மேலும் அறிய

Pakistan Vs Afghanistan: மீண்டும் வாலாட்டும் பாகிஸ்தான்; ஆப்கானிஸ்தான் மீது நேரடி போர்; பாக். அமைச்சர் பகிரங்க எச்சரிக்கை

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே அமைதிப் பேச்சுவாத்தையின் இரண்டாம் சுற்று நடைபெற்றுவரும் நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தார், நேரடி போர் தொடுப்போம் என பாகிஸ்தான் அமைச்சர் எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே சமீபத்தில் எல்லையில் மோதல் வெடித்தது. இதில் இரண்டு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்ட நிலையில், முதல் சுற்று பேச்சுவார்த்தையில் போர்நிறுத்தம் ஏற்பட்டு, தற்போது இரண்டாம் சுற்று பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால், நேரடி போர் நடத்த வேண்டியிருக்கும் என பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் மோதல் ; முதல் கட்ட போர் நிறுத்தம்

சமீபத்தில், பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே எல்லையில் ஏற்பட்ட மோதலில், இரு தரப்பிலும் உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதையடுத்து, அந்த மோதலை நிறுத்த, கத்தார் மற்றும் துருக்கி தலையிட்டு, மத்தியஸ்தம் செய்தன. அதற்காக தோஹாவில் நடைபெற்ற முதல் சுற்று பேச்சுவார்த்தையில், கடந்த 19-ம் தேதி  பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை

இந்த நிலையில், பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் இடையே, துருக்கியின் இஸ்தான்புலில் நேற்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் தொடங்கின. இந்த அமைதிப் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தான் தரப்பில் அந்நாட்டு உள்துறை துணை அமைச்சர் ரஹ்மத்துல்லா முஜிப் தலைமையிலான குழு பங்கேற்றுள்ளது. பாகிஸ்தான் தரப்பில் இரண்டு பாதுகாப்பு அதிகாரிகள் கொண்ட குழு பங்கேற்றுள்ளது. இந்த பேச்சுவார்த்தையின் முதல் நாளில் எந்த உடன்பாடும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், இஸ்தான்புலில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தையில், ஆப்கானிஸ்தானுடன் எந்த உடன்பாடும் எட்டப்படாவிட்டால், பாகிஸ்தான் வெளிப்படயான போரை தொடங்கும் என்றும் தங்களுக்கு அதைத் தவிர வேறு வழியில்லை என்றும் பாகிஸ்தான் பாதுகாப்புத் துறை அமைச்சர் கவாஜா ஆசிஃப் தெரிவித்துள்ளார். ஆனாலும், அவர்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்பதை தான் அறிவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேற்பார்வை குழுவை விரும்பும் பாகிஸ்தான்

பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் இடையேயான மோதல் தொடர்பாக, ஒரு அமைப்பு மேற்பார்வையிடுவதை விரும்புகிறது பாகிஸ்தான். அதன்படி, இரு நாடுகளும் அமைதி ஒப்பந்த விதிமுறைகளை சரியாக பின்பற்றுகிறதா என்பதை கண்காணிக்க, துருக்கி மற்றும் கத்தார் நாடுகளின் இணைத் தலைமையின் கீழ் ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதே பாகிஸ்தானின் எண்ணமாக இருப்பதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் தான், தற்போது 2-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் வேளையில், பாகிஸ்தான் அமைச்சரின் பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

 

தலைப்பு செய்திகள்

Trump Warns Iran: “இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
“இனி கப்பல தாக்குனா, டெஹ்ரான்ல பாலம், மின் நிலையங்கள் காலி“ - ஈரானுக்கு ட்ரம்ப் கடும் வார்னிங்
Trump Tariff Vs India: திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
திடீரென ட்ரம்ப் விதித்த 200% வரி; கடுமையான பாதிப்பை சந்திக்கப் போகும் இந்தியா; என்ன காரணம்.?
US Iran War: என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
என்னது, ஈரான் போர்னால அமெரிக்கா கிட்ட ஏவுகணை காலியாயிடுச்சா.! சொல்லியிருக்கறது யார் தெரியுமா.?
Iran Starts Nuclear Program: தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்
தலைக்கு தில்ல பாத்தியா.! அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கும் ஈரான்.? இஸ்ரேல் பரபரப்பு தகவல்

வீடியோ

SFI vs Police : அனுமதி இன்றி நுழைந்த SFI “REMAND பண்ணிடுவேன்” மாணவர்கள் VS போலீஸ்
CJI on CJP Protest : டெல்லி மாணவர்கள் தடியடி”எங்களுக்கு டைம் இல்ல” விசாரிக்க மறுத்த தலைமை நீதிபதி
Kangana Ranaut | ”ஐயோ.. பயந்துட்டேன்! விட்டா எங்கள அடிச்சிருப்பாங்க”போராட்டக்காரர்களை திட்டிய கங்கனா
Mallikarjun Kharge | சம்பவம் செய்த கார்கே! சைகை காட்டிய சோனியா! ”ஏய் உட்காரு.. உட்காரு”
Vanni Arasu Slams DMK :”எலும்பு எல்லாருக்கும் இருக்குஞாபகம் வச்சுக்கோங்க” இறங்கி அடித்த வன்னி அரசு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Bengaluru Expressway: சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
சென்னை டூ பெங்களூரு, 263KM நீளம், 7 தொழிற்சாலை மையங்களை இணைக்கும் திட்டம் - இனி 3 மணி நேரமே
JanaNayagan Collection: முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
முதல் நாளே ரூ.100 கோடி வசூல் - கல்லா கட்டும் CM விஜயின் ஜனநாயகன் - வீக் எண்ட் எப்படி?
”சீமான்னா யாரு”
”சீமான்னா யாரு” "அதெல்லாம் வேணாம்னு நீங்க தூக்கி எறிஞ்சது”- அமைச்சரின் அடுத்தடுத்து சர்ச்சை பேச்சு- விளாசிய நெட்டிசன்கள்
Cauvery Water: ‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
‘தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது‘ - கைவிரித்த கர்நாடகா.! காவிரி ஆணைய கூட்டத்தில் கூறிய காரணம் என்ன.?
Annamalai Vs BJP: “மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
“மாணவர்களே எச்சரிக்கையா இருங்க“.! நீட் போராட்டம்; மத்திய பாஜக அரசை பொளந்து கட்டிய அண்ணாமலை
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
டிஎன்பிஎஸ்சி காலிப்பணியிடங்கள்: முதல்வர் அலுவலகத்தில் ஆலோசனை, பட்ஜெட்டில் வெளியாகிறது அறிவிப்பு!
Tasmac employees : டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
டாஸ்மாக் ஊழியர்களுக்கு அடுத்த ஜாக்பாட்.! நீண்ட நாள் எதிர்பார்த்த அறிவிப்பு வந்தாச்சு- அரசாணை இதோ..
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Tamil Nadu Top News: 'இன்றைய 5 முக்கிய செய்திகள்’ இதை தெரிந்துகொண்டாலே போதும்..!
Embed widget