட்டுமே வரி வசூலித்த காலம் போய், அரசாங்கத்திற்கு ராஜ குடும்பம் வரி செலுத்தும் முறையையும் நடைமுறைப்படுத்தினார் இரண்டாம் எலிசபத் ராணி. அதுமட்டுமல்ல தனது மாளிகைக்கு உட்பட்ட பகுதியை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் வந்தபோதும் கூட அதை பொது வாக்கெடுப்பு மூலம் எதிர்கொண்டு சர்வதேச கவனத்தைப் பெற்றார். உணையில் இங்கிலாந்தின் ராணி இரண்டாம் எலிசபத்துக்கு வானளாவிய அதிகாரங்கள் இருந்தும் கூட மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனநாயக ஆட்சிக்கு தலை வணங்கி வாழ்ந்து வருபவர் எலிசபத் ராணி. எல்லோரையும் ஜனநாயகப்படுத்தும் அவரது அணுகுமுறைக்கு ஜனநாயக நாடுகளிலும் வரவேற்பு உண்டு.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

Nirmala Sitharaman  : 2 நிமிட கேள்வி..பங்கம்  செய்த இளைஞர்!ஆடிப்போன நிர்மலா!Karthik kumar  : ”நான் அவன் இல்லை”கண்ணீர் மல்க வீடியோ கார்த்திக் உருக்கம்Savukku Shankar : ”மூக்கு நல்லா தான இருக்கு” நாடகமாடிய சவுக்கு? MEDICAL ரிப்போர்ட்டில் அதிர்ச்சி!Rajinikanth on Vijayakanth | விஜயகாந்த் மாதிரி ஒருத்தர்.. CHANCE-ஏ இல்ல! ரஜினி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
திமுக நிர்வாகி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது ராதிகா சரத்குமார் புகார்! என்ன மேட்டர்?
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
நெல்லை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளித்த வாலிபர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
10th 12th Results 2024: குறைந்த தேர்ச்சி பெற்ற 10, பிளஸ் 2 பள்ளி தலைமை ஆசிரியர்கள் சென்னைக்கு அழைப்பு; கல்வித்துறை அதிரடி
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
Breaking News LIVE: நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்த விவசாயி சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
TVK Party: விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
விஜய் போட்ட உத்தரவு..! களத்தில் இறங்கிய தவெக கட்சியினர்
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
TNGASA Admission 2024: அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர குவியும் விண்ணப்பங்கள்; 3 லட்சத்தைத் தாண்டும் என எதிர்பார்ப்பு!
Deepa Shankar: அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
அடுத்த வேளை சாப்பாட்டுக்கே தவித்த நடிகை தீபா! காலம் கடந்த பிறகு புரிந்த உண்மை!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Accident: அச்சுறுத்தும் செங்கல்பட்டு சாலைகள்! வெறும் 4 மாதத்தில் 541 விபத்து! 154 பேர் உயிரிழப்பு!
Embed widget