மேலும் அறிய

Pakistan: கொடூரம்! 22 பேர் மரணம்! பாகிஸ்தானில் தற்கொலைப் படை தாக்குதலால் பயங்கரம்

பாகிஸ்தான் நாட்டில் தற்கொலைப் படை நடத்திய தாக்குதலால் 22 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டில் அடிக்கடி தீவிரவாத சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. இதனால், அந்த நாட்டு மக்களும், உலக நாடுகளும் கவலை கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், பாகிஸ்தான் நாட்டில் மற்றொரு சோகமான நிகழ்வு அரங்கேறி உள்ளது.

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்:

பாகிஸ்தானில் அமைந்துள்ளது பலூசிஸ்தான். இந்த நகரத்தில் உள்ள கட்டா ரயில்நிலையம். இந்த ரயில் நிலையத்தில் இன்று காலை 9 மணியளவில் திடீரென வெடிகுண்டு வெடித்தது. பயங்கர சத்தத்துடன் வெடித்த இந்த வெடிகுண்டால் அந்த இடத்தில் இருந்த பொதுமக்கள் பலரும் தூக்கி வீசப்பட்டனர்.

22 பேர் மரணம்:

இதில், ரயில்வே நிலையத்தில் இருந்த 22 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 50க்கும் மேற்பட்டோர் இந்த தாக்குதலில் காயம் அடைந்துள்ளனர். போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலைப்படை தாக்குதல் என்று தெரியவந்துள்ளது.

வழக்கமாக அந்த நேரத்தில் கட்டா ரயில் நிலையத்தில் இருந்து ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டுச் செல்வது வழக்கம். ஆனால், பெஷாவர் நோக்கிச் செல்லும் அந்த ரயில் இன்று அந்த நேரத்திற்கு வரவில்லை. இந்த வெடிகுண்டு தாக்குதல் ரயில் நிலையத்தில் உள்ள முன்பதிவு அலுவலகத்தில் நடந்தது. அந்த நேரத்தில் ரயில் வந்திருந்தால் உயிரிழப்பு இன்னும் அதிகரித்திருக்கக்கூடும். ரயில் வருவதை கணக்கிட்டே இந்த தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதிகாரிகள் விசாரணை:

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த அந்த நாட்டு மீட்பு படையினர் மற்றும் போலீசார் காயம் அடைந்தவர்களை மீட்டு உடனடியாக சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர். மேலும், உயிரிழந்தவர்களின் சடலங்களை கைப்பற்றி அடையாளம் காணும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவம் நிகழ்ந்தபோது ரயில் நிலையத்தில் 100க்கும் மேற்பட்ட மக்கள் இருந்தனர். குண்டுவெடிப்பு சம்பவம் நடைபெற்ற கட்டா நகரம் பலூசிஸ்தான் மாகாணத்தின் தலைநகரம் என்பதால் இங்கு எப்போதும் மக்கள் கூட்டம் அதிகளவு காணப்படுவது வழக்கம் ஆகும். மக்கள் ரயில்களுக்காக காத்திருக்கும் இடத்தில் இந்த சம்பவம் அரங்கேறியிருக்கும் தருணத்தின்போது தண்டவாளத்திலும் வேறு ரயில்கள் இல்லாததால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கவில்லை.

உயிரிழப்பு அதிகரிக்கும் அபாயம்:

காயமடைந்த பயணிகளில் சிலரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கும் என்று கருதப்படுகிறது. இந்த நிலையில், வெடிகுண்டு சம்பவம் நடந்த இந்த இடத்தில் மோப்பநாய்களுடன்  வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தி வருகின்றனர். ஆதாரங்களின் அடிப்படையில் அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”ஷாருக்கானுக்கு தேசிய விருது ஒரு நியாயம் வேண்டாமா?”கொந்தளித்த நடிகை ஊர்வசி | Urvashi On  National Awards
காலியாகி கிடக்கும் கிராமம் ஒற்றை ஆளாய் நிற்கும் தாத்தா நாட்டாகுடியின் கண்ணீர் கதை | Sivagangai News
மோடி- துரை வைகோ சந்திப்பு! ஷாக்கான திமுகவினர்! காய் நகர்த்தும் பாஜக
TEA குடித்த டிரைவர் தற்கொலை முயற்சி விழுப்புரம் பணிமனையில் பரபரப்பு | Villupuram Driver Sucide
மிரட்டினாரா அருண் ஜெட்லி! உளறிய ராகுல் காந்தி? கோபமான மகன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
திருப்பூரில் எஸ்எஸ்ஐ வெட்டி படுகொலை: அதிர்ச்சியில் முதல்வர்! ரூ.1 கோடி நிவாரணம்- 6 தனிப்படைகள் அமைப்பு
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
ADMK: கண்டிப்பா 2 வேணும்... அதிமுக மா.செ.க்களுக்கு எடப்பாடி பழனிசாமி ஆர்டர்!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Anbumani: அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியம் பகல் கனவுதானா?- அன்புமணி கேள்வி!
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
Uttarkashi Floods: இந்தியாவை உலுக்கிய உத்தரகாசி வெள்ளம்: மேகவெடிப்புதான் காரணமா? பேராசை காரணமா?
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
தமிழக கூட்டுறவு வங்கிகளில் 2000 காலி பணியிடங்கள்! விண்ணப்பிக்க கடைசி தேதி நெருங்குது! உடனே விண்ணப்பிங்க!
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
பயங்கரம்.. அதிமுக எம்.எல்.ஏ. தோட்டத்தில் போலீஸ் எஸ்ஐ வெட்டிக்கொலை - திருப்பூரில் கொடூரம்
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில்  இதுவரை
Tamilnadu Roundup: திருப்பூர் எஸ்ஐ வெட்டிக்கொலை.. நீலகிரி, கோவைக்கு கனமழை எச்சரிக்கை - தமிழ்நாட்டில் இதுவரை
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Uttarkashi Flood: சுனாமி உயர காட்டாற்று வெள்ளம்.. 100 பேர் மாயம் - அதிகரிக்கப்போகும் மரணம் - உத்தரகாசியில் பேரழிவு
Embed widget