மேலும் அறிய

பொட்டு அம்மானை திட்டியது உண்மை.. சீமானுக்கு கண்டனம் தெரிவித்த ஈழத்தமிழ் அமைப்புகள்..

சீமான் தனது தெளிவானதும் உண்மையானதுமான விளக்கத்தினை, பொதுவெளியில் வழங்கவேண்டும். ஏன் எனில், இவ்விடயம் தமிழீழ உணர்வாளர்களிடமே வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றது

விடுதலைப் புலிகளின் புலனாய்வுத்துறைப் பொறுப்பாளருமாகிய பொட்டம்மான் அவர்கள் குறித்து நாம் தமிழர் சீமான் பேசிய சர்ச்சைக்கு திறந்த மனதுடன் கருத்தினை வெளிப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்று தமிழீழ அமைப்புகள் கோரிக்கை வைத்துள்ளன. 

இதுகுறித்து வெளியிட்ட செய்திக் குறிப்பில்., 

உலகெங்கும் பரவிவாழும் தாய்த் தமிழ் உறவுகளுக்கு வணக்கம்,

சீமான் அவர்கள் பொறுப்புக் கூறவேண்டியது காலத்தின் கட்டாயம் !

இரண்டு வாரங்களுக்கு முன்னர், தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த தளபதியும் தமிழீழ புலனாய்வுத்துறையின் பொறுப்பாளருமாகிய  பொட்டு அம்மான் அவர்களை, கேவலமான வார்த்தைகளால் திட்டியும் தமிழீழ மக்களின் எந்தவொரு உதவியும் தமிழக மண்ணின் அரசியலிற்கு தேவையில்லையென்றும், பேசப்பட்ட ஒலிப்பதிவுக் குரல் பதிவு ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தது. அந்தக்குரல் பதிவு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் பேசியது போல அமைந்திருந்தது. அதனால், ஈழத்திலும் புலத்திலும் மற்றும் தமிழகத்திலும் அனைத்துத் தரப்பு தமிழர்களிடையேயும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியிருந்ததுடன்,  சீமான் அவர்களின் நம்பகத்தன்மை குறித்து சந்தேகக் கேள்விகளும் எழுப்பப்பட்டிருந்தன.

பொட்டு அம்மானை திட்டியது உண்மை.. சீமானுக்கு கண்டனம் தெரிவித்த ஈழத்தமிழ் அமைப்புகள்..

குறிப்பாக, புலத்திலும் தமிழகத்திலும் தமிழ் உணர்வாளர்களிடையே பலத்த சந்தேகங்களை எழுப்பிய இவ்விடயம் முற்றுப் பெறாமல் தொடர்ந்து இரண்டு வார காலமாக பேசு பொருளாகவே உள்ளது. ஊடகவியலாளர்கள் சந்திப்பின் போது தான் இவ்வாறு பேசவில்லையென்று,  சீமான் அவர்கள் மறுப்பு தெரிவித்திருந்தார். ஈழத்தை உண்மையில் நேசித்த ஈழத்தமிழர்கள்,  சீமான் அவர்களை தனிப்பட்ட முறையில் தொடர்பு கொண்டு கேட்ட போதும், தான் அவ்வாறு பேசவில்லையென்று மறுப்பினையே தெரிவித்திருந்தார்.  சீமான் அவர்கள் பொய் சொல்ல வாய்ப்பில்லையென்று, அவர் கூறியதை நம்பி ஆறுதலடைந்திருந்தனர்.

சீமான் அவர்கள் இவ்வாறு மறுப்புத் தெருவித்ததை தொடர்ந்து, எதிர்க்கட்சிகளின் திட்டமிட்ட சதியென்றும் மற்றும் சீமான் அவர்களைப் போன்றே ஒலிப்பதிவை வெளியிட்டு, நாம் தமிழர் கட்சியின் அரசியலை ஒழிப்பதற்கான திராவிடர்களின் சதி முயற்சியென்றும், சமூகவலைத்தளங்களில் கடுமையான கருத்து மோதல்கள் இடம்பெற்றன. சீமான் அவர்களை ஆதரிக்கின்ற சமூக ஊடகங்களும் இதனையே வலியுறுத்தின.

சீமான், பொட்டு அம்மான் குறித்து தவறாக பேசியதாக போலியான குரல் பதிவு செய்து, எதிர் பிரச்சாரம் செய்து தமிழக வாக்காளர்களிடையே பெரிய மாற்றத்தை ஏற்படுத்தலாமென்று எதிர்கட்சிகள் திட்டமிட்டு செயற்படுகின்றனவென்ற வாதத்தில், புலம்பெயர் தமிழர்களுக்கும் தமிழர்களின் கட்டமைப்பு சார் அமைப்புகளுக்கும் தங்களின் நலனுக்காக தமிழகத்திலுள்ள கட்சிகளுடனான முரணை அதிகப்படுத்த நாம் தமிழர் கட்சி முயல்கின்றது என்ற வலுவான சந்தேகம் எழுந்தது. இதனை உணர்ந்து இவ்விடயத்தின் உண்மைத்தன்மையை ஆராய்ந்த போது,  சீமான் அவர்கள் அவ்வாறு பேசிய ஒலிப்பதிவு உண்மையென்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சர்ச்சையில் சிக்கிய குரல்பதிவு, சீமான் அவர்களுடன் தொடர்பில் இருந்த புலம்பெயர்ந்து வாழுகின்ற ஈழத்தமிழர்கள் இருவருக்கு Whatsapp மூலமாக குரல் பதிவாக சீமான் அனுப்பிய செய்தியென்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி இவர் மூலம் முன்னாள் போராளியொருவருக்கு அனுப்பும்படி சீமான் கூறியதாகவும், மேலும் அறியப்பட்டு உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே, வெளியாகியுள்ள சர்சைக்குரிய ஒலிப்பதிவு குரல் குறித்து,  சீமான் தனது தெளிவானதும் உண்மையானதுமான விளக்கத்தினை, பொதுவெளியில் வழங்கவேண்டும். ஏன் எனில், இவ்விடயம் தமிழீழ உணர்வாளர்களிடமே வாத பிரதிவாதங்களை ஏற்படுத்திக் கொண்டேயிருக்கின்றது.

