மேலும் அறிய

கோட்டபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என்று தகவல்.. அடுத்து என்ன?

முன்னாள் அதிபர் கோட்டபய ராஜபக்ச செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நாடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது.

இலங்கையில் இருந்து வெளியேறி வெளிநாடுகளில் தஞ்சமடைந்த முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்ச, நாடு திரும்புவார் என பல தடவைகள் பலராலும் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்ட போதும், இதுவரை அவர் இலங்கை திரும்பவில்லை. இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தபாய  ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவார் என  இலங்கை ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதற்கமைய, கோத்தபாய செப்டம்பர் 2 அல்லது 3 ஆம் தேதிகளில் நாடு திரும்புவார் என தகவல் வெளியாகி உள்ளது. 

முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச நாடு திரும்புவதற்குத் தேவையான ஏற்பாடுகளை  செய்யுமாறு இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினர்  முன்னர் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்நிலையில், கோத்தாபய ராஜபக்ச நாடு திரும்புவதற்கான ஏற்பாடுகள் குறித்து கலந்துரையாடுவதற்காக ஜனாதிபதி அவரைத் தொடர்பு கொண்டதாகவும் கூறப்படுகிறது.

அதேபோல், மிரிஹான பிரதேசத்தில் உள்ள கோத்தாபய ராஜபக்சவின் வீட்டிற்கு தீவிர பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது .

இருந்தபோதிலும் கோத்தாபய ராஜபக்ச அடுத்த மாதம் முதல் வாரத்தில் இலங்கை திரும்புவதாக கூறுவது தொடர்பில் இலங்கை அரசு தரப்பில் இருந்து உத்தியோகபூர்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச இலங்கை வருவதாக கூறப்படும் நிலையில் அவரின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதேபோல் முன்னாள் அதிபர் என்ற வகையில் இலங்கையின் சட்டப்படி அவருக்கான சலுகைகள் வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது.

 இருந்த போதிலும் இலங்கை வரும் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச மீண்டும் அரசியலில் ஆதிக்கம் செலுத்துவாரா என்பதும் இன்னொரு கேள்வியாக இருக்கிறது .அமெரிக்க குடியுரிமை இழந்த அவர் இலங்கைக்கு வந்து அரசியலில் ஈடுபடாமல் இருப்பாரா என்பதும் இன்னொரு சந்தேகமே.

கோத்தபாய ராஜபக்ச மற்றும் அவரது மனைவி ஆகியோர் இலங்கையில் இருந்து வெளியேறி மாலை தீவு ,சிங்கப்பூர்  என இறுதியாக தாய்லாந்தில் அடைக்கலம் புகுந்துள்ளனர் . இந்நிலையில், இலங்கையின் முன்னாள் அதிபர் கோத்தபாய ராஜபக்ச  தாய்லாந்தில் புகலிடம் கோரியதாகவும்  ஆனால் தாய்லாந்து அரசு புகலிடம் வழங்க முடியாது என கூறியதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. 

அரசியல் தஞ்சம் கோரும் நோக்கமின்றி தமது நாட்டிற்கு வருகை தருமாறு கோத்தபாய ராஜபக்சவிடம் தாய்லாந்து வெளியுறவு அமைச்சகம் கோரிக்கை விடுத்திருந்ததாகவும் கூறப்படுகிறது . இதேவேளை முன்னாள் அதிபர் கோத்தாபய ராஜபக்ச எப்போது நாடு திரும்புவார் என்று தனக்கு தெரியாதென இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்கள் சந்திப்பின் போது  எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் தெரிவித்திருக்கிறார்.
 கோத்தாபய ராஜபக்ச தனது தனி முடிவின்படி இலங்கையை  விட்டு வெளியேறி, அதிபர் பதவியிலிருந்து விலகியுள்ளார் என அந்நாட்டு பிரதமர் கூறியுள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச 
தற்போது முன்னாள் அதிபர் எனவும், முன்னாள் அதிபருக்குரிய சலுகைகள் அவருக்கு உண்டு எனவும் இலங்கை பிரதமர் தினேஷ் குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், அவர் எப்போது நாடு திரும்புவார் என தனக்குத் தெரியாது எனவும், நாடு திரும்புவதா? இல்லையா? என்பது தொடர்பில் கோத்தபாய ராஜபக்ச தான் முடிவு எடுக்க வேண்டும்  எனக் இலங்கை பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
ABP Premium

வீடியோ

Thackeray Vs Tamils | ”லுங்கியை கழட்டி ஓடவிடுவேன்” தமிழர்களுக்கு எதிரான தீ.. பற்றவைத்த பால் தாக்ரே!
H.ராஜா ARREST! போலீசாருடன் வாக்குவாதம்! ”உங்க வண்டில ஏன் ஏறணும்”
ஆட்சியில் பங்கு பஞ்சாயத்து! தமிழ்நாடு வரும் ராகுல்! நிர்வாகிகளுடன் MEETING
Vijay in CBI Office | டெல்லி சென்ற விஜய் திக்திக் CBI விசாரணை உச்சக்கட்ட பரபரப்பில் தவெகவினர் | TVK | Karur Stampede

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
TVK Vijay: கரூர் சம்பவம்.. விஜய் மீண்டும் ஆஜராக சிபிஐ சம்மன்? எப்போது தெரியுமா?
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Seeman: இடைநிலை ஆசிரியர்களுக்கும் சம ஊதியத்திற்கு அரசாணை வெளியிட வேண்டும் - சீமான் வலியுறுத்தல்
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Hyundai Offers: 98 ஆயிரம் வரை தள்ளுபடி.. i20 முதல் Exter வரை.. ஹுண்டாய் தரும் அட்டகாச ஆஃபர்!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
Kaanum Pongal 2026 Wishes: காணும் பொங்கலுக்கு கலக்கலான வாழ்த்துகள்! உறவுகளை புதுப்பிக்க இதை ட்ரை பண்ணுங்க!
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
தமிழகத்தில் கால் வைக்கும் முன் விஜய்க்கு கை கொடுத்த ராகுல் காந்தி.! ஷாக்காகி நிற்கும் திமுக
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
பகுதி நேர ஆசிரியர் தற்கொலை முயற்சி: பணி நிரந்தரம் கோரி போராட்டம்! அதிர்ச்சியில் ஆசிரியர்கள்
Iran Warns America: அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
அமெரிக்காவை எச்சரித்த ஈரான் உச்ச தலைவர்; அமெரிக்கர்கள் வெளியேற ட்ரம்ப் உத்தரவு; வெடிக்குமா போர்.?
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
BiggBoss Tamil : வெளியவந்து ரொம்ப வருத்தப்பட்டேன்...18 லட்சத்துடன் வெளியேறிய கானா வினோத் வீடியோ
Embed widget