மேலும் அறிய

மலேசியா: படகு கவிழ்ந்து விபத்து - 11 புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழப்பு; 25 பேர் மாயம்

மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. 

மலேசியாவில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேரை தேடும் பணி நடைபெற்று வருகின்றது. 

மலேசியாவின் தெற்குப் பகுதியில் படகு ஒன்று மூழ்கியதில் 11 இந்தோனேசிய அகதிகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் காணாமல் போயுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வேலை தேடும் இந்தோனேசியர்கள் சில சமயங்களில் அண்டை நாடான மலேசியாவிற்கு சட்டவிரோதமாக கடல் வழியாக பயணம் செய்வது வாடிக்கையாக இருந்து வருகிறது. 

மலேசியாவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள ஜோகர் மாகாணத்தில் அகதிகளை ஏற்றிக்கொண்டு படகு ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. அந்த படகில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 60 பேர் பயணம் செய்துள்ளனர். 

இந்த நிலையில் சற்றும் எதிர்பாராத வகையில் படகு திடீரென நீரில் கவிழ்ந்துள்ளது. இதில் படகில் இருந்த அனைவரும் நீரில் மூழ்கினர். இதுகுறித்து தகவல் அறிந்த மலேசிய கடலோர காவல் படையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்றனர். மேலும் மீட்பு படகுகளை கொண்டு தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டனர். 
இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களின் சடலங்களை கடலோர காவல்படையினர் மீட்டனர். மேலும் நீரில் தத்தளித்தபடி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த 24 பேரையும் வீரர்கள் பத்திரமாக மீட்டனர். மேலும் இந்த விபத்தில் 25 பேர் மாயமாகி உள்ளனர். அவர்களின் நிலை என்ன என்பது குறித்து தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடந்து வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். 

இதுகுறித்து கடலோர காவல் படைத் தலைவர் அட்மிரல் முகமது ஜூபில் மாட் சோம் கூறுகையில், “11 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. இதில் 7 பேர் ஆண்கள். 4 பேர் பெண்கள். மேலும் 25 பேரில் நிலை என்ன என்பது தெரியவில்லை. அவர்களை தேடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. 

இந்தோனேசிய தீவில் இருந்து கடற்பயணத்தை மேற்கொண்ட மேலும் 14 பேர் உயிருடன் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு, காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த் துயர சம்பவத்திற்கு ஆழந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். மலேசியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைய வேண்டாம் என்று புலம்பெயர்ந்தவர்களை நான் கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்தார். 

காணாமல் போனவர்கள் தப்பியோடி மறைந்திருக்கலாம் அல்லது நீரில் மூழ்கி இறந்திருக்கலாம் என நம்பப்படுகிறது. மேலும் அவர்களை கண்டுபிடிக்க அதிகாரிகள் படகுகளையும் விமானத்தையும் அனுப்பியுள்ளனர்.

ஏழ்மையான பகுதிகளிலிருந்து மில்லியன் கணக்கான புலம்பெயர்ந்தோரின் தாயகமாக உள்ளது மலேசியா. அவர்களில் பலர் ஆவணங்கள் இல்லாமல் இருக்கின்றனர். மேலும் அவர்கள் கட்டுமானம் மற்றும் விவசாயம் உள்ளிட்ட தொழில்களில் வேலை செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்
இல.கணேசனுக்கு தீவிர சிகிச்சை!தலையில் பலத்த காயம்! தற்போதைய நிலை என்ன? | La. Ganesan Hospitalized

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ajithkumar Murder: அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
அடப் பாவிங்களா.! பொய் புகாருக்கா அஜித்குமார அடிச்சு கொன்னீங்க.?! சிபிஐ விசாரணையில் பகீர் தகவல்
Indian Railways: பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
பண்டிகைக்கு ஊருக்கு போறவங்களுக்கு ஜாக்பாட்.! 20% தள்ளுபடியை அறிவித்த ரயில்வே - என்ன செய்யணும்.?
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
தமன்னாவின் எச்சில் பரு தீர்வு: உண்மை என்ன? மருத்துவர் ஃபரூக் அப்துல்லா எச்சரிக்கை!
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை..  பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
TVK Vijay: குலுங்கப் போகும் மதுரை.. பலத்தை காட்டப்போகும் விஜய்? தளபதி அரசியல் இனி அனல் பறக்குமா?
Operation Sindoor: ‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
‘ஆபரேஷன் சிந்தூர்‘; 6 பாகிஸ்தான் விமானங்களை போட்டுத்தள்ளிய இந்தியா - விமானப்படை தளபதி தகவல்
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
அனைத்து அரசு கல்லூரிகளிலும் புதிய குழு: மாணவர்களுக்கு விழிப்புணர்வு, சமூக மாற்றத்துக்கான தொடக்கம்!
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
ADMK DMDK: கூட்டணிக்கு ஓகே.. ஆனால்..! எடப்பாடிக்கு பிரேமலதா விஜயகாந்த் போட்ட கண்டிஷன் - என்னென்ன?
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
Independence Day Speech For Kids: சுதந்திர தின போட்டியில் கலக்கலாம்! குழந்தைகளுக்கு ஈஸியான டிப்ஸ்: வெற்றி நிச்சயம்!
Embed widget