மேலும் அறிய

Pakistan blasphemy Lynching: புனித நூலை எரித்தாரா? கொடூரர்களாக மாறிய கும்பல்.. கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட நபர்! பாக்., சம்பவம்!!

கும்பல் வன்முறையை சிறிதளவும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்தின் ஆட்சிதான் நமக்கு பிரதானம். அதில் எந்த சமரசத்திற்கு இடமில்லை

பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணம் கனேவால் மாவட்டத்தில் தெய்வ நிந்தனை (Blapshemy) என்ற பெயரில் நடுத்தர வயது மனிதரை கும்பல் வன்முறையாளர்கள் அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த கும்பல் வன்முறை சம்பவத்துக்குப் பிரதமர் இம்ரான் கான் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றனர். 

படுகொலை செய்யப்பட்ட நபர்,  மசூதியில் உள்ள இசுலாத்தின் புனித நூலை சேதப்படுத்தி எரித்ததாக கூறப்படுகிது. உயிரிழந்தவரின் பெயர் 'முஸ்தாக்' என்று அறியப்படுகிறது.         

பஞ்சாப் மாகாணத்தின் கனேவால் மாவட்டத்தில் உள்ள ஜங்கிள் தேரா கிராமத்தில் உள்ள மசூதியின் அறங்காவலர் மியான் முகமது ரம்சான் இதுகுறித்து Associated Press என்ற செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், "மசூதிக்குள் புகை கசிந்ததைப் பார்த்து முதலில் அங்கு சென்று பார்த்தேன். அப்போது, நடுத்தர வயது மிக்க நபர் ஒருவர், புனித நூலை எரித்துக் கொண்டிருந்தார். பிறகு, மேலுமொரு புனித நூலை எரிக்கத் தொடங்கினார். இதைத் தடுப்பதற்காக கூச்சலிட்டேன். உடனடியாக, உள்ளூர் மக்கள் திரண்டனர்" என்று தெரிவித்தார். 


Pakistan blasphemy Lynching: புனித நூலை எரித்தாரா? கொடூரர்களாக மாறிய கும்பல்.. கல்லால் அடித்துக் கொல்லப்பட்ட நபர்! பாக்., சம்பவம்!!

 

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பஞ்சாப் காவல்துறை அதிகாரிகள், கும்பல் வன்முறையிலிருந்து பாதுகாக்க முஸ்தாக்கை  முறையாக கைது செய்ததாக கூறப்படுகிறது. இருப்பினும், உணர்ச்சிக் கொதிப்பு நிலையில் இருந்த வன்முறையாளர்கள், காவல்துறையிடம் இருந்து முஸ்தாக்கை இழுத்து, திட்டமிட்ட வன்முறை செயல்களைக் கட்டவிழித்து விட்டுள்ளனர். நாலாபுறத்திலும் இருந்து கல்லால் அடித்துள்ளனர். இந்த கொடூர தாக்குதலில் முஸ்தாக் உயிரிழந்தார். கொடூரத்தின் உச்சமாக இறந்தவரின் உடலை கும்பல் வன்முறையாளர்கள் அங்குள்ள மரத்தில் தூக்கு மாட்டி தொங்கவிட்டுள்ளனர். 

இந்த கொடூரமான சம்பவத்திற்கு பல்வேறு தரப்பினரும் தங்களது கண்டனங்களை பதிவிட்டு வருகின்றனர்.

இது குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது ட்விட்டரில், " கும்பல் வன்முறையை சிறிதளவும் கூட ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்தின் ஆட்சிதான் நமக்கு பிரதானம். அதில் எந்த சமரசத்திற்கு இடமில்லை. சட்டத்தைக் கையில் எடுத்துக் கொள்ள யாரும் அனுமதிக்கப்படக் கூடாது. குற்றவாளிகள் மீதும், குற்றத்தை தடுப்பதில் தோல்வியுற்ற காவல்துறை அதிகாரிகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை குறித்து பஞ்சாப் மாகாண காவல்துறை ஆணையர் விரைவில் அறிக்கை சமர்பிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது" என்று தெரிவித்தார்.       

 

 

பாகிஸ்தானில் மதநிந்தனை (Blapshemy) என்ற பெயரில் அவ்வப்போது இத்தகைய கொடூர சமபவங்கள் நடைபெற்று வருகிறது. முன்னதாக, பஞ்சாப் மாகாணம் சியல்கோட் மாவட்டத்தில், விளையாட்டு உபகரண தொழிற்சாலை ஒன்றில் மேலாளராக பணியாற்றி வந்த இலங்கை பிரஜையான தியவதன மத நிந்தனை என்ற பெயரில் பொது வெளியில் வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.  

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget