மேலும் அறிய

இலங்கைக்கு விடிவு பிறக்குமா?.. பரபரப்பான சூழ்நிலையில் கூடும் நாடாளுமன்றம்..

இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுவதையடுத்து, ராஜபக்‌ஷே குடும்பத்தினர் தலைமையிலான ஆட்சி கவிழுமா? அல்லது இடைக்கால அரசு அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையில் பரபரப்பான சூழ்நிலையில் நாடாளுமன்றம் இன்று கூடுவதையடுத்து, ராஜபக்‌ஷே குடும்பத்தினர் தலைமையிலான ஆட்சி கவிழுமா? அல்லது இடைக்கால அரசு அமையுமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இலங்கையில் பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடைந்ததையடுத்து பொதுமக்கள் வீதிக்கு வந்து தொடர் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர். அவர்களது ஒற்றைக் கோரிக்கை ராஜபக்சே குடும்பத்தினர் பதவிகளில் இருந்து விலக வேண்டும் என்பது தான். விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரின்போது இனவாதத்திற்கு ஆதரவாக நின்ற சிங்களர்கள் இப்போது அதே தமிழர்களுடன் கை கோர்த்து ராஜபக்சேவுக்கு எதிராக போர்க்கொடி தூக்கியிருக்கின்றனர். காரணம் இலங்கை இந்த நிலமைக்கு வந்ததற்கு முழு காரணமும் அவர்கள் தான் என்பதால் தான். இலங்கையின் பெரும்பான்மை வருமானம் சுற்றுலா, தேயிலை உற்பத்தி, நெசவு ஆகியவை மூலமாக தான் கிடைத்துக்கொண்டிருந்தன. இலங்கையின் தொழில்வளத்தில் பெரும்பான்மையை ராஜபக்‌ஷே குடும்பத்தினரே ஆக்கிரமித்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அரசியல் மற்றும் அரச பதவிகளிலும் ராஜபக்சே குடும்பத்தினரின் ஆதிக்கம் தான் இப்போதும் இருக்கிறது. மகிந்த ராஜபக்‌ஷேவின் தந்தை டி.ஏ.ராஜபக்சே, பிரதமர்  மகிந்த ராஜபக்‌சே, அவரது தம்பிகள் கோத்தபய ராஜபக்சே, பசில் ராஜபக்‌ஷே, சமல் ராஜபக்சே, அவரது மகன் நமல் ராஜபக்சே ஆகியோர் உயர் பதவிகளில் இருக்கின்றனர். இவர்களது குடும்பத்தினர் நிர்வாகப்பொறுப்புகளில் இருக்கின்றனர். சுமார் அரைநூற்றாண்டுக்கும் மேல் இலங்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது ராஜபக்சே குடும்பம் தான். மோசமான முடிவுகள் மற்றும் உலக நாடுகளிடம் கடன்வாங்கியது போன்ற காரணங்களால் இலங்கையின் பணமதிப்பு கடுமையாக வீழ்ந்து பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.


இலங்கைக்கு விடிவு பிறக்குமா?.. பரபரப்பான சூழ்நிலையில் கூடும் நாடாளுமன்றம்..

இலங்கைக்கு தற்போதைய மதிப்பில் சுமார் 51 பில்லியன் டாலர் அளவுக்கு வெளிநாட்டுக் கடன் இருக்கலாம் என்று கூறப்படுகிறது. இந்த கடனில் சுமார் 7 பில்லியன் டாலர்களை இந்த ஆண்டே செலுத்த வேண்டிய நிலையில் அதை செலுத்த முடியாத நிலையில் இருக்கிறது இலங்கை. தற்போதைய  கையிருப்பில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டாலர்களே இருப்பதால் இலங்கையின் பொருளாதார நிலை மேலும் வீழ்ச்சியடையும். நிலமை இன்னும் மோசமாகும் என்று கூறப்படுகிறது.

கடுமையான விலைவாசி உயர்வு இலங்கை பணக்காரர்களைக் கூட பிச்சைக்காரர்களாக்கும் நிலைக்குத் தள்ளியிருக்கிறது. இதன் வெளிப்பாடு தான், எதிர்கட்சிகள், பொதுமக்கள், புத்தத்துறவிகள், மாணவர்கள், பொதுமக்கள் என்று ஒட்டுமொத்த இலங்கையும் போராட்டத்தை தொடர்ந்து நடத்திக் கொண்டிருக்கின்றன. 


இலங்கைக்கு விடிவு பிறக்குமா?.. பரபரப்பான சூழ்நிலையில் கூடும் நாடாளுமன்றம்..

இந்த நிலையில் தான், ஏப்ரல் 30ம் தேதிக்குள் ராஜபக்சே குடும்பத்தினர் பதவி விலக வேண்டும். இல்லையென்றால் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்க்கட்சிகள் கூறியிருந்தனர். அதற்கு முன்னதாகவே அனைத்துக்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தைக் கூட்டிய கோத்தபய ராஜபக்சே, பிரதமர் ராஜபக்சேவுக்கு பதிலாக புதிய பிரதமரை நியமிக்க ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் தான் 225 எம்பிக்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்கள் ஆதரவுடன் பெரும்பான்மையக் காட்டும் கட்சியிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைப்பதாக கோத்தபய ராஜபக்சே சவால் விடுத்துள்ளார். இந்த சவாலை எதிர்க்கட்சிகளும் ஏற்றுள்ளன.

இதன்காரணமாக பழைய சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தனது பதவியை ராஜினாமா செய்தார். புதிய சபாநாயகராக அனுர பிரியதர்ஷன யாப்பா அல்லது திலான் பெரேரா ஆகிய இருவரில் ஒருவர் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. புதிய சபாநாயகர் நியமனத்திற்குப் பிறகு, பிரதமர் மகிந்த ராஜபக்சே அரசு மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொண்டுவருவார்.


இலங்கைக்கு விடிவு பிறக்குமா?.. பரபரப்பான சூழ்நிலையில் கூடும் நாடாளுமன்றம்..

நம்பிக்கையில்லா தீர்மானத்தில் கோத்தபய தோல்விபெறும் சூழல் வந்தால் அனைத்துக் கட்சிகளும் அடங்கிய இடைக்கால அரசு அமைக்க வாய்ப்பிருப்பதாகக் கூறப்படுகிறது. இடைக்கால அரசு அமைந்தாலோ அல்லது புதிய அரசு அமைந்தாலோ அது தனது தலைமையில் தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார் கோத்தபய ராஜபக்சே. இந்த தீர்மானத்தில் தற்போதைய அரசு தோற்றாலும், இடைக்கால அரசு அமைக்க முடிவெடுக்கப்பட்டாலும் நாடாளுமன்றம் கலைக்கப்படும். அரசு பதவிகளில் ராஜபக்சே குடும்பத்தினர் யாரும் இருக்கக்கூடாது என்று பொதுமக்கள் வலியுறுத்தி வரும் நிலையில், மீண்டும் கோத்தபய ராஜபக்சே தலைமையில் ஆட்சி அமைவது எந்த அளவிற்கு பயன்தரும் என்று தெரியவில்லை என்றும், இலங்கையில் ஆணிவேர் போன்று தங்கள் சாம்ராஜ்யத்தை பதித்துள்ள ராஜபக்சே குடும்பத்தினர் அவ்வளவு எளிதில் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள் என்றும் அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியின் விளைவாக பொதுமக்கள் நடத்தி வரும் பலமாத போராட்டத்திற்கான பலன் என்னவாக இருக்கும் என்று இன்று தெரியவரும்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
ABP Premium

வீடியோ

DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்
Migrant Worker Attack | கஞ்சா போதை, பட்டா கத்தி! வடமாநில நபர் கொடூர தாக்குதல்! சிறுவர்கள் வெறிச்செயல்
Madesh Ravichandran |’’தமிழன அடிமைனு சொல்லுவியா?’’முதலாளியை அலறவிட்ட தமிழர் லண்டனில் மாஸ் சம்பவம்
Puducherry News | ரீல்ஸ் மோகத்தால் விபரீதம்!பாறை இடுக்கில் சிக்கிய பெண்புதுச்சேரியில் பரபரப்பு
Savukku Sankar Release சவுக்கு சங்கர் ஜாமீனில் விடுதலை”எதிர் கருத்து சொன்னாலே கைதா?” Court விமர்சனம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu cabinet meeting: அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
அரசு ஊழியர்களுக்கு ஜனவரி 6ஆம் தேதி வெளியாகிறது குஷியான அறிவிப்பு.! முதலமைச்சர் எடுத்த முக்கிய முடிவு
 EPS ADMK: அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
 அதிமுக ஆட்சி அமைப்பது உறுதி... எந்த கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாது- அடித்து சொல்லும் இபிஎஸ்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
New Year 2026: புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் - எதெல்லாம் செய்யக்கூடாது? காவல்துறை வார்னிங்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Watch Video: அடக்கடவுளே..! மடியில் இருந்த துப்பாக்கி, எழுந்ததும் பாய்ந்த தோட்டா - பறிபோன உயிர் - வீடியோ வைரல்
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Mohammed Shami: ஷமி இல்லாமல் ஒருநாள் உலகக் கோப்பையா?.. கம்பேக்கிற்கு ரெடி - U-டர்ன் போடும் பிசிசிஐ
Linked PAN number with Aadhaar number? பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
பான் கார்டுடன் ஆதார் எண் இணைத்துவிட்டீங்களா.? ஒரு நொடியில் ஈசியா செக் செய்யலாம்- எப்படி தெரியுமா.?
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Santhosh Narayanan: சென்னையில் போதைப்பொருள் நடமாட்டம்.. சந்தோஷ் நாராயணன் பகிரங்க குற்றச்சாட்டு!
Power Sharing : ’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
’ஆட்சியில் பங்கு கேட்டு வராதீர்கள்’ கதவை சாத்திய திமுக – கப்சிப்பான கூட்டணி கட்சிகள்..!
Embed widget