மேலும் அறிய

தாயை கைவிட்ட பிள்ளைகள்... கழிவறையில் தங்கும் அவலம்... உதவிக்கரம் நீட்டுமா அரசு ?

விக்கிரவாண்டி அருகே மகன், மகள்கள் விட்டு சென்ற நிலையில் வீடு இல்லாமல் அரசு கட்டிகொடுத்த கழிவறையில் வசிக்கும் மூதாட்டி.

விழுப்புரம்: விக்கிரவாண்டி அருகே மகன், மகள்கள் விட்டு சென்ற நிலையில் மூதாட்டி ஒருவர் வீடு இல்லாமல் அரசு கட்டிக்கொடுத்த கழிவறையில் வசித்து வருவது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கணவர் உயிரிழந்த நிலையில் மகன், மகள்கள் விட்டுச் சென்றதால் ஒரு வருடமாக அரசு கட்டிகொடுத்த கழிவறையில் வசித்து வரும் 70 வயது மூதாட்டியின் நிலைமை சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விக்கிரவாண்டி அடுத்த வெட்டுக்காடு கிராமத்தைச் சேர்ந்த மூதாட்டி மாரிமுத்து(70), இவருக்கு ஒரு மகன் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். மூவருக்கும் திருமணம் நடைபெற்று அவர்களது மாமியார் வீட்டோடவே சென்றுவிட்டனர். மாரிமுத்துவின் கணவர் ராஜாராம் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு உயிரிழந்துள்ளார். அப்போதிலிருந்து மாரிமுத்துவின் மகன் மற்றும் 2 மகள்கள் எவரும் மூதாட்டி மாரிமுத்துவை கண்டுகொள்ளாமல் தனியாக விட்டு சென்றுள்ளனர்.

தொடர்ந்து வெட்டுகாடு கிராமத்தில் உள்ள சொந்த குடிசை வீட்டில் தனியாக மூதாட்டி மாரிமுத்து கூலி வேலைகளுக்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு பெய்த கனமழையால் மூதாட்டி மாரிமுத்துவின் குடிசை வீடு சேதமடைந்துள்ளது. இதுகுறித்து அக்கிராம விஏஓவிடம் கேட்டதற்கு பட்டா இல்லாததால் அரசு உதவி செய்ய முடியாது என்று கூறியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மூதாட்டியிடம் இருந்த கொஞ்சம் பணத்தால் பிளாஸ்டிக் கவரால் கூறை வீட்டை பராமரித்துள்ளார். அதுவும் கடந்த ஆண்டு அடித்த பலத்த காற்று மழையில் சேதமடைந்துள்ளது. இதனால் செய்வதறியாத மூதாட்டி அப்பகுதியில் உள்ள கோயில், மற்றும் பொது இடங்களில் படுத்து உறங்கி வந்துள்ளார்.

தொடர்ந்து அவரது வீட்டில் அரசு கட்டிகொடுத்த சிறு கழிவறையில் அவரது துணிமணிகள், ரேஷன் பொருட்கள், பாத்திரங்களை வைத்துகொண்டு கடந்த ஒரு வருடமாக கழிவறையிலே உட்கார்ந்தபடி படுத்து உறங்கி வாழ்ந்து வருவதாக கூறினார். மேலும் வரும் நாட்கள் மழைக்காலம் என்பதனால் வெளியில் தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது எனவே தமிழ்நாடு அரசு வீடு கட்டித் தருமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
தமிழகத்தில் இன்று ( 20.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள் - லிஸ்ட் இதோ
Rasi Palan Today, Sept 20: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மிதுனத்துக்கு மகிழ்ச்சியான நாள், மன வருத்தங்கள் நீங்கும்.. உங்கள் ராசிக்கான பலன்
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
ஒரே நாடு ஒரே தேர்தல்.. நவீன் பட்நாயக் எடுத்த முடிவு.. பாஜகவுக்கு கஷ்டம்தான் போலயே!
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
பரபரப்பு..!ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் செல்வப்பெருந்தகைக்கு தொடர்பு.? ராகுல் காந்திக்கு BSP கடிதம்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Embed widget