மேலும் அறிய

20 நிமிடங்களுக்கு முடக்கப்பட்ட ஆடியோ... எதிர்க்கட்சியினரின் குரலை ஒடுக்க முயற்சியா? நாடாளுமன்றத்தில் அப்படி என்னதான் நடந்தது?

நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது பாதி கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. தொடங்கிய முதலே நாடாளுமன்ற அவை நடவடிக்கைகள் முடக்கப்படுவது கவலையை ஏற்படுத்தி வருகிறது.

லண்டனில் ராகுல் காந்தி பேசிய விவகாரம் நாடாளுமன்றத்தில் தொடர் பிரச்சினையை ஏற்படுத்தி வருகிறது. ஜனநாயகம் குறித்து  ராகுல் காந்தி பேசிய கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுங்கட்சி உறுப்பினர்கள் இரு அவையிலும் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

எதிர்க்கட்சிகள் vs பாஜக:

இதன் காரணமாக, அவை நடவடிக்கைகள் நான்கு நாள்களாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. ராகுல் காந்தி பேசிய கருத்துகளுக்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும் என மத்திய அமைச்சர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல, அதானி முறைகேடு தொடர்பாக கூட்டு நாடாளுமன்ற குழு விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகிறது.

மக்களவை ஆடியோ 20 நிமிடங்களுக்கு முடக்கம்:

இந்த சூழ்நிலையில், இந்த விவகாரங்கள் இன்றும் அவை நடவடிக்கைகளை முடக்கியது. இதையடுத்து, நாடாளுமன்ற இரு அவைகளும் மார்ச் 20ஆம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, சரமாரி குற்றச்சாட்டுகளை காங்கிரஸ் முன்வைத்துள்ளது. இன்றைய அமர்வின்போது, மக்களவையில் ஆடியோ 20 நிமிடங்களுக்கு முடக்கப்பட்டதாக காங்கிரஸ் குற்றம்சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் ஒரு வீடியோ பகிரப்பட்டுள்ளது. அதில், மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களின் எதிர்ப்பினை பதிவு செய்த போது அவர்கள் பேசுவது எதுவும் கேட்கவில்லை.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா நாற்காலிக்கு அருகில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் ஆர்ப்பாட்டம் செய்வதையும், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் எழுந்து நின்று கோஷங்கள் எழுப்புவதும் அதில் பதிவாகியுள்ளது.

கிட்டத்தட்ட 20 நிமிடங்களுக்கு ஆடியோ எதவும் கேட்கவில்லை. ஆனால், கத்துவதை நிறுத்தும்படி கூறி, அவை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் அறிவிக்கும்போது ஆடியோ மீண்டும் ON செய்யப்படுகிறது. மக்களவையில் ஆடியோ ஏன் முடக்கப்பட்டது என்பதற்கான விளக்கத்தை அரசு இன்னும் அளிக்கவில்லை.

"முன்னதாக மைக்குகள் மட்டும் முடக்கப்பட்டிருந்த நிலையில், இன்று அவை நடவடிக்கைகள் முடக்கப்பட்டன. (பிரதமர் நரேந்திர) மோடியின் நண்பருக்காக மக்களவை ஊமையாக்கப்பட்டுள்ளது. 

அதானி-ஹிண்டன்பர்க் விவகாரத்தில் கூட்டுப் நாடாளுமன்றக் குழு (ஜேபிசி) விசாரணைக்கான எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளை இல்லாமல் ஆக்க மைக்குகள் முடக்கப்பட்டன. ராகுல் காந்தியை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிப்பதில்லை என ஆளும் பாஜக முடிவு செய்தது" என காங்கிரஸ் தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ராகுல் காந்தி அப்படி என்னதான் பேசினார்?

பிரிட்டனில் ஜனநாயகம் குறித்து கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசிய ராகுல் காந்தி, "ஜனநாயகத்தின் தூண்களாக விளங்கும் நாடாளுமன்றம், பத்திரிகைகள் மற்றும் நீதித்துறை ஆகியவை கட்டுப்படுத்தப்படுகின்றன. 

இந்தியாவில் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள, சீக்கியர்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர்களும், பத்திரிகைகளும் தாக்கப்படுகின்றனர். இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை கட்டமைப்பின் மீதான தாக்குதலை, நாங்கள் எதிர்கொள்கிறோம். 

பாரத் ஜோடோ யாத்திரையை குறிப்பிட்ட ராகுல் காந்தி, இந்த யாத்திரை தன்னை ஒரு அரசியல்வாதியாக மாற்றியுள்ளது. கொலை மிரட்டல்களுக்கு மத்தியிலும் நடைபயணம் மேற்கொண்டோம்” என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ICC Women's T20 World Cup:தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து;டி20  உலகக் கோப்பையை வென்று அசத்தல்!
ICC Women's T20 World Cup:தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து;டி20  உலகக் கோப்பையை வென்று அசத்தல்!
தோனியாக மாறிய விளையாட்டுத்துறை அமைச்சர்.. கோல்ஃப் களத்தில் அட்டகாசம் செய்த மாண்டவியா!
தோனியாக மாறிய விளையாட்டுத்துறை அமைச்சர்.. கோல்ஃப் களத்தில் அட்டகாசம் செய்த மாண்டவியா!
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கேம் பிளான்.. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கும் தேவேந்திர பட்னாவிஸ்!
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கேம் பிளான்.. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கும் தேவேந்திர பட்னாவிஸ்!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay TVK Maanadu |‘’யாரும் உள்ள போகமுடியாது’’மிரட்டும் பவுன்சர்கள்!தவெக மாநாடு ATROCITIESICC T20 Women's WC Finals 2024 | கோதாவில் இறங்கும் SA VS NZபுதிய சாம்பியன் யார்? CHOKERS vs CHOKERSVijay TVK Maanadu | மாநாட்டில் வெடிக்கும் சர்ச்சைகள் மரத்தை வெட்டிய த.வெ.கவினர்?சீறும் சமூக ஆர்வலர்கள்Vijay | விஜய்க்கு நோட்டீஸ்..  மாநாடு நேரத்தில் நெருக்கடி.. மீண்டும் சிக்கலில் த.வெ.க?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ICC Women's T20 World Cup:தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து;டி20  உலகக் கோப்பையை வென்று அசத்தல்!
ICC Women's T20 World Cup:தென்னாப்பிரிக்காவை வீழ்த்திய நியூசிலாந்து;டி20  உலகக் கோப்பையை வென்று அசத்தல்!
தோனியாக மாறிய விளையாட்டுத்துறை அமைச்சர்.. கோல்ஃப் களத்தில் அட்டகாசம் செய்த மாண்டவியா!
தோனியாக மாறிய விளையாட்டுத்துறை அமைச்சர்.. கோல்ஃப் களத்தில் அட்டகாசம் செய்த மாண்டவியா!
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கேம் பிளான்.. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கும் தேவேந்திர பட்னாவிஸ்!
மகாராஷ்டிரா தேர்தலில் பாஜக கேம் பிளான்.. ஓப்பனிங் பேட்ஸ்மேனாக களத்தில் இறங்கும் தேவேந்திர பட்னாவிஸ்!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
ABP Southern Rising Summit 2024: தெற்கின் குரலை ஓங்கி ஒலிக்கும், ஏபிபி நெட்வர்க்கின் சதர்ன் ரைசிங் உச்சி மாநாடு - இந்த முறை ஐதராபாத்தில்..!
UDAN: சாமானிய மக்கள் விமானங்களில் ஏறுவதை பார்க்க ஆசை- பிரதமர் மோடி சொன்னது எதற்காக?
UDAN: சாமானிய மக்கள் விமானங்களில் ஏறுவதை பார்க்க ஆசை- பிரதமர் மோடி சொன்னது எதற்காக?
ஹைதராபாத் பப்பில் ஆபாச நடனம்: 40 பெண்கள் உட்பட 140 பேர் கைது; நடந்தது என்ன? 
ஹைதராபாத் பப்பில் ஆபாச நடனம்: 40 பெண்கள் உட்பட 140 பேர் கைது; நடந்தது என்ன? 
TN rain alert: அச்சச்சோ..! வங்கக் கடலில் உருவாகிறது புயல், 24 மணி நேர கவுண்டவுன் ஸ்டார்ட்..! வானிலை அறிக்கை சொல்வது என்ன?
TN rain alert: அச்சச்சோ..! வங்கக் கடலில் உருவாகிறது புயல், 24 மணி நேர கவுண்டவுன் ஸ்டார்ட்..! வானிலை அறிக்கை சொல்வது என்ன?
WTC Points Table: நியூசிலாந்திடம் கண்ட தோல்வி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: நியூசிலாந்திடம் கண்ட தோல்வி - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் இந்தியாவின் நிலை என்ன?
Embed widget