Nobel Prize 2025: வேதியியலுக்கான நோபல் பரிசு...தட்டி சென்ற மூவர்! யார் தெரியுமா?
Nobel Prize 2025 in Chemistry: 2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம் யாகி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.

Nobel Prize 2025 in Chemistry: 2025 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசு சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம் யாகி ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது.
வேதியியலுக்கான நோபல் பரிசு:
நடப்பு ஆண்டின் நோபல் பரிசு தொடர்ந்து அறிவிக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அந்த வகையில் இன்று (அக்டோபர் 8) வேதியியலுக்கான நோபல் பரிசு அறிவிக்க்கப்பட்டுள்ளது. அந்த வகையில் 3 பேருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
யார் அந்த மூன்று பேர்?
இது தொடர்பாக நோபல் பரிசு எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ”ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாடமி, 2025 ஆம் ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை "உலோக-கரிம கட்டமைப்புகளின் வளர்ச்சிக்காக" சுசுமு கிடகாவா, ரிச்சர்ட் ராப்சன் மற்றும் ஒமர் எம். யாகி ஆகியோருக்கு வழங்க முடிவு செய்துள்ளது" என்று கூறப்பட்டுள்ளது.
BREAKING NEWS
— The Nobel Prize (@NobelPrize) October 8, 2025
The Royal Swedish Academy of Sciences has decided to award the 2025 #NobelPrize in Chemistry to Susumu Kitagawa, Richard Robson and Omar M. Yaghi “for the development of metal–organic frameworks.” pic.twitter.com/IRrV57ObD6
ஜப்பானின் கியோட்டோ பல்கலைக்கழகத்தில் ஹைட்ரோகார்பன் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்ற கிடகாவா, முன்னதாக ஹம்போல்ட் ஆராய்ச்சி பரிசு (2008) மற்றும் டி ஜென்னெஸ் பரிசு போன்ற விருதுகளை வென்றுள்ளார். தற்போது கியோட்டோ பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார்.
இங்கிலாந்தில் பிறந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் வேதியியல் பயின்ற ராப்சன், இப்போது மெல்போர்ன் பல்கலைக்கழகத்தில் கற்பிக்கிறார்.
அதேபோல், ஓமர் யாகி ஜோர்டானின் அம்மானில் பிறந்தவர். மெரிக்காவின் இல்லினாய்ஸ் அர்பானா-சாம்பெய்ன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இப்போது அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் கற்பித்து வருகிறார்.





















