மேலும் அறிய

மூன்று வயது குழந்தையை கரடி வளையத்துக்குள் வீசிய கொடூர தாய்! பதறவைக்கும் வீடியோ

மூன்று வயது குழந்தையை பெற்ற தாயே உயிரியல் பூங்காவில் இருந்த கரடி வளையத்துக்குள் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

மூன்று வயது குழந்தையை பெற்ற தாயே உயிரியல் பூங்காவில் இருந்த கரடி வளையத்துக்குள் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த பதைபதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் உள்ளது தாஷ்கன்ட் உயிரியல் பூங்கா. அகண்ட நிலபரப்பைக் கொண்ட இந்தப் பூங்காவில் பல்வேறு உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவிற்கு நேற்று வழக்கம் போல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது கரடிகள் இருக்கும் வளையத்தின் வெளியே நின்றபடி பலரும் கரடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி நின்றிருந்தவர்கள் ஒரு தாய் அவரின் குழந்தையும் இருந்தனர். திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் குழந்தையை தூக்கு கரடி வளையத்துக்குள் வீசிவிடுகிறார். குழந்தையை வீசிவிட்டு சற்றும் சலனமே இல்லாமல் கீழே குதித்து நடையைக் கட்டுகிறார். ஆனால் அவரை பொதுமக்கள் சுற்றி வளைக்க, பூங்கா ஊழியர்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.

ஆனால் நல் வாய்ப்பாக கரடி குழந்தையை நெருங்கவில்லை. ஏதோ தூக்கி வீசப்படுகிறது என்ற அச்சத்தில் கரடி அங்கிருந்து விலகி ஓடிவிடுகிறது. பூங்கா ஊழியர்கள் கூட்டமாக கரடி வளையத்திற்குள் சென்று குழந்தையை தூக்கி வருகின்றனர். அது பெண் குழந்தை.

அந்தக் குழந்தைக்கு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த கொடூரத் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரின் செயலுக்கான பின்னணி இன்னும் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் மீது கொலை முயற்சி பதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகத் தெரிகிறது.

மனநோய்களில் மிகமுற்றிய நோய் தான் ஸ்கீஸோஃப்ரீனியா (Schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு காதில் ஏதோ குரல் கேட்கலாம், கண்ணில் ஏதேனும் உருவம் தென்படலாம். இப்படியான பாதிப்புக்குள்ளான பலரும் தற்கொலை, கொலை செய்திருக்கின்றனர். திடீரென நொடிப் பொழுதில் அவர்களின் காதில் கேட்கும் குரலின் உத்தரவுக்கு இணங்கி இவ்வாறு செய்வதுண்டு. குழந்தைகள் மீதான வன்முறையை நிகழ்த்தும் பலருக்கும் மனச்சிதைவு இருக்க வாய்ப்பிருப்பதாகவே மனநல மருத்துவ உலகு கூறுகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget