மேலும் அறிய

Maha Shivaratri : மகா சிவராத்திரி.. ஒரு நெகிழ்ச்சி.. பாகிஸ்தான் கோயிலுக்கு சென்ற இந்திய பக்தர்கள்..

பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு 89 இந்திய பக்தர்கள் சென்றடைந்தனர்.

Maha Shivaratri :  பாகிஸ்தானில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு 89 இந்திய பக்தர்கள் சென்று வழிபட்டுள்ளனர்

லாகூர் : பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பிரசித்த பெற்ற கடாஸ் ராஜ் கோயில் அமைந்துள்ளது. இங்கு வருடம்தோறும் நவம்பர் மாதம் முதல் ஜனவரி மாதம் வரை பக்தர்கள் வருகை தருவது வழக்கமான ஒன்று. இங்கு ஆண்டுதோறும் 100க்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்த தரிசனம்  மேற்கொள்கின்றனர். அதன்படி இந்த வருடம் மகா சிவராத்திரியைக் கொண்டாடுவதற்காக இந்தியாவில் இருந்து சுமார் 89 இந்து யாத்ரீகர்கள் நேற்று சென்றடைந்தனர்.

பாகிஸ்தானில் உள்ள சிறுபான்மையினரின் புனித ஸ்தலங்களை கவனிக்கும் செய்தித் தொடர்பாளர் அமீர் ஹாஷ்மி கூறியதாவது, ”இந்தியாவில் இருந்து வாகா எல்லை வழியாக சுமார் 89 இந்து யாத்ரீகர்கள் இங்கு வந்தனர். எவாக்யூ அறக்கட்டளை சொத்து வாரிய மூத்த அதிகாரிகள் ராணா ஷாஹித் மற்றும் ஃப்ராஸ் அப்பாஸ் அவர்களை எல்லையில் வரவேற்றனர்” என்றார்.

”பாகிஸ்தானுக்கு வருகை தந்த யாத்ரீகர்கள் லாகூரில் இருந்து 300  கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சக்வாலுக்கு செல்வதற்கு முன் ஒரு நாள் லாகூரில் தங்கியிருப்பார்கள் எனவும் வியாழக்கிழமை நடைபெறும் மகா சிவராத்ரி விழாவில் பங்கேற்பர்” என்று தெரிவித்தார். இதனையொட்டி அப்பகுதி முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

பிரசித்த பெற்ற கட்டாஸ் ராஜ் கோயிலில் பிரம்மாண்டமாக மகா சிவராத்ரி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இதனால் இந்திய யாத்ரீகர்கள் 89 பேர் பாகிஸ்தானில் உள்ள கட்டாஸ் ராஜ் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர். புனிதத் தலங்களை தரிசிக்க அனுமதிக்கும் இரு நாடுகளுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின் அடிப்படையில் விசாக்களை பாகிஸ்தான் வழங்கி உள்ளது. வருகை தரும் 89 பேருக்கு விசாக்கள் வழங்கப்பட்டுள்ளது என்று டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் தெரிவித்துள்ளது.

புனிதத் தலங்களை பாதுகாக்கவும் அவற்றை பார்வையிடச் செல்பவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளை வழங்கவும் பாகிஸ்தான்  தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறது” என்றும் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் ஆப்தாப் ஹசன் கான் தெரிவித்துள்ளார்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget