மேலும் அறிய

"எங்கள் நாட்டில் அந்நிய நாட்டின் தலையீடு" - இந்தியாவை சீண்டும் கனட தூதர்? ஐநாவில் நடந்தது என்ன?

நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில், இந்திய - கனட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது.

கடந்த ஜூன் மாதம், கனட நாட்டைச் சேர்ந்த சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார், அடையாளம் தெரியாத இரண்டு நபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் இப்போது  விஸ்வரூபம் எடுத்துள்ளது. ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசு இருக்கலாம் என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இந்திய - கனட நாடுகளுக்கிடையே பதற்றம்:

கனட பிரதமரின் குற்றச்சாட்டு உலக நாடுகளை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த விவகாரம், இந்திய, கனட நாடுகளுக்கு இடையேயான உறவில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. 

கனடாவில் உள்ள இந்திய அதிகாரிகள் பரிமாறி கொண்ட தகவல்கள், அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளிடம் இருந்து கிடைத்த உளவுத்தகவல்களை அடிப்படையாக கொண்டு இந்தியா மீது கனடா பிரதமர் குற்றச்சாட்டு சுமத்தியதாக அமெரிக்காவின் மூத்த தூதர் டேவிட் கோஹன் தெரிவித்திருந்தார். எனவே, கனடாவின் குற்றச்சாட்டுக்கு பின்னணியில் அமெரிக்க இருக்கிறதா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது. 

இந்த நிலையில், நியூயார்க் நகரில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 78ஆவது அமர்வில், இந்திய - கனட விவகாரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறது. அமர்வில் பேசிய ஐ.நா.வுக்கான கனட தூதர் பாப் ரே, தங்களது நாட்டில் வெளிநாட்டு தலையீடு இருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.

இந்தியாவை சீண்டுகிறாரா கனட தூதர்?

விரிவாக பேசிய அவர், "அந்நிய தலையீடு காரணமாக ஜனநாயகம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அரசியல் தேவைக்காக நாடுகளுக்கு இடையேயான உறவுகளுக்கு அரசின் விதிகளை வளைக்க முடியாது. அதே நேரத்தில், சமத்துவத்திற்கு நாங்கள் அதிக முக்கியத்துவம் கொடுக்கிறோம். 

சுதந்திர மற்றும் ஜனநாயக சமூகங்களின் விழுமியங்களையும் நாம் நிலைநாட்ட வேண்டும். அரசியல் தேவைக்காக நாடுகளுக்கு இடையேயான உறவுகளுக்கு அரசின் விதிகளை வளைக்க முடியாது. ஏனென்றால், அந்நிய தலையீடுகளின் மூலம் ஜனநாயகம் எந்த அளவுக்கு அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது என்பதை நாம் பார்த்திருக்கிறோம். தொடர்ந்து பார்த்து வருகிறோம்.

ஆனால், உண்மை என்னவென்றால், நாம் ஒப்புக்கொண்ட விதிகளை நாம் கடைப்பிடிக்காவிட்டால், நமது திறந்த, சுதந்திரமான சமூகங்களின் கட்டமைப்பு உடைய தொடங்கும்" என்றார்.

கனட தூதருக்கு முன்பு அமர்வில் பேசிய இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர், கனடாவை மறைமுகமாக விமர்சித்தார். "பயங்கரவாதம், தீவிரவாதம் மற்றும் வன்முறைக்கான எதிர்வினைகளை அரசியல் வசதிகள் தீர்மானிக்கின்றன என்பதாக நாம் எண்ணிவிடக்கூடாது. அதேபோல், பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு மரியாதை அளிப்பது, உள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது தேவைக்கு ஏற்ப செய்யக்கூடாது" என்றார்.

 

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

Donald Trump:
Donald Trump: "ஈரானில் தாக்குவதற்கு ஒன்னுமே இல்லை!" போர் விரைவில் முடிவுக்கு வருமா? டிரம்ப் அதிரடி அறிவிப்பு!
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Trump Thank Reliance: ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
ரிலையன்ஸால் அமெரிக்காவிற்கு ஜாக்பாட்; முதல் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பு; ட்ரம்ப் நன்றி
Top 10 News Headlines: கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
கார்த்தி சிதம்பரம் அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு, அமெரிக்காவில் அசத்தும் ரிலையன்ஸ் - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Iran Shuts Strait of Hormuz | உயரப்போகும் FUEL PRICE இந்தியாவுக்குப் பேரிடி ஈரான் அதிரடி மூவ்!
“CBI கூப்பிட்டா நான் போவேன்” செந்தில் பாலாஜி பதிலடி பாஜக போடும் ஸ்கெட்ச்? | Senthil Balaji Vs Vijay
கிருத்திகா போட்ட ட்வீட்
Sekar Babu angry | வேலை செய்யாத LIFT! முகம் மாறிய சேகர் பாபு! திட்டிய கோவி செழியன்
Parthiban Trisha | பொளந்தெடுத்த த்ரிஷா! ஆடியோ வெளியிட்ட பார்த்திபன்! ”பெண்ணே ஆகப்பெரும் சக்தி”

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
Air India: தாய்லாந்தில் ஓடுபாதையில் டமாலான விமான சக்கரம்.. ஏர் இந்தியா பயணிகள் நிலை என்ன?
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
UPSC CAPF 2026: யுபிஎஸ்சி சிஏபிஎஃப் பணி; நாளை கடைசி- விண்ணப்பிக்க மறந்தால் வாய்ப்பு மிஸ்!
Tidal Park : கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
கரூர், புதுக்கோட்டை, நாகப்பட்டினம் மக்களுக்கு ஜாக்பாட்.! ரூ.119 கோடியில் புதிய திட்டம்- கலக்கும் தமிழக அரசு
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
மதுரை மக்களுக்கு இனிப்பான செய்தி... முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டியில் என்ன சொன்னார் தெரியுமா?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
LPG Crisis: எரிவாயு தட்டுப்பாடு: IRCTC-யின் அதிரடி நடவடிக்கை! ரயில் பயணிகளுக்கு இனி இப்படித்தான் உணவு?
DMK alliance seat allocation : கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
கூடுதல் தொகுதிகள் கேட்கும் கூட்டணி கட்சிகள்.? திமுக போடும் செம பிளான் - என்ன தெரியுமா.?
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
LPG Shortage : ‘ஹோட்டல்களை மூடும் நிலை’ முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய அவசர கடிதம்..!
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
MTC-யின் புதிய 'கோல்ட் பிரீமியம்' பேருந்து! சொகுசு பயணம், குறைந்த கட்டணம்! முன்பதிவு செய்வது எப்படி?
Embed widget