மேலும் அறிய

Pakistan floods: பாகிஸ்தானில் வெள்ளத்தால் படாதபாடு படும் மக்கள்.. பசியால் உயிரிழந்த 6 வயது சிறுமி..!

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் சுக்கூர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

பாகிஸ்தான் சிந்து மாகாணத்தின் சுக்கூர் நகரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 6 வயது சிறுமி பசியால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

கடந்த 10 ஆண்டுகளில் ஏற்பட்ட மிக மோசமான பருவமழையால் பாகிஸ்தானின் பாதி நகரங்கள் வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டுள்ளது. இதுவரை 1,325 மனித உயிர்கள் மற்றும் 10 லட்சம் கால்நடைகள் பலியாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும்,  ஆயிரக்கணக்கான வீடுகள் மற்றும் லட்சக்கணக்கான ஏக்கர் பயிர்களை இந்த கனமழை மற்றும் வெள்ளம் சேதப்படுத்தியுள்ளது. 

இந்த நிலையில், பாகிஸ்தானின் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாகாணத்தில் சிந்து மாகாணம். இந்த மாகாணத்தில் உள்ள பத்னி என்ற பகுதியில் பாதிக்கப்பட்ட சுமார் 200க்கு மேற்பட்ட குடும்பங்கள் பத்னி தேசிய நெடுஞ்சாலையில் பகுதியில் உள்ள தற்காலிக பாதுகாப்பு மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். இந்த மோசமான சூழ்நிலையில், நிவாரண உதவிகள் கிடைக்காமல் தற்காலிக மையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்த ஆறு வயது சிறுமி பட்டினி மற்றும் நோயால் இறந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு தங்க வைக்கப்பட்டிருந்த மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள் தெரிவிக்கையில் "எங்களுக்கு உணவு மற்றும் பிற நிவாரண பொருட்களை சரியான நேரத்தில் வழங்காததால் சிறுமி உயிரிழந்தார். அதிகாரிகள் தரவு சேகரிக்க மட்டுமே வந்தனர். வந்த இருவரும் உணவு, கூடாரங்கள், கொசு வலைகள் மற்றும் பிற தேவையான பொருட்கள் போன்ற எந்த நிவாரணப் பொருட்களையும் வழங்கவில்லை. இதனால் பட்டினியால் வாடும் எங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்கவும் முடியவில்லை. எங்களின் குடும்பங்களை நோய்களிலிருந்து பாதுகாக்கவும் முடியவில்லை" என தெரிவித்தனர். 

உயிரிழந்த சிறுமியின் தந்தை காலித் கோசோ கூறும்போது, ”எங்களது குழந்தை பசியால் தவித்தபோது, ரோரி நகரில் உள்ள முக்தியார்கர் அலுவலகத்திற்கு உதவி கேட்டு சென்றோம். ஆனால் அவர்கள் எங்களுக்கு உணவோ, தங்குமிடமோ வழங்கவில்லை. இறுதியில் பசி மற்றும் நோயால் எனது குழந்தை உயிரிழந்துவிட்டாள்” என தெரிவித்தார். 

சிறுமியின் மரணம் குறித்த செய்தி பரவியதும், உள்ளூர் மக்கள் குடும்பத்தை அடக்கம் செய்ய உதவியதுடன், மழையால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் பைகளை வழங்கியுள்ளனர். மழையால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து அவர்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்குமாறு சிந்து உயர்நீதிமன்றத்தின் சுக்கூர் பெஞ்ச் நிர்வாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இருப்பினும், நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் அலட்சியம் செய்ததாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர். 

2010ல் மழையினால் ஏற்பட்ட சேதங்கள் மற்றும் உயிரிழப்புகளை விட இந்த ஆண்டு திடீர் வெள்ளத்தால் ஏற்பட்ட அழிவுகள் மிக அதிகம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.  தென்மேற்கு பலுசிஸ்தான், சிந்து, தெற்கு பஞ்சாப் மற்றும் வடக்குப் பகுதிகள் ஆயிரக்கணக்கான மக்கள் உண்ண உணவு மற்றும் தங்குமிடம் இல்லாமல் தவித்து வருவதாகவும் தெரிகிறது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: அரசியலமைப்பில் இருந்தே மதச்சார்பின்மையை நீக்க பாஜக துடிக்கிறது - முதலமைச்சர் பகிரங்க குற்றச்சாட்டு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
MK Stalin: திமுகதான் சிறுபான்மையினர் நலனில் அக்கறை கொண்ட உண்மையான இயக்கம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
திமுக ஆட்சியில் சிறுபான்மையின மக்களுக்கு செய்தது என்னென்ன? பட்டியலிட்ட முதலமைச்சர்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
Seeman on Vijay: என் தம்பி விஜய்க்கு ஒரு எதிரி... ஆனா எனக்கு! டிவிஸ்ட் வைத்து பேசிய சீமான்
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
DMDK: திமுகவா? அதிமுகவா? பிரேமலதாவின் நிபந்தனை இதுதான் - தேமுதிக ஸ்கெட்ச்!
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
"அந்தரத்தில் தொங்கிய சொகுசு பேருந்து! விக்கிரவாண்டியில் நள்ளிரவில் பயங்கர விபத்து - பயணிகள் அதிர்ஷ்டவசமாக மீட்பு!"
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Tata EV Offer: ரூ.4 லட்சம் தள்ளுபடி.. Tata Curvv EV காரின் மைலேஜ், விலையும் இதுதான்!
Embed widget