மேலும் அறிய

அமெரிக்க ராணுவ வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை நிலை என்ன? ஆப்கனில் தவிக்கும் பெற்றோர்!

மிர்சா அலி அஹ்மதியும் அவரது மனைவி சுரயாவும் ஆகஸ்ட் 19 அன்று, ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் அவர்களது ஐந்து குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு நாட்டை விட்டு வெளியேறுகையில்...

2001ம் ஆண்டு முதல் ஆப்கானிஸ்தான் நாட்டில் உள்நாட்டு போரில் ஈடுபட்டு வந்த தாலிபான்கள், அமெரிக்க படையினரின் வெளியேற்றத்தை தொடர்ந்து வெகு விரைவாகவே பல்வேறு மாகாணங்களை கைப்பற்றிய நிலையில், கடந்த ஆகஸ்ட் 15ம் தேதியன்று தலைநகர் காபுலையும் கைப்பற்றி அஷ்ரப் கனி தலைமையிலான அரசை தூக்கி எறிந்தனர். மேலும் அஷ்ரப் கனி நாட்டை விட்டே வெளியேறினார். ஆப்கானிஸ்தானில் தற்போது புதிய ஆட்சியை நிறுவியுள்ள தாலிபான்கள், ஹசன் அகுந்த் என்பவரை பிரதமராக அறிவித்து புதிய அமைச்சரவையை உருவாக்கியுள்ளனர். ஆனால் தாலிபான்கள் ஆப்கனை கைப்பற்றி 75 நாட்களை கடந்து விட்ட போதிலும் கூட சீனா உள்ளிட்ட உலக நாடுகள் இதுவரையில் தாலிபான்கள் தலைமையிலான புதிய ஆப்கானிஸ்தான் அரசை அங்கீகரிக்காமல் இருந்து வருகின்றன.

ஏற்கனவே பொருளாதார நெருக்கடி போன்ற பிரச்னைகளை சந்தித்து வரும் ஆப்கானிஸ்தான் திணறி வருகிறது. மேலும் பல்வேறு நாடுகளில் ஆப்கனுக்கு சொந்தமான பில்லியன் கணக்கிலான சொத்துக்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் அவசர அவசரமாக நாட்டை விட்டு பரபரத்து வெளியேறியவர்களில் விமான கூட்ட நெரிசலில், விமான நிலையங்களில் அலைமோதியதை உலக நாடுகளே கண்டு கண்ணீர் சிந்தியது. அந்த நேரத்தில் தங்கள் 2 மாத குழந்தையை தொலைத்த பெற்றோர்கள் இன்னும் அடையாதது சோகத்தை அதிகரித்துள்ளது.

அமெரிக்க ராணுவ வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை நிலை என்ன? ஆப்கனில் தவிக்கும் பெற்றோர்!

35 வயதான மிர்சா அலி, 32 வயதாகும் சுரயா, மற்றும் அவர்களது 17, 9, 6 மற்றும் 3 வயது கொண்ட பிற குழந்தைகள், கத்தாருக்கும் பின்னர் ஜெர்மனிக்கும் ஒரு வெளியேற்ற விமானத்தில் இருந்து இறுதியில் அமெரிக்காவில் தரையிறக்கப்பட்டனர். குடும்பம் இப்போது டெக்சாஸில் உள்ள ஃபோர்ட் பிளிஸ்ஸில் மற்ற ஆப்கானிய அகதிகளுடன் அமெரிக்காவில் எங்காவது மீள்குடியேற காத்திருக்கிறது. அவர்களுக்கு அங்கு உறவினர்கள் யாரும் இல்லை. அதே நேரத்தில் மற்ற குடும்பங்கள் தங்கள் குழந்தைகளை காபூல் விமான நிலைய ராணுவ வீரர்களிடம் ஒப்படைப்பதை தான் பார்த்ததாக மிர்சா அலி கூறினார். அவர்களது இரண்டு மாத குழந்தை சோஹைல் கடும் கூட்ட நெரிசலில் நசுங்கி விடுமோ என்ற அச்சத்தில், அவர்கள் விரைவில் 16 அடி (5 மீட்டர்) தொலைவில் உள்ள நுழைவாயிலுக்குச் சென்றுவிடலாம் என்று நினைத்து அவரை ஒரு ராணுவ வீரரிடம் ஒப்படைத்தனர்.

விமான நிலைய வேலியின் மறுபக்கத்திற்குச் செல்ல குடும்பத்தின் மற்றவர்களுக்கு அரை மணி நேரத்திற்கும் மேலாக ஆனது. அவர்கள் உள்ளே சென்றதும் சோஹைலைக் காணவில்லை. 10 வருடங்கள் அமெரிக்க தூதரகத்தில் பாதுகாவலராகப் பணிபுரிந்ததாகக் கூறிய மிர்சா அலி, அவர் சந்திக்கும் ஒவ்வொரு அதிகாரியிடமும் தனது குழந்தை இருக்கும் இடத்தைப் பற்றி தீவிரமாகக் விசாரிக்க தொடங்கினார். குழந்தைகளுக்கு விமான நிலையம் மிகவும் ஆபத்தானது என கருதி அந்த ராணுவ வீரர் குழந்தைகளுக்கான சிறப்புப் பகுதிக்கு அழைத்துச் சென்றிருப்பார் என்றும் இராணுவத் தளபதி தன்னிடம் கூறியதாக அவர் கூறினார். ஆனால் அவர்கள் அங்கு சென்று பார்த்தபோது அங்கு யாருமே இல்லை கூறினார். "எல்லா இடங்களிலும் தேடுவதற்காக அந்த ராணுவ தளபதி என்னுடன் விமான நிலையம் முழுவதும் நடந்தார்" என்று மிர்சா அலி ஒரு மொழிபெயர்ப்பாளர் மூலம் ஒரு பேட்டியில் கூறினார்.

அமெரிக்க ராணுவ வீரரிடம் ஒப்படைக்கப்பட்ட குழந்தை நிலை என்ன? ஆப்கனில் தவிக்கும் பெற்றோர்!

தனக்கு ஆங்கிலம் தெரியாததாலும், தொடர்பு கொள்ள தூதரகத்தின் ஆப்கானிஸ்தான் சகாக்களை நம்பியிருந்ததாலும், தளபதியின் பெயர் தனக்கு ஒருபோதும் கிடைக்கவில்லை என்று அவர் கூறினார். மூன்று நாட்களில் அவர் 20 க்கும் மேற்பட்டவர்களிடம் பேசியுள்ளார். அதிகாரிகளிடமும், மக்களிடமும் குழந்தையை பற்றி கேட்டுள்ளார். அவரிடம் பேசிய சிவில் அதிகாரி ஒருவர், "குழந்தையை இங்கே வைத்திருக்க எங்களிடம் ஆதாரங்கள் இல்லை" என்று கூறியதகாக சொன்னார் மிர்சா.

டயப்பருடன் ஒரு சிறு குழந்தையை ரேசர் கம்பியின் மேல் கையால் தூக்கி கொடுத்த வீடியோ கிளிப் ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாக பரவியது. பின்னர் அந்த குழந்தை பெற்றோருடன் மீண்டும் சேர்ந்தது. மிர்சாவின் குழந்தை காணாமல் போனதில் இருந்து தான் மனதளவில் தெளிவாக இல்லை என்று மிர்சா அலி கூறினார். அவர் சந்திக்கும் ஒவ்வொரு நபரிடமும் சொஹைலைப் பற்றி விசாரித்திருக்கிறார். "எல்லோரும் தங்களால் முடிந்ததைச் செய்வோம் என்று உறுதியளிக்கிறார்கள், ஆனால் அவை வெறும் வாக்குறுதிகள்" என்று மிர்சா கூறினார்.

"நான் செய்வது எல்லாம் என் குழந்தையைப் பற்றி நினைப்பது மட்டும்தான்" என்ற சுரையா, "என்னை அழைக்கும் அனைவரும், என் அம்மா, என் அப்பா, என் சகோதரி, அவர்கள் அனைவரும் எனக்கு ஆறுதல் கூறி, 'கவலைப்படாதே, கடவுள் நல்லவர், உங்கள் மகன் கண்டுபிடிக்கப்படுவார்' என்று கூறுகிறார்கள்." காணாமல் போன இரண்டு மாத குழந்தை கிடைக்குமென நம்பிக்கையுடன் இருவரும் காத்திருக்கிறார்கள்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
6836
Active
14772
Recovered
109
Deaths
Last Updated: Tue 17 June, 2025 at 10:44 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Stalin : ’’அவர் கேட்டால் கொடுப்போம்’’ உதயநிதிக்கு PROMOTION போட்டுடைத்த ஆர்.எஸ்.பாரதிபொய் சொல்லி 2 -வது திருமணம் ரூ.18.5 லட்சம் அபேஸ் ஆட்டையை போட்ட சீரியல் நடிகைIsrael Attack | நேரலையில் செய்தி வாசித்த பெண்.. திடீரென தாக்கிய இஸ்ரேல்! பதற வைக்கும் வீடியோThirupattur | ”வெளிய வா உன்ன...” கத்தியை காட்டி மிரட்டல்!அடாவடியில் ஈடுபட்ட இளைஞர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்..  நிர்வாக பொறுப்பில் இன்பநிதி !  அரசியலுக்கு அச்சாரம்?
ஸ்டாலின், உதயநிதி வரிசையில்.. நிர்வாக பொறுப்பில் இன்பநிதி ! அரசியலுக்கு அச்சாரம்?
"மக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தா இதை செய்யுங்க" என்ன சொல்ல வருகிறார் விஜய்?
Premalatha: கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
கூட்டணிக்கு 40.! கூட்டணிக்கு 40.! - தேமுதிகவின் புதிய மந்திரம் இதுதான் - என்ன விஷயம் தெரியுமா.?
London Flight Cancelled: அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
அகமதாபாத்துக்கும் லண்டனுக்கும் ராசி இல்லையோ.! விபத்துக்குப்பின் செல்ல இருந்த விமானத்தில் கோளாறு
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
இனி உணவுலாம் வீணாகாது, இளைஞர்களுக்கு வேலை; தமிழக அரசுடன் ஒப்பந்தம் போட்ட ஐஐடி சென்னை- எதற்கு தெரியுமா?
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
EPS CM Stalin: 80 வயது பாட்டிக்குமா? ”பாதுகாப்பில்லை, தண்டனை இருக்கு” ஸ்டாலினை ரவுண்டு கட்டிய எடப்பாடி
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
மன்னிப்பு கேட்க சொல்ல நீங்க யார் ? கமல் பக்கம் திரும்பிய உச்ச நீதிமன்றம். கர்நாடக அரசுக்கு அதிரடி உத்தரவு
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Asra Garg IPS: ஏடிஜிபியா இருந்தா எனக்கென்ன? எதற்கும் துணிந்த அஸ்ரா கார்க் ஐபிஎஸ் யார்?
Embed widget