குரல் பதிவு செய்தியினை whatsapp மூலமாக பெற்றுக்கொண்டதாக சொல்லப்படுகின்ற முன்னாள் போராளி மற்றும் இவ்விடயங்களை உண்மையென அறிந்தும் மெளனம் காத்து இது தொடர்பான கருத்துக்களை வெளியிடாமல் அமைதிகாத்து நிற்கின்ற செயலானது, ஈழப்போராட்டத்திற்கும் மாவீரர்களுக்கும் மற்றும் தலைமைக்கும் செய்கின்ற மாபெரும் துரோகமாகவே கருதப்படுகின்றது.

பொட்டு அம்மானை திட்டியது உண்மை.. சீமானுக்கு கண்டனம் தெரிவித்த ஈழத்தமிழ் அமைப்புகள்..

ஈழப் போராட்டத்தினை நேரடியாகவும் மறைமுகவாகவும் பாதிக்கக்கூடிய கருத்துக்களை, சீமான் அவர்கள் வெளிப்படுத்தியபோதும், நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் தடா சந்திரசேகர் அவர்கள், ஈழத்தமிழர்களை இழிவாக பேசியபோதும், தமிழீழ விடுதலை போராட்டத்தினை 70-களில் இருந்து 35 வருடகாலமாக தமிழகத்தில் தாங்கிப்பிடித்து மக்களிடம் ஈழப் போராட்டத்தின் நியாயத்தன்மையினை எடுத்துரைத்து மாபெரும் எழுச்சியினை அக்காலப் பகுதியில் ஏற்படுத்தி, தொடர்ந்தும் ஈழ ஆதரவு நிலைப்பாட்டில் பயணிக்கும் ஈழ உணர்வாளர்களை, இன ரீதியாக மொழிரீதியாக வகைப்படுத்தி துரோகிகளாக்கி ஒதுக்கிய போதும், சிறு கண்டனத்தை கூட வெளிப்படுத்தாமல் கடந்து சென்றதன் விளைவே, இன்று  சீமான் அவர்கள் எதனையும் பேசிவிட்டு கடந்து போகலாமென்ற நம்பிக்கையை அவருக்கு கொடுத்துள்ளது.

அதேவேளையில் மதிப்பிற்குரிய பொட்டம்மான் அவர்கள் குறித்து பேசிய சர்ச்சைக்கு திறந்த மனதுடன் கருத்தினை வெளிப்படுத்தி அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம்.

புலத்தில் இருந்து கண்டனத்தை தெரிவிக்கும் ஈழத்தமிழ் அமைப்புக்கள்:


*தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC).
*அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை(ICET).
*நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் (TGTE).
*பிரித்தானிய தமிழர் பேரவை (BTF).
*கனடியத் தமிழர் பேரவை (CTC).
*உலகத் தமிழர் வரலாற்று மையம்.
*அவுஸ்ரேலியா தமிழர் காங்கிரஸ் (ATC)

தமிழர் இயக்கம் (TM).
தமிழ் இளையோர் அமைப்பு (TYO).
நன்றி.- இவ்வாறு, அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.   

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6491
Active
6861
Recovered
65
Deaths
Last Updated: Mon 9 June, 2025 at 06:46 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

மோடியை திட்டிய ராகுல்! எதிர்த்து நிற்கும் சசி தரூர்! ஷாக்கில் காங்கிரஸ் கட்சியினர்TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on Vairamuthu

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் -  மதுரையில் அமித்ஷா உருக்கம் !
தமிழில் பேச முடியவில்லை என்பதை நினைத்து வருந்துகிறேன் - மதுரையில் அமித்ஷா உருக்கம் !
BJP's South Plan: பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
பாஜக-வின் தெற்கத்தி பிளான்; ஐடியா உடன் வந்த அமித் ஷா - பலிக்குமா தேர்தல் திட்டம்.?
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
TNEA 2025:பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்றம், தரவரிசை பட்டியல்- A- Z அலசல்!
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
மதுரையில் பா.ஜ.க., நிர்வாகிகள் கூட்டத்தில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலை குழம்பியபடி  பாடப்பட்டதால் சர்ச்சை !
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
வட இந்தியாவுக்கு ராமர்.. தமிழ்நாட்டுக்கு முருகர்! பலிக்குமா பா.ஜ.க.வின் கணக்கு?
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
இனி குடையுடனே போங்க.. அடுத்த ஒரு வாரம் சென்னையில் பெய்யப்போகும் மழை! இதுதான் ரிப்போர்ட்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம்  திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
சினிமாவுல அட்ஜெஸ்ட்ஸ்மென்ட் இருக்கா? மனம் திறந்த டூரிஸ்ட் பேமிலி ஹீரோயின்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
Embed widget