மேலும் அறிய

Arshad Sharif: பாகிஸ்தானிலிருந்து தப்பிச்சென்ற பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டுக்கொலை; நடந்தது என்ன?

பாகிஸ்தானிலிருந்து தப்பி சென்ற பத்திரிகையாளர் கென்யாவில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

பாகிஸ்தான் ராணுவத்தை கடுமையாக விமர்சித்ததன் காரணமாக, அங்கிருந்து தப்பி சென்ற பத்திரிகையாளர் அஷ்ரஃப் ஷெரீப் கென்யா நாட்டில் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். இந்நிலையில், அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்ற தகவல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

ராணுவ விமர்சனம்:

முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் ஆதரவாளராக கருதப்படும் அஷ்ரஃப் ஷெரீப், அவ்வப்போது பாகிஸ்தானின் ராணுவ நடவடிக்கைகள் குறித்து விமர்சித்து வந்தார். இதன் காரணமாக, அவர் மீது தேச துரோக குற்றச்சாட்டு கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் கைது செய்வதில் இருந்து தப்பிப்பதற்காக வெளிநாடு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கென்யா காவல்துறையினரால் சுட்டு கொல்லப்பட்டார். இச்சம்பவம் குறித்து விளக்கமளித்துள்ள கென்யா தரப்பானது, குழந்தை கடத்தல் தொடர்பாக காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அஷ்ரப் வந்து கொண்டிருந்த காரானது, நிற்காமல் சென்றது. இதனால் காரை துரத்தி, நடத்திய துப்பாக்கிச் சூட்டில், அஷ்ரப் தலையின் மீது குண்டு பாய்ந்ததில் மரணமடைந்தார்.

அஷ்ரப் மறைவுக்கு, பாகிஸ்தான் நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி, பிரதமர் செபாஸ் செரீப் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவரது உடலை பாகிஸ்தான் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர்  தெரிவித்துள்ளார்.

இம்ரான் கான்:

மேலும் அஷ்ரப் மறைவு குறித்து கருத்து தெரிவித்துள்ள பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கான், உண்மையைப் பேசியதற்காக உயிரை விலையாக கொடுத்த அர்ஷத் ஷெரீப்பின் மிருகத்தனமான கொலையைக் கண்டு அதிர்ச்சி அடைந்தேன்.

உண்மையை பேசியதற்காக, அவர் நாட்டை விட்டு வெளியேறி வெளிநாட்டில் ஒளிந்து கொள்ள வேண்டியிருந்தது, ஆனாலும் அவர் சமூக ஊடகங்களில் தொடர்ந்து உண்மையைப் பேசினார், சக்தி வாய்ந்தவர்களை அம்பலப்படுத்தினார்.

”விசாரணை வேண்டும்”

இவரது மரணம் குறித்து நியாயமான நீதிமன்ற விசாரணை நடத்த வேண்டும். மேலும், அவரது குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவரது மறைவுக்கு முழு தேசமும் இரங்கல் தெரிவிக்கிறது என்று இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து, தீவிர விசாரணை நடத்தப்பட வேண்டும் என பல்வேறு தரப்பினர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு சிறந்த நண்பன், சிறந்த பத்திரிகையாளர் மற்றும் கணவனை இழந்துவிட்டேன் என அஷ்ரஃப் ஷெரீப்பின் மனைவி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் நாடானது, பத்திரிகை சுதந்திரம் தொடர்பான குறியீட்டில், 180 நாடுகள் உள்ளடக்கிய பட்டியலில் 157 வது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Britain Election Results | ஆட்சியிழக்கும் ரிஷி சுனக்!வெற்றி விளிம்பில் ஸ்டார்மர்!Rahul Gandhi to Visit Hathras |எட்றா வண்டிய..!ஹத்ராஸுக்கு புறப்பட்ட ராகுல்..நேரில் ஆறுதல்Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு,  காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
காஞ்சிபுரம் மேயருக்கு கடைசி வாய்ப்பு? தொடரும் எதிர்ப்பு, காய் நகர்த்தும் கவுன்சிலர்கள் - நடப்பது என்ன?
Watch Video: ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
ஒரு கையில் மது, மறுகையில் தேசிய கொடி Facebook CEO! கடலில் சுதந்திர தின கொண்டாட்டம்!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
Rohit Sharma: உச்சபட்ச கௌரவம்! மகாராஷ்டிரா சட்டமன்றத்தில் பேசிய ஹிட்மேன் ரோஹித் ஷர்மா!
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
அதிர்ச்சி! இந்தியாவில் 76 சதவீதம் பேருக்கு தொழில் சார் மன அழுத்தம் - உளவியல் நிபுணர்கள் வேதனை
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
Breaking News LIVE, July 5: பிரிட்டன் எம்.பி.யான உமா குமரனுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
ஹத்ராஸ் சென்ற ராகுல்காந்திக்கு ஏன் கள்ளக்குறிச்சி வரவில்லை? மத்திய அமைச்சர் எல்.முருகன் கேள்வி
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Vikravandi Bye- Election: விக்கிரவாண்டி இடைத்தேர்தல்; என்னென்ன தேர்தல் விதிமுறைகள் அமல்?
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Sudha Kongara: சூர்யாவின் புறநானூறு படத்தின் கதை என்ன? மனம் திறந்த இயக்குனர் சுதா கொங்கரா!
Embed widget