மேலும் அறிய
கடலூரில் பிபின் ராவத் ஐம்பொன் சிலை - முன்னாள் ராணுவ வீரர்கள் மரியாதை
கடலூர் வந்த முன்னாள் முப்படை தளபதி பிபின் ராவத் ஐம்பொன் சிலைக்கு முன்னாள் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் மரியாதை செலுத்தினர்.

பிபின் ராவத்தின் பொன்சிலை
இந்தியாவின் முப்படை தளபதி பிபின்ராவத் நினைவை போற்றும் வகையில் 150 கிலோவில் ஐம்பொன் சிலை உருவாக்கம், வரும் டிசம்பர் மாதம் 10ஆம் தேதி புதுடெல்லி ராணுவ தலைமையகத்தில் வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நீலகிரி மாவட்டத்தில் முப்படை தளபதி பிபின்ராவத் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றிய பணிகளையும் அவரது நினைவை போற்றும் வகையில் கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் ராணுவ வீரர்கள் மற்றும் ஷைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் பவுண்டேஷன் சார்பில் 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை உருவம் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது.
கும்பகோணத்தில் தயார் செய்துள்ள ஐம்பொன் சிலை இன்று கடலூர் நகர அரங்கு அருகே கொண்டுவரப்பட்டு அங்கு கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் தலைமையில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் மறைந்த முன்னாள் முப்படை தளபதி ஜெனரல் பிபிஎன் ராவத் திருஉருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதன்பின்னர் நாளை புதுச்சேரியில் இருந்து ரயில் மூலமாக புது டெல்லிக்கு கொண்டு செல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அடுத்த மாதம் பத்தாம் தேதி புதுடெல்லியில் உள்ள ராணுவ தலைமையகத்தில் வைக்க உள்ளதாக முன்னாள் ராணுவ வீரர் தகவல், பிபின் ராவத் சிலையை பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து சென்றனர்.

இது ஐம்பொன்னால் உருவம் செய்த முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கூறுகையில், “மறைந்த முப்படை தளபதி ஜெனரல் பிபின்ராவத் அவர்களின் மறைவு மிகவும் துயரமானது. அவர் இந்திய நாட்டிற்கு ஆற்றிய சேவையை போற்றும் வகையில் தமிழகத்தில் உயிரிழந்ததை தொடர்ந்து, அவருக்கு ஒரு நினைவுச் சின்னத்தை உருவாக்க முடிவு செய்து கடலூர் மாவட்டத்தில் உள்ள முன்னாள் படை வீரர்கள், சைன் இந்தியன் சோல்ஜர்ஸ் சோசியல் வெல்பர் ஃபவுண்டேஷன் இணைந்து அவருக்கான சிலை செய்ய முடிவு செய்தோம். கும்பகோணத்தில் உள்ள ராமசாமி சிற்பக் கலைக்கூடத்தில் அதற்கான பணிகள் ஒரு ஆண்டு காலமாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடிவு பெற்று 150 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலை உலகில் முதல் முறையாக ராணுவ வீரர்களுக்க உருவாக்கப்பட்ட சிலை இதுவே ஆகும்.
இதை நாங்கள் புதுடெல்லியில் ராணுவ தலைமையகத்தில் வைக்க அனுமதி கேட்டு இருந்தோம் அதற்கான அனுமதி கடிதம் எங்களுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கிடைத்தது. இதனை தொடர்ந்து வருகின்ற ஒன்றாம் தேதி புதுச்சேரியில் இருந்து யில் மார்க்கமாக கொண்டு சென்று டிசம்பர் 10ஆம் தேதி வைக்க திட்டமிட்டுள்ளோம். இது இந்திய நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு இந்திய தேசபற்று நாங்கள் வெளிப்படுத்த ஏற்பாடு செய்துள்ளோம். இந்திய ராணுவ வீரர்கள் நாட்டிற்கு எந்த அளவு சேவையாற்றி வருகிறார்கள். அவர்களின் நினைவை போற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இந்த ஐம்பொன் சிலையை உருவாக்கி உள்ளோம். இந்த சிலை 150 கிலோ எடை கொண்டது. இதன் மதிப்பு சுமார் 5 லட்சம் மதிப்பாகும் இந்த சிலையை இந்திய அரசிடம் நாங்கள் ஒப்படைக்க உள்ளோம்” என தெரிவித்தனர்
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் படிக்கவும்
Advertisement


470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
உலகம்
Advertisement
Advertisement