மேலும் அறிய

’பட்டியலின பெண்ணை இழிவுப்படுத்திய விவகாரம்’ சிதம்பரம் கோயில் தீட்சதர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி போராட்டம்..!

சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க தனி சட்டம் இயற்ற வேண்டும், நந்தன் நுழைந்த வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றி மக்கள் செல்ல அனுமதிக்க கோரி முழக்கம்

கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் உலக புகழ் பெற்ற நடராஜர் ஆலயம் உள்ளது இந்த கோயில் தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கோவிலை தீட்சிதர்களே நிர்வகித்து பூஜை செய்து வருகின்றனர். கொரோனா தொற்று காரணமாக கோயிலில் மேல் உள்ள சிற்றம்பல மேடையில் ஏறி பக்தர்கள் உள்ளிட்ட யாரும் சாமி தரிசனம் செய்யக் கூடாது என தீட்சிதர்கள் கட்டுப்பாடு விதித்திருந்தனர்.  இந்த நிலையில் கடந்த 13ஆம் தேதி காலை சிதம்பரம் பழைய புவனகிரி ரோட்டை சேர்ந்த ஜெயசீலா (37) என்பவர் நடராஜரை தரிசனம் செய்ய கனகசபைக்கு சென்று உள்ளார். அப்போது அங்கு இருந்த சில தீட்சிதர்கள் ஜெயசீலாவை கடுமையாக திட்டி, தாக்கி வெளியே அனுப்பி வைத்து உள்ளனர், இதுகுறித்த வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வந்தது.
 

’பட்டியலின பெண்ணை இழிவுப்படுத்திய விவகாரம்’ சிதம்பரம் கோயில் தீட்சதர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி போராட்டம்..!
 
பின்னர் இந்த சம்பவம் குறித்து ஜெயசீலா சிதம்பரம் நகர காவல் துறையினரிடம் புகார் அளித்தார். அதன் பேரில் சிதம்பரம் காவல் துறையினர் புகாரின் பேரில் விசாரணை செய்து வந்தனர். பெண் பக்தரின் புகாரின் பேரில் கடந்த 16 ஆம் தேதி சிதம்பரம் நகர காவல் துறையினர் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.இந்த நிலையில் இன்று திராவிடர் கழகம், பெரியார் திராவிட கழகம், மே 17 இயக்கம் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை இழிவுபடுத்திய சிதம்பரம் கோயில் தீட்சதர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரியும் கோயிலை இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவரவும் வலியுறுத்தி கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
 

’பட்டியலின பெண்ணை இழிவுப்படுத்திய விவகாரம்’ சிதம்பரம் கோயில் தீட்சதர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி போராட்டம்..!
 
இந்த போராட்டத்தில் திராவிடர் கழக பொது செயலாளர் துரை.சந்திரசேகர் மற்றும் விடுதலை சிறுத்தை துணை பொது செயலாளர் வன்னியரசு ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். அப்பொழுது பேசிய விடுதலை சிறுத்தை துணை பொது செயலாளர் வன்னியரசு, சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த பெண்ணை இழிவுபடுத்தி தீண்டாமை செயலில் ஈடுபட்ட தீட்சிதர்கள் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தும், வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்தால் 24 மணி நேரத்தில் கைது செய்ய வேண்டும் ஆனால் இதுவரை கைது அவர்களை செய்யாதது ஏன் என கேள்வி இழுப்பினார், தொடர்ந்து பேசிய அவர் ஏற்கனவே இந்து அறநிலையத்துறை வசம