மேலும் அறிய

கவனமா இருங்க...அதிகரித்து வரும் வெறுப்பு குற்றங்கள்... கனடா வாழ் இந்தியர்களுக்கு பறந்த எச்சரிக்கை

கனடாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறைகள் ஆகியவை அதிகரித்துள்ளது குறித்து இந்தியா எச்சரித்துள்ளது.

சமீப காலமாகவே, வெளிநாடுகளில் இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுவது அதிகரித்து வந்துள்ளது. இந்நிலையில், கனடாவில் இந்திய மாணவர்களுக்கு எதிராக வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறைகள் ஆகியவை அதிகரித்துள்ளது குறித்து இந்தியா எச்சரித்துள்ளது.

 

விழிப்புடன் இருக்குமாறு கனடா வாழ் இந்திய மாணவர்களை இந்திய அரசு கேட்டு கொண்டுள்ளது. இதுகுறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "வெறுப்பு குற்றங்கள், மதவெறி வன்முறை மற்றும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் போன்ற சம்பவங்களை கனடாவுடன் எடுத்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளது.

இந்தக் குற்றங்களைச் செய்த குற்றவாளிகள் இதுவரை கனடாவில் நீதியின் முன் நிறுத்தப்படவில்லை. விவரிக்கப்பட்டுள்ளபடி குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு, கனடாவில் உள்ள இந்தியப் பிரஜைகள் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் பயணம்/கல்விக்காக கனடாவுக்குச் செல்பவர்கள் தகுந்த எச்சரிக்கையுடன் மற்றும் விழிப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

சீக்கியர்களுக்கு தனி நாடு கோரி வாக்கெடுப்பு நடத்த கனடாவில் உள்ள காலிஸ்தான் ஆதரவாளர்கள் சிலர் கோரிக்கை விடுத்திருப்பது இந்திய, கனடா நாடுகளுக்கிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு மத்தியில், வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது. 

காலிஸ்தான் வாக்கெடுப்பு குறித்து வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி நேற்று பேசுகையில், "இந்த வாக்கெடுப்பு தீவிரவாத சக்திகளின் கேலிக்கூத்து. இது ஒரு நட்பு நாட்டில் அனுமதிக்கப்பட்டது ஆழ்ந்த ஆட்சேபனைக்குரியது" என்றார்.

ஒட்டாவாவில் அல்லது டொராண்டோ அல்லது வான்கூவரில் உள்ள தூதரகங்களில் பதிவு செய்து கொள்ளுமாறு கனடாவில் உள்ள இந்திய பிரஜைகள் மற்றும் மாணவர்களை அரசு வலியுறுத்தியது. "தேவை அல்லது அவசரநிலை ஏற்படும் பட்சத்தில், கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுடன் தூதரகம் தொடர்பு கொள்ள இது உதவும்" என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கனடாவில் 1.6 மில்லியன் இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர்கள் வசிக்கின்றனர். இந்த ஆண்டு, கனடாவில் இந்து கோயில்கள் மீது இரண்டு தாக்குதல் சம்பவங்கள் நடந்துள்ளன. செப்டம்பர் 15 அன்று, ஒரு கோயில் சிதைக்கப்பட்டது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ABP Premium

வீடியோ

TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
SHANTI Bill : சப்ளையர்களுக்கு சாதகமான ”சாந்தி” மசோதா, அணுசக்தி துறையில் தனியார் - மக்களவையில் நிறைவேற்றம்
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
Railway: ரைட்ரா.. ரயிலில் எக்ஸ்ட்ரா லக்கேஜிற்கு, கூடுதல் கட்டணம் - மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தகவல்
TVK Erode Meeting: ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
ஈரோட்டில் நாளை தவெக பொதுக் கூட்டம்; QR கோட், பாஸ் தேவையா.? செங்கோட்டையன் கூறியது என்ன.?
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
PM Modi Ethiopia: பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவில் கிடைத்த கவுரவம்; உயரிய விருதை பெற்ற முதல் உலகத் தலைவர்
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
Kaithi 2: ரூ.75 கோடியை எடுத்து வச்சாதான் கைதி 2! லோகேஷ் கனகராஜ் மீது தயாரிப்பாளர் பகிரங்க குற்றச்சாட்டு
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
செங்கல்பட்டு: PM YASASVI கல்வி உதவித்தொகை! கடைசி தேதி 31/12/2025! விண்ணப்பிப்பது எப்படி? முழு விவரம்!
Embed widget