மேலும் அறிய

மலேசியா: படகு கவிழ்ந்து விபத்து - 11 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு; 25 பேர் மாயம்

மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. 

மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. 

மலேசியாவின் தெற்குப் பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் 11 இந்தோனேசிய அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலை தேடும் இந்தோனேசியர்கள் சில சமயங்களில் அண்டை நாடான மலேசியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பயணம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோகர் மாகாணத்தில் அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. அந்த படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் பயணம் செய்துள்ளனர். 

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென நீரில் கவிழ்ந்துள்ளது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மலேசிய கடலோர காவல் படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் மீட்பு படகுகளை கொண்டு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை கடலோர காவல்படையினர் மீட்டனர். மேலும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 24 பேரையும் வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த விபத்தில் 25 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து கடலோர காவல் படைத் தலைவர் அட்மிரல் முகமது ஜூபில் மாட் சோம் கூறுகையில், “11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 7 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். மேலும் 25 பேரில் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்தோனேசிய தீவில் இருந்து கடற்பயணத்தை மேற்கொண்ட மேலும் 14 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த் துயர சம்பவத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் என்று புலம்பெயர்ந்தவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

காணாமல் போனவர்கள் தப்பியோடி மறைந்திருக்கலாம் அல்லது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் அவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் படகுகளையும் விமானத்தையும் அனுப்பியுள்ளனர்.

ஏழ்மையான பகுதிகளிலிருந்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரின் தாயகமாக உள்ளது மலேசியா. அவர்களில் பலர் ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றனர். மேலும் அவர்கள் கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Haryana election Exit Poll | அடித்து ஆடும் Rahul... சறுக்கிய Modi! ஹரியானா தேர்தல் EXIT POLLVanathi Srinivasan | விஸ்வகர்மா விவகாரம்”சாதி முலாம் பூசும் திமுக”வெடிக்கும் வானதிMahavishnu Bail |’’சேவை தொடரும்’’ஜாமீனில் வந்த மகாவிஷ்ணு!சிறை வாசலில் உற்சாக வரவேற்புWoman Police Attack | ”நீ எவன்ட வேணா சொல்லு”பெண் போலீஸ் மீது தாக்குதல்..நடுரோட்டில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாகிஸ்தானிலும் தமிழ்நாட்டிலும் போதைப்பொருள் கிடங்குகள் செயல்படுகிறது" தமிழ்நாடு ஆளுநர் ரவி பகீர்!
"சாவர்க்கர் பத்தி தப்பா பேசுறாங்க" மகாராஷ்டிராவில் கொந்தளித்த பிரதமர் மோடி!
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
Breaking News LIVE 6th OCT 2024: களைகட்டிய பிக்பாஸ் சீசன் 8.. இன்று மாலை 6 மணிக்கு..
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
வாட்ஸ் அப் ஸ்டேட்டஸை பார்த்து பதறிய நண்பர்கள்: பாலாற்றில் கருகிய நிலையில் கிடந்த நண்பனின் உடல்..!
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
ரசிகர்களே! சூர்யா படப்பிடிப்பில் துப்பாக்கியால் சரமாரியாக சுட்ட கார்த்திக் சுப்பராஜ் - என்னாச்சு?
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Vettaiyan Booking: வேட்டையன் ஆட்டம் ஆரம்பம்! விறுவிறுப்பாக நடக்கும் டிக்கெட்டுகள் விற்பனை - ரஜினி ரசிகர்கள் உற்சாகம்
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
Chennai Air Show 2024: களைகட்டும் சென்னை, மெரினாவில் விமானப்படை சாகச நிகழ்ச்சி - 72 விமானங்கள், 8,000 போலீசார், பலத்த பாதுகாப்பு
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
மக்களவைத் தேர்தல் முதல் சறுக்கல்! தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பால் பா.ஜ.க. அப்செட்!
Embed widget