மேலும் அறிய

என்ன நடக்கிறது கியூபாவில்? மக்கள் ஏன் தெருக்களில் இறங்கி போராடுகிறார்கள்?

கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்ததில்லை என்று கூறுமளவுக்கு மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக குரல் எழுப்பித் திரண்டனர். ஏன் இந்தப் போராட்டம், எதற்கு இத்தனை கொந்தளிப்பு?

கம்யூனிஸ்ட் நாடான கியூபாவில் அண்மைக் காலமாக மக்கள் வீதிகளில் இறங்கிப் போராடத் தொடங்கியுள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை கியூபத் தலைநகர் ஹவானாவில் மக்கள் பெருமளவில் திரண்டனர். கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு பெரிய போராட்டம் நடந்ததில்லை என்று கூறுமளவுக்கு மக்கள் ஆளும் அரசுக்கு எதிராக குரல் எழுப்பித் திரண்டனர். போராட்டத்தில் இளைஞர் ஒருவர் இறந்தார். 163 பேர் கைது செய்யப்பட்டனர். ஏன் இந்தப் போராட்டம், எதற்கு இத்தனைக் கொந்தளிப்பு?

கியூப மக்களின் போராட்டத்துக்கு மூன்று விஷயங்கள் முக்கியக் காரணியாகக் கூறப்படுகிறது.

1. கொரோனா வைரஸ்

கொரோனா வைரஸ் தாக்கத்தால் நாட்டில் ஏற்பட்டுள்ள சுகாதார நெருக்கடி மக்களை மன அழுத்தத்தில் ஆழ்த்தியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளும், கொரோனாவால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகளை எதிர்கொள்ள அரசு எடுத்த நடவடிக்கைகளும் சர்வாதிகாரப் போக்குடையதாக இருக்கிறது என்று மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். சமீபகாலமாக கியூபாவில் கொரோனா தொற்று வேகமெடுத்து வருகிறது. கடந்த ஞாயிற்றுக் கிழமை மட்டும் ஒரே நாளில் 6750 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது. 31 பேர் உயிரிழந்தனர். ஆனால், அரசு கூறும் இந்தப் புள்ளிவிவரம் மிகமிகக் குறைவு, உண்மையில் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், உயிரிழந்தும் இருப்பதாக மக்கள் கூறுகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் உரிய சிகிச்சை கூட கிடைக்காமல் வீட்டிலேயே முடங்கியிருக்கும் சூழல் இருப்பதாக மக்கள் குமுறுகின்றனர். இதனால் அண்மையில் #SOSCuba என்ற ஹேஹ்டேகை உருவாக்கிய மக்கள் தங்களுக்கு உதவி கோரி சமூகவலைதளங்களில் கருத்துகளைப் பகிரத் தொடங்கியுள்ளனர். ஆனால், கியூபா அதிபர் மிகுவெல் டியாஸ் கேனல், நாட்டில் கொரோனா மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் கட்டுக்குள் உள்ளதாகவும், சொந்தமாக கொரோனா தடுப்பூசி தயாரித்துள்ளதாகவும் கூறுகிறார். கியூபாவில் இதுவரை மிகமிகக் குறைந்த அளவிலான மக்களுக்கே கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருக்கிறது.


என்ன நடக்கிறது கியூபாவில்? மக்கள் ஏன் தெருக்களில் இறங்கி போராடுகிறார்கள்?

2. பொருளாதார நிலவரம்

கியூபாவின் பொருளாதாரத்துக்கு சுற்றுலா பெரும் பங்காற்றி வருகிறது. ஆனால், கொரோனா பரவலையடுத்து உலகமே பொதுமுடக்க வளையத்துக்குள் சிக்கிக் கொண்டுள்ளது. இதனால் தீவு நாடான கியூபாவில் பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. அரசாங்கம் புதிய பொருளாதார சீர்திருத்தங்களை அறிவித்தது. மக்களின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டங்களையும் கொண்டு வந்தது. ஆனால், மோசமான பக்கவிளைவாக விலைவாசி உயர்வு ஏற்பட்டது. கியூபாவின் பொருளாதார நிபுணர் பாவேல் விடால், அடுத்த சில மாதங்களில் நாட்டில் அத்தியாவசியப் பொருட்களின் விலை 500% முதல் 600% வரை அதிகரிக்கும் எனக் கணித்துள்ளார். கடந்த ஆண்டு கியூப அரசு மக்கள் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மருந்துகளை வாங்கிக்கொள்ள கடைகளை திறந்தது. வெளிநாட்டு நாணயங்களைப் பயன்படுத்திக் கொள்ளவும் அங்கு அனுமதியளிக்கப்பட்டது. ஆனால், அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு நிலவியது. கோதுமைக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்களுக்கு பூசணிக்காயால் செய்யப்பட்ட பிரெட் வழங்கப்பட்டது. கடந்த மாதம், வெளிநாட்டு டாலர்கள் ஏற்கப்படாது என்று கியூப அரசு அறிவித்தது. மக்கள் மிகுந்த பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியிருப்பதும் போராட்டத்துக்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

3. இணையம் ஏற்படுத்தியுள்ள தாக்கம்

ரவுல் காஸ்ட்ரோ அதிபராக இருந்தபோது கியூபாவில் இணையப் புரட்சி ஏற்பட்டது. அதன்பின்னர் கியூப மக்களுக்கு இணையம் சுதந்திரமாகக் கிட்டியது. ஃபேஸ்புக், ட்விட்டர், யூடியூப் என அனைத்துத் தலங்களையும் கியூப மக்கள் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், ஞாயிற்றுக் கிழமை நடந்த போராட்டமும் சமூகவலைதளங்கள் வாயிலாகத்தான் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. கியூப அரசாங்கமோ சமூகவிரோதிகள் சிலர் சமூக வலைதளங்களைப் பயன்படுத்தி அரசுக்கு எதிரான போராட்டங்களை தூண்டி விடுகிறது எனத் தெரிவித்துள்ளது.


