மேலும் அறிய

"நிவாரணம் எங்களுக்கும் வேணும்" கொந்தளிக்கும் கிராம மக்கள்; தொடர் சாலை மறியல் - திணறும் விழுப்புரம் மாவட்டம்

விழுப்புரம் : பெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராம மக்களுக்கு நிவாரணம் வழங்கவில்லை என கூறி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சாலை மறியல்

விழுப்புரம்: திண்டிவனத்தில் ஃபெஞ்சல் புயல் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட ஓமந்தூர், உப்பு வேலூர் உள்ளிட்ட ஆறு கிராம மக்கள் நிவாரணம் வழங்கவில்லை என கூறி திண்டிவனம் புதுச்சேரி சாலையில் மறியலில் ஈடுபட்டதால் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
 
கிராம மக்கள் நிவாரணம் வழங்கவில்லை என கூறி தொடர் சாலை மறியல்
 
விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சல் புயல் காரணமாக 240 க்கும் மேற்பட்ட மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு நிவாரணம் வழங்கப்பட்டு வருகின்றன. திண்டிவனம், வானூர் போன்ற பல்வேறு இடங்களில் புயல்  நிவாரண உதவித்தொகை வழங்கவில்லை என கூறி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டு வந்தனர். சாலை மறியலுக்கு பிறகு அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட கிராமங்களுக்கு நிவாரணம் வழங்கபட்டு வருகின்றன.
 
திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு 
 
இந்நிலையில் திண்டிவனத்தில் இருந்து புதுச்சேரி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் ஓமந்தூர் பகுதியில் மழை, வெள்ள பாதிப்புக்கு உரிய நிவாரணம் வழங்கவில்லை எனக்கூறி ஓமந்தூர், உப்புவேலூர், கிளியனூர், அருவப்பாக்கம், வடசிறுவலூர், ஆதனப்பட்டு உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த  பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மறியல் காரணமாக திண்டிவனம்-புதுச்சேரி சாலையில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தினர்.
 
பேச்சுவார்த்தை உடன்பாடு எட்டாததால் அதன் பின்னர் வருவாய் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணம் வழங்கப்படுமென அறிவித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு சென்றனர். மறியல் காரணமாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன.
 
இதேபோல், செஞ்சி அடுத்த வடபுத்துார் கிராம மக்கள் வெள்ள நிவாரணம் கேட்டு அப்பகுதி மக்கள் 100க்கும் மேற்பட்டோர்  காலை 11:45 மணியளவில் செஞ்சி - திண்டிவனம் சாலையில் களையூர் கூட்ரோட்டில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற செஞ்சி டி.எஸ்.பி., கார்த்திகா பிரியா, காவல் ஆய்வாளர் பார்த்தசாரதி மற்றும் வருவாய்த் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், மாவட்ட ஆட்சியரிடம் பேசி வெள்ள நிவாரணம் பெற்று தருவதாக உறுதியளித்தனர். அதனையேற்று, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

தொடர்ந்து, வானூர் அருகே பெரிய கொழுவாரியில் மழையால் பாதிக்கப்பட்ட தங்களுக்கும் மழை நிவாரணம் வழங்க வேண்டும் எனக்கூறி அப்பகுதி மக்கள், பேருந்து நிறுத்தத்தில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்துவந்த கோட்டக்குப்பம் போலீசார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். போராட்டத்தால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

மரக்காணம் ஒன்றியம் கோவடி கிராம மக்களுக்கு நேற்றுவரை நிவாரணம் வழங்கவில்லை. அதனை கண்டித்து அப்பகுதி மக்கள் காலை 10:00 மணிக்கு, புதுச்சேரி - திண்டிவனம் புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம், திண்டிவனம் வட்டாட்சியர் சிவா மற்றும் கிளியனுா போலீசார், உரிய கணக்கெடுப்பு நடத்தி விரைந்து நிவாரணம் வழங்குவதாக உறுதி அளித்தார்.
 
இதே போல் பல்வேறு கிராமங்களில் பொதுமக்கள் மழை நிவாரணம் கிடைக்கவில்லை என கூறி சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அங்கங்கே போக்குவரத்து பதிப்பு ஏற்பட்டுள்ளது.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin:
MK Stalin: "போராட்டம்.. சிறை.. தியாகம்" - இதுதான் திமுக.. முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி!
Gold Rate New Peak: அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
அட ஆண்டவா.!! மீண்டும் ஒரு லட்சத்தை தாண்டி புதிய உச்சம் தொட்ட தங்கம் விலை - இப்போ எவ்வளவு .?
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
JACTO-GEO Strike: பேச்சுவார்த்தை தோல்வி.. இனி காலவரையற்ற போராட்டம்தான்; தேதி குறித்த ஆசிரியர், அரசு ஊழியர்கள் சங்கம்
TATA Sierra EV: அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
அடி தூள்.! டாடா சியரா எலக்ட்ரிக் காரின் சோதனை தொடங்கியது; என்னென்ன அம்சங்கள் இருக்கு தெரியுமா.?
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
செவிலியர்கள் போராட்டம் ; பொங்கலுக்கு முன்பு இது நடக்கும் !! அமைச்சர் மா.சுப்பிரமணியன் உறுதி
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Crime: கணவரை துண்டு துண்டாக வெட்டி கிரைண்டரில் அரைத்த மனைவி.. கள்ளக்காதல் விபரீதம்!
Embed widget