![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
மயிலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - சிக்கிய லஞ்ச பணம்
மயிலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸின் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.3.60 லட்சம் லஞ்சப்பணம் சிக்கியது.
![மயிலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - சிக்கிய லஞ்ச பணம் Villupuram 3.60 lakhs in bribe money was caught in anti bribery police raid at Mailam Registrar office TNN மயிலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனை - சிக்கிய லஞ்ச பணம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/08/24/c1840e5111a2d688aa31576fbd6ff5241692847228540113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த மயிலம் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்பு போலீஸ் அதிரடி சோதனையில் கணக்கில் வராத ரூ.3.60 லட்சம் லஞ்சப்பணம் சிக்கியது. விழுப்புரம் அடுத்த மயிலத்தில் செயல்படும் சார்பதிவாளர் அலுவலகத்தில் நடைபெறும் பத்திர பதிவுகளுக்கு லஞ்சம் பெறப்படுவதாக பல்வேறு புகார்கள் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தொடர்ந்து வந்தது. இந்த நிலையில், நேற்று இரவு 8.00 மணிக்கு சார்பதிவாளர் அலுவலகத்தில் விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையில் 7 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் குழு திடீர் சோதனை மேற்கொண்டது.
7.00 மணியிலிருந்து இரவு 12 மணி வரை நடைபெற்ற சோதனையில் பத்திர பதிவுகளில் கணக்கில் வராத ரூ.3.60 லட்சம் ரூபாய் சிக்கியது. இதனை அடுத்து சார்பதிவாளர் சங்கீதா மற்றும் இடைத்தரகர் பாலமணிகண்டனிடம் மேற்கொண்ட முதற்கட்ட விசாரணையில், 3.60 லட்சம் ரூபாய் லஞ்சமாக பெறப்பட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி சத்யராஜ் தலைமையிலான போலீசார் எந்தெந்த பத்திர பதிவுகளுக்காக யார் யாரிடம் இந்த பணம் பெறப்பட்டுள்ளது குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விழுப்புரம் மாவட்ட செய்திகள் :
Villupuram: பேக்கரி கடையில் சாப்பிட்ட கேக்கில் பல்செட்... அதிர்ச்சியில் உறைந்த வாடிக்கையாளர்..!
செம்மண் குவாரி வழக்கு: நேரில் ஆஜரான அமைச்சர் பொன்முடி; 29ம் தேதி ஒத்திவைத்த நீதிபதி
வாடிக்கையாளரிடம் முன்பணம் பெற்று ரூ. 27 லட்சம் மோசடி; விழுப்புரத்தில் கார் நிறுவன மேலாளர் கைது
புதுச்சேரி, விழுப்புரம், கள்ளகுறிச்சி பகுதியில் உள்ள பொதுமக்களின் பிரச்சனைகளை தெரிவிக்க +918508008569 என்கின்ற எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)