மேலும் அறிய

சென்னையில் தயாரிக்கப்பட்ட கண் சொட்டு மருந்து.. அமெரிக்கரின் உயிரிழப்புக்கு காரணமா?

அமெரிக்காவில் சென்னையை சேர்ந்த மருந்து நிறுவனம் ஒன்று தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியாகியுள்ளது.

சென்னையில் இயங்கி வரும் மருந்து நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் அமெரிக்காவில் சிலர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி இருந்தது.  இதையடுத்து, அந்த மருந்து நிறுவனம் அமெரிக்க சந்தையில் தனது விநியோகத்தை நிறுத்தியுள்ளது.

கண் சொட்டு மருந்து:

குளோபல் பார்மா ஹெல்த்கேர் பிரைவேட் லிமிடெட் நிறுவனம் சென்னையில் இயங்கி வருகிறது. அமெரிக்காவில் இந்த மருந்து நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்தை பயன்படுத்தியதால் ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் தி நியூயார்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டது. 

அந்த மருந்தில் உள்ள பாக்டீரியா வகையால் மரணம், கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. Artificial Tears என்ற பெயரில், இந்த கண் சொட்டு மருந்தை எஸ்ரிகேர் மற்றும் டெல்சா நிறுவனம் அமெரிக்க முழுவதும் விநியோகித்து வருகிறது. 

பார்வை இழப்பு:

ஒருவர் உயிரிழந்ததாகவும் ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டதாகவும் செய்தி வெளியானதையடுத்து, இந்த மருந்தை பயன்படுத்துவதை தவிர்க்க அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் கேட்டு கொண்டது.

இதுகுறித்து அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்ட அறிக்கையில், "ரத்தம், நுரையீரல் மற்றும் உடலின் மற்ற பாகங்களில் நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தக்கூடிய சூடோமோனாஸ் ஏருகினோசா என்ற பாக்டீரியா வகை பரவி இருப்பது குறித்து ஆய்வு செய்தோம். பாக்டீரியாவின் இந்த வகை அமெரிக்காவில் முன்னதாக அடையாளம் காணப்பட்டதில்லை.

55 பேர் பாதிப்பு:

இதுவரை, 12 மாநிலங்களில் 55 பேருக்கு இந்த பாக்டீரியா வகை தாக்கி இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கண் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் உயிரிழந்தார். ஐந்து பேருக்கு கண் பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலோர் தொற்று ஏற்படுவதற்கு முன் குளோபல் நிறுவனம் தயாரித்த மருந்தை பயன்படுத்தினர். கண் தொற்று உள்ள மற்றும் இல்லாத நோயாளிகளிடமிருந்து சேகரிக்கப்பட்ட எஸ்ரிகேர் கண் சொட்டு மருந்துகளின் திறந்த பாட்டில்களில் பாக்டீரியா வகை இருப்பதைக் கண்டறியப்பட்டுள்ளது.

எஸ்ரிகேர் மருந்தை பயன்படுத்தியவர்கள் மற்றும் கண்களில் அசௌகரியத்தை உணர்ந்தவர்கள் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த மருந்தின் இறக்குமதிக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் கட்டுப்பாடு விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Congress: Delhi-க்கு படையெடுக்கும்  தலைவர்கள் பதற்றத்தில் காங்கிரஸ்! இறங்கி அடிக்கும் ஆம் ஆத்மி!JD Vance : ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?JD Vancy | ஒரு காலத்தில் TRUMP-ன் எதிரி.. இன்று அமெரிக்காவின் VICE PRESIDENT! யார் இந்த இந்திய மாப்பிள்ளை JD?School boy argue with teacher | ”SCHOOL-க்கு வெளியா வா உன்ன கொன்னுடுவன்” ஆசிரியரை மிரட்டிய மாணவன் | Kerala

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
TN Governor: நீதிமன்றம் கொடுத்த நெருக்கடி..! உடனே சட்ட திருத்தத்திற்கு ஒப்புதல் கொடுத்த ஆளுநர் ஆர்.என். ரவி
RRB Group D :  32,438 பணியிடங்கள்!  மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
RRB Group D : 32,438 பணியிடங்கள்! மிஸ் பண்ணிடாதீங்க! ரயில்வேயில் சேர பொன்னான வாய்ப்பு இது தான்! முழு விவரம்
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
CM Stalin: தமிழ்நாடே எதிர்பார்ப்பு ..! முதலமைச்சர் ஸ்டாலின் சொன்ன அறிவிப்பு இதுதானா? யாருக்கு என்ன பலன்?
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
Jalgaon Train Tragedy: ரயிலில் பரவிய வதந்தி தீ..! அடுத்தடுத்து குதித்த பயணிகள், ரயில் மோதி 13 பேர் உயிரிழப்பு
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
IND VS ENG T20: இனி நாங்க தான் நம்பர் ஒன்..! இந்திய மூத்த வீரர்களின் சாதனைகளை அடித்து நொறுக்கிய இளம் சிங்கங்கள்
"நாளை முக்கிய அறிவிப்பு வெளியாகிறது" புதிர் போடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
"தமிழ்நாட்டில் மதக்கலவரம்.. சதி செய்றாங்க" அண்ணாமலை பரபர குற்றச்சாட்டு!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த  சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Arshdeep Singh : டி20 போட்டியில் அர்ஷ்தீப் செய்த சம்பவம்.. சாஹலை பின்னுக்கு தள்ளி சாதனை!
Embed widget