மேலும் அறிய

North Korea : படங்களை பார்த்ததற்காக பொதுமக்கள் முன்பு தூக்கிலிடப்பட்ட இரண்டு சிறுவர்கள்? வடகொரியாவில் கொடூரம்..!

ஹைசன் விமானநிலையத்தில் வைத்து உள்ளூர்வாசிகள் முன்பு இரண்டு சிறார்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர்.

தென் கொரிய படங்களை பார்த்ததற்காக வட கொரியாவில்  இரண்டு சிறார்கள் பொது மக்கள் முன்பு தூக்கிலிடப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தூக்கிலிடப்பட்ட சிறார்களுக்கு வயது 16 முதல் 17 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஹைசன் விமானநிலையத்தில் வைத்து உள்ளூர்வாசிகள் முன்பு இரண்டு சிறார்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்திருந்தாலும் இதுகுறித்த தகவல் கடந்த வாரமே கசிந்துள்ளது. தென் கொரிய, வட கொரிய நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது தொடர்பாக The Mirror வெளியிட்டுள்ள செய்தியில், "பதின்வயது மாணவர்களை பொதுமக்கள் முன்னிலையில் வைத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து, உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.

தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை பார்ப்பவர்களுக்கும் விநியோகம் செய்பவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.

கடும் தண்டனைகளுக்கும் விநோதமான உத்தரவுகளுக்கும் பெயர் போனது வட கொரியா. அந்த வகையில், "bomb", "gun" மற்றும் "satellite" போன்ற தேசபக்தி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட  வட கொரிய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், மென்மையான பெயர்களை வைக்க அரசு கட்டுப்பாடு வதித்தது.

தென் கொரியாவைப் போலவே, ஏ ரை (அன்பானவர்), சு மி (சூப்பர் அழகு) போன்ற அன்பான பெயர்களைப் குழந்தைகளுக்கு சூட்ட வட கொரியாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அனுமதித்து வந்தது. ஆனால், தற்போது, இந்த வகை பெயர்களை கொண்ட மக்கள், தங்களின் பெயரை தேசி பக்தி மற்றும் கொள்கை சார்ந்த பெயர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.

பெயரின் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் ஒரே மாறியாக இருக்கும் வகையிலான பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என சர்ச்சைகளுக்கு பெயர் போன வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இதை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.

 

பெயரின் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் ஒரே மாறியாக இல்லாத பெயர்கள் சமதர்மத்திற்கு எதிரான பெயர்கள் என கிம் ஜாங் உன் நம்புவதாக கூறப்படுகிறது. அதிபரின் புதிய உத்தரவு குறித்து பேசிய வட கொரியவாசி, "அரசு தரப்பில் பெயர் மாற்றம் செய்ய அதிகாரிகள் வற்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 

இறுதியில் மெய் எழுத்துக்கள் இல்லாத அனைத்துப் பெயர்களையும் திருத்தும்படியான அறிவிப்புகள் குடியிருப்பாளர்களின் கூட்டங்களில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து வழங்கப்பட்டன.

பெயரின் இறுதியில் மெய்யெழுத்து இல்லாத பெயர்களைக் கொண்டவர்கள், புரட்சிகர கொள்கைக்கு ஏற்ப தங்கள் பெயருக்கு அரசியல் அர்த்தங்களைச் சேர்க்க இந்த ஆண்டு இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

G.O.A.T Release Issue | G.O.A.T ரிலீஸில் சிக்கல்! அப்செட்டில் விஜய் FANSKN Nehru Lalkudi MLA | ADMK Vikravandi Bypoll | அதிமுக புறக்கணிப்பு ஏன்? யாருக்கு லாபம்? விக்கிரவாண்டி இடைத்தேர்தல்ADMK Boycotts Vikravandi By election | விக்கிரவாண்டி இடைத்தேர்தல்அதிமுக புறக்கணிப்பு!EPS அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi TN Visit: பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
பிரதமர் மோடியின் தமிழக வருகை ஒத்திவைப்பு! காரணம் என்ன?
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Breaking News LIVE: நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்: போர்க்கொடி தூக்கிய உ.பி முன்னாள் முதல்வர்
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
Asha Shobana: 33 வயதில் இந்திய அணிக்காக அறிமுகமான ஆர்.சி.பி. வீராங்கனை - ரசிகர்கள் வாழ்த்து
STSS:
"48 மணி நேரத்தில் மரணம்" - ஜப்பானில் பரவும் பாக்டீரியா.. உலகை அலறவிடும் மர்ம நோய்!
TN 12th Hall Ticket: பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
பிளஸ் 2 துணைத் தேர்வு: ஜூன் 19-ல் ஹால்டிக்கெட் வெளியீடு - பெறுவது எப்படி?
Sasikala:
Sasikala: "என்னுடைய என்ட்ரி ஆரம்பம்" பட்டிதொட்டியெங்கும் சென்று மக்களை சந்திப்பேன் - சசிகலா ஆவேசம்
Vikravandi Bypoll: அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
அதிமுக வழியில் தேமுதிக.. விக்கிரவாண்டி இடைத்தேர்தல் புறக்கணிப்பு!
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
ஆம்புலன்ஸ் கூட போக முடியாது: ரூ.7 லட்சம் செலவில் சாலையை விரிவாக்கம் செய்து கொண்ட பொதுமக்கள்
Embed widget