மேலும் அறிய

Terror Attack: மேற்கு ஆப்பிரிக்காவில் நடந்த பயங்கரவாத தாக்குதல்.. 50 க்கும் மேற்பட்ட ராணுவத்தினர் உயிரிழப்பு..

வடக்கு புர்கினா பாசோவில் தாக்குதல் பயங்கரவாத அமைப்புகள் நடத்திய தாக்குதல் சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வடக்கு புர்கினா பாசோவில் ஜிஹாதிகளுடன் நடந்த தீவிர சண்டையில் 50க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படையினர் உயிரிழந்ததாகவும், பலரும் காயமடைந்ததாகவும் அந்நாட்டு ராணுவம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திங்களன்று யாதெங்கா மாகாணத்தில் உள்ள கொம்ப்ரி கம்யூனில் இராணுவத்திற்கு உதவிய பதினேழு வீரர்கள் மற்றும் 36 தன்னார்வப் போராளிகள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் பல இஸ்லாமிய ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த அதீத கோழைத்தனமான சம்பவத்தில் ஈடுப்பட்டவர்கள் நிச்சயம் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.

மேற்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடுகளில் ஒன்று பர்கினோ பசோ. நைஜீரியா, மாலி போன்ற நாடுகளை எல்லைகளாக கொண்டுள்ள இந்நாட்டில் கடந்த செப்டம்பர் மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. அதே சமயம் அங்கு பயங்கரவாத இயகங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. பயங்கரவாத குழுக்கள் பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. இதனால், இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்க அந்நாட்டு பாதுகாப்பு படையினர் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். பயங்கரவாதிகளுக்கு எதிராக பாதுகாப்பு படையினருக்கு உதவியாக அரசு ஆதரவு குழுக்களும் ஆயுதமேந்திய போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நேற்றைய தினம் பயங்கரவாத அமைப்புகள் வடக்கு புர்கினா பாசோவில் தாக்குதல் நடத்தினர், இந்த தாக்குதல் சம்பவத்தில் 50 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு படையினர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆயிரக்கணக்கானவர்களைக் கொன்று, 20 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்து, பல்லாயிரக்கணக்கான மக்களை பட்டினியின் விளிம்பிற்குத் தள்ளிய அல்-கொய்தா மற்றும் இஸ்லாமிய அரசுக் குழுவுடன் தொடர்புடைய வளர்ந்து வரும் ஜிஹாதி தாக்குதல்களால் மேற்கு ஆபிரிக்க நாடு மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

ஒரு காலத்தில் அமைதியாக இருந்த தேசத்தை வன்முறை பிளவுபடுத்தியுள்ளது, இது கடந்த ஆண்டு இரண்டு ஆட்சிக்கவிழ்ப்புகளுக்கு வழிவகுத்தது மேலும் தலைநகரான ஓவாகடூகோவை சுற்றி வளைக்கும் தாக்குதல்கள் அதிகரித்தன. ஏறக்குறைய நாட்டின் பாதி பகுதி அரசாங்க கட்டுப்பாட்டிற்கு வெளியே உள்ளது என்று தகவல் தெரிவிக்கின்றன.

2022 ஜனவரியில் நடந்த முதல் ஆட்சிக்கவிழ்ப்புக்குப் பிறகு ஜிஹாதிகளால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை முந்தைய 18 மாதங்களுடன் ஒப்பிடும்போது கிட்டத்தட்ட மூன்று மடங்காக அதிகரித்துள்ளது என்று ஆப்பிரிக்கா மூலோபாய ஆய்வு மையத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.  மேலும், "இந்த வன்முறை, ஓவாகடூகோவைச் சுற்றியுள்ள தீவிரவாத நடவடிக்கைகளின் புவியியல் பரவலுடன் இணைந்து, புர்கினா பாசோவை முன்னெப்போதையும் விட சரிவின் விளிம்பில் நிறுத்தியுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
போலி வாட்ஸ் அப் குழு மூலம் ரூ.1.17 கோடி இழந்த நபர் !! கல்லூரி மாணவர் , ஆட்டோ ஓட்டுநர் கைது
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
குட் நியூஸ் மாணவர்களே ! புதுச்சேரி பல்கலையில்கழகத்தில் தமிழ் மாணவர்களுக்கு 66% கட்டண சலுகை அறிவிப்பு!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
புதுச்சேரி வாக்காளர் பட்டியலில் 'ஏஎஸ்டி' (ASD) பட்டியல் வெளியீடு: மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல்!
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
கபீர் புரஸ்கார் விருது: 2026-ல் சமூக நல்லிணக்கத்திற்காக காத்திருக்கும் வாய்ப்பு! விண்ணப்பிக்க டிசம்பர் 15 கடைசி தேதி
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
திருச்சியில் துப்பாக்கிச் சூடு: பிரபல கொள்ளையன் கைது! கோவை போலீசாருக்கு அரிவாள் வெட்டு - பரபரப்பு!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Embed widget