மேலும் அறிய

மூன்று வயது குழந்தையை கரடி வளையத்துக்குள் வீசிய கொடூர தாய்! பதறவைக்கும் வீடியோ

மூன்று வயது குழந்தையை பெற்ற தாயே உயிரியல் பூங்காவில் இருந்த கரடி வளையத்துக்குள் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது.

மூன்று வயது குழந்தையை பெற்ற தாயே உயிரியல் பூங்காவில் இருந்த கரடி வளையத்துக்குள் தூக்கி வீசிய கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. அந்த பதைபதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வெளியாகி காண்போரை கதிகலங்க வைத்துள்ளது.

உஸ்பெகிஸ்தான் நாட்டில் தான் இச்சம்பவம் நடந்துள்ளது. உஸ்பெகிஸ்தானின் தாஷ்கன்ட் நகரில் உள்ளது தாஷ்கன்ட் உயிரியல் பூங்கா. அகண்ட நிலபரப்பைக் கொண்ட இந்தப் பூங்காவில் பல்வேறு உயிரினங்களும் பாதுகாக்கப்படுகின்றன. இந்தப் பூங்காவிற்கு நேற்று வழக்கம் போல் மக்கள் கூட்டம் அலைமோதியது.

அப்போது கரடிகள் இருக்கும் வளையத்தின் வெளியே நின்றபடி பலரும் கரடிகளைப் பார்த்துக் கொண்டிருந்தனர். அப்படி நின்றிருந்தவர்கள் ஒரு தாய் அவரின் குழந்தையும் இருந்தனர். திடீரென கண் இமைக்கும் நேரத்தில் அந்தப் பெண் குழந்தையை தூக்கு கரடி வளையத்துக்குள் வீசிவிடுகிறார். குழந்தையை வீசிவிட்டு சற்றும் சலனமே இல்லாமல் கீழே குதித்து நடையைக் கட்டுகிறார். ஆனால் அவரை பொதுமக்கள் சுற்றி வளைக்க, பூங்கா ஊழியர்கள் போலீஸில் ஒப்படைத்தனர்.

ஆனால் நல் வாய்ப்பாக கரடி குழந்தையை நெருங்கவில்லை. ஏதோ தூக்கி வீசப்படுகிறது என்ற அச்சத்தில் கரடி அங்கிருந்து விலகி ஓடிவிடுகிறது. பூங்கா ஊழியர்கள் கூட்டமாக கரடி வளையத்திற்குள் சென்று குழந்தையை தூக்கி வருகின்றனர். அது பெண் குழந்தை.

அந்தக் குழந்தைக்கு காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிகிறது. அந்த கொடூரத் தாயை போலீஸார் கைது செய்துள்ளனர். அவரின் செயலுக்கான பின்னணி இன்னும் தெரியவில்லை. அந்தப் பெண்ணின் மீது கொலை முயற்சி பதிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இருப்பினும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டவரா என்ற கோணத்தில் விசாரணை நடப்பதாகத் தெரிகிறது.

மனநோய்களில் மிகமுற்றிய நோய் தான் ஸ்கீஸோஃப்ரீனியா (Schizophrenia) எனப்படும் மனச்சிதைவு நோய். இந்த நோய் ஏற்பட்டவர்களுக்கு காதில் ஏதோ குரல் கேட்கலாம், கண்ணில் ஏதேனும் உருவம் தென்படலாம். இப்படியான பாதிப்புக்குள்ளான பலரும் தற்கொலை, கொலை செய்திருக்கின்றனர். திடீரென நொடிப் பொழுதில் அவர்களின் காதில் கேட்கும் குரலின் உத்தரவுக்கு இணங்கி இவ்வாறு செய்வதுண்டு. குழந்தைகள் மீதான வன்முறையை நிகழ்த்தும் பலருக்கும் மனச்சிதைவு இருக்க வாய்ப்பிருப்பதாகவே மனநல மருத்துவ உலகு கூறுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
TN Power Shutdown: சென்னை, கோவை, மதுரை உட்பட முக்கிய பகுதிகளில் மின்வெட்டு! உங்கள் பகுதி உள்ளதா?
Embed widget