மேலும் அறிய

கோட்டபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என்று தகவல்.. அடுத்து என்ன?

முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நாடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, நாடு திரும்புவார் என பல தடவைகள் பலராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அவர் இலங்கை திரும்பவில்லை. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபாய  ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என  இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, கோத்தபாய செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நாடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை  செய்யுமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர்  முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அவரைத் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், மிரிஹான பிரதேசத்தில் உள்ள கோத்தாபய ராஜபக்சவின் வீட்டிற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .

இருந்தபோதிலும் கோத்தாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவதாக கூறுவது தொடர்பில் இலங்கை அரசு தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச இலங்கை வருவதாக கூறப்படும் நிலையில் அவரின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அதிபர் என்ற வகையில் இலங்கையின் சட்டப்படி அவருக்கான சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

 இருந்த போதிலும் இலங்கை வரும் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவாரா என்பதும் இன்னொரு கேள்வியாக இருக்கிறது .அமெரிக்க குடியுரிமை இழந்த அவர் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபடாமல் இருப்பாரா என்பதும் இன்னொரு சந்தேகமே.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலங்கையில் இருந்து வெளியேறி மாலை தீவு ,சிங்கப்பூர்  என இறுதியாக தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர் . இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச  தாய்லாந்தில் புகலிடம் கோரியதாகவும்  ஆனால் தாய்லாந்து அரசு புகலிடம் வழங்க முடியாது என கூறியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

அரசியல் தஞ்சம் கோரும் நோக்கமின்றி தமது நாட்டிற்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சவிடம் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது . இதேவேளை முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்று தனக்கு தெரியாதென இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது  எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் தெரிவித்திருக்கிறார்.
 கோத்தாபய ராஜபக்ச தனது தனி முடிவின்படி இலங்கையை  விட்டு வெளியேறி, அதிபர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச 
தற்போது முன்னாள் அதிபர் எனவும், முன்னாள் அதிபருக்குரிய சலுகைகள் அவருக்கு உண்டு எனவும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் எப்போது நாடு திரும்புவார் என தனக்குத் தெரியாது எனவும், நாடு திரும்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச தான் முடிவு எடுக்க வேண்டும்  எனக் இலங்கை பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

தலைப்பு செய்திகள்

Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
Iran on Hormuz: நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
நெஞ்சுல பால வார்த்துட்டீங்க பா.! ஹார்முஸ் ஜலசந்தி குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்ட ஈரான்
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Top 10 News Headlines: CM விஜய்க்கு கேள்வி, கனிமொழி கண்டனம், நீதிபதிகள் இன்று பதவியேற்பு - 11 மணி வரை இன்று
Trump:”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்
”பைத்தியக்காரா, நான் இல்லேன்னா நீ ஜெயில்ல இருப்ப” நேதன்யாகுவை அசிங்கமாக திட்டிய ட்ரம்ப்

வீடியோ

கேரளாவை உலுக்கிய மரணம் 1 1/2 வயது குழந்தை கொலை காதலுனுடன் தாய் செய்த கொடூரம்!
Duraimurugan DMK | ”எனக்கு பதவி வேணாம்” ஒதுங்கும் துரைமுருகன்? அடுத்த பொதுச்செயலாளர் யார்?
Minister Keerthana |
Minister Ramesh | அமைச்சரிடமே லஞ்சம் வாங்கி கையும் களவுமாக சிக்கிய அர்ச்சகர்! ”4000 ரூபாய் கொடுங்க”
Nara Lokesh on Keerathana | Troll-ல் சிக்கிய கீர்த்தனா! சந்திரபாபு மகன் Support

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
CM Vijay: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாள்; முக்கிய பதிவை வெளியிட்ட முதல்வர் விஜய்!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
ஸ்கூலே முடிக்கலை, அதுக்குள்ளயா? ஐஐஎம்மில் வைபவ் மாடல்! ஐபிஎல்லில் அசத்தும் சூர்யவன்ஷி!
TMC Rift: ”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
”கட்சிக்கு நீங்க தான் தலைவர், ஆனா சட்டமன்றத்த நாங்க பாத்துக்குறோம்” மம்தாவுக்கு ஆர்டர் போடும் MLAக்கள்
Central Minister on Hormuz: ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
ஹார்முஸில் இப்போது ஒரே ஒரு இந்திய கப்பல் தான் வருகிறது.! ABP மாநாட்டில் மத்திய அமைச்சர் ஷாக் தகவல்
Trump New Tariff: மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
மீண்டும் வரி ஆட்டத்தை தொடங்கிய ட்ரம்ப்; 60 நாடுகள் மீது கூடுதலாக 12.5%; US பரிந்துரையால் அதிர்ச்சி
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.! யார் யார் எந்த மாவட்டத்திற்கு.? இதோ முழு லிஸ்ட்
Inverter Battery Tips: கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
கோடைல இன்வெர்ட்டர் ரொம்ப முக்கியம் கண்ணு.! பேட்டரி வேகமா குறையுதா.? காரணமும், டிப்ஸும் இதோ
TN DGP: மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
மக்களை அலறவிடும் குற்றங்கள்..! தினந்தோறும் தொடரும் சோகம் - புதிய டிஜிபி செய்யப்போவது என்ன?
Embed widget