என்ன நடக்கிறது கியூபாவில்? மக்கள் ஏன் தெருக்களில் இறங்கி போராடுகிறார்கள்?

போராட்டத்துக்குக் கிடைத்த பலன்:

இந்நிலையில் நேற்று கியூப அரசாங்கம் மக்கள் கோரிக்கைகளுக்கு செவி சாய்த்துள்ளது. வெளிநாட்டுப் பயணிகள் கொண்டுவரக் கூடிய உணவு மற்றும் மருந்துப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை விலக்கிக்கொள்வதாக அறிவித்துள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை வீதிகளில் இறங்கிப் போராடிய மக்கள் வைத்த கோரிக்கையில் இது மிகவும் முக்கியமானதாக இருந்தது. இது குறித்து அதிபர் மிகுவெல் தொலைக்காட்சியில் பேசும்போது, மக்கள் இதைத்தான் கேட்டனர். வெளிநாட்டு பயணிகளும் இந்தக் கோரிக்கையை முன்வைத்தனர். அதனால் இந்த முடிவை எடுப்பது அவசியமாகியிருக்கிறது. 

தலைப்பு செய்திகள்

Top 10 News Headlines: தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
தூய்மைப் பணிகள்-டெண்டர் கோரிய அரசு, நீட் தேர்வு மையம்-குளறுபடி, மோடியை பாராட்டிய ட்ரம்ப் - 11 மணி செய்திகள்
US Iran Deal: “ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
“ஒப்பந்தம் போட நானா தீவிரமா இருந்தேன்.? உனக்கு ஒரு பைசா கூட கிடையாது“: மொஜ்தபாவை விளாசிய ட்ரம்ப்
Giorgia Meloni Vs Trump: “இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
“இத்தாலி யாருக்கும் தலைவணங்காது, பொய்களுக்கும் ஒரு எல்லை உண்டு“: ட்ரம்ப்பை வெளுத்துவிட்ட மெலோனி
Israel Attack Lebanon: அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?
அடங்காத இஸ்ரேல்; ஆட்டம் கண்ட அமெரிக்க-ஈரான் ஒப்பந்தம்; முடங்கிய பேச்சுவார்த்தை; என்ன நடக்குது.?

வீடியோ

Cockroach Janata Party | விடிய விடிய போராட்டம்... பாஜகவை அலறவிடும் காக்ரோச்! “உடனே ராஜினாமா பண்ணுங்க”
Hanuman temple roof collapsed | இடிந்து விழுந்த மண்டப கூரை! கோயிலில் பறிபோன 6 உயிர்கள்! பதறவைக்கும் காட்சி
Amma Unavagam : அம்மா உணவகத்தில் மோசடி! ஹோட்டலுக்கு பார்சலாகும் இட்லி.. கொதிக்கும் பொதுமக்கள்!
Dulal Giri Ji Maharaj | 12 ஆண்டுகளாக நின்று கொண்டே இருக்கும் சாமியார்! நிறம் மாறிப் போன கால்கள்
திமுக கவுன்சிலர் அராஜகம்! தந்தை, மகன் மீது தாக்குதல் வெளியான அதிர்ச்சி வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
நாளை சட்டசபை கூடியதும் முதல்வர் விஜய் இதைச் செய்யவேண்டும்; செக் வைத்த கம்யூனிஸ்ட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
என்னதான் நடக்குது? அரசுப்பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவுக்கு பதில் பிஸ்கட்!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
மேகதாது அணையில் புது நடுவர் மன்றம் கூடாது; ஏன்? காரணங்களை அடுக்கிய அன்புமணி!
Vaibhav Sooryavanshi: வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வம்பிழுத்த இலங்கை..! நொறுக்கி தள்ளிய சூர்யவன்ஷி - ஃபைனலில் 11 பந்துகளில் அரைசதம்
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
வேளாண் வளர்ச்சிக்கு ஆபத்து; திமுக திட்டத்தை அமல்படுத்த அவசரம் ஏன்? உடனே திரும்பப் பெற கோரிக்கை!
TN By-Election: விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
விட்டு கொடுக்குறோம், TVKவை தூக்குறோம் - (A)DMKவின் 3-2-1 இடைத்தேர்தல் கணக்கு - சீமான் கார்ட்?
Tata SUV: EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
EV, CNG, AWD அப்க்ரேட்..! டாடாவின் அட்டகாசமான எஸ்யுவியின் புது வேரியண்ட்கள் - எப்போ? எவ்ளோ?
Tamilnadu Round Up: இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
இன்று நீட் மறுதேர்வு, ப்ரோக்கர் இல்லாத ஆட்சி, தனியார்மயம் வேண்டாம் - தமிழ்நாட்டில் இதுவரை
Embed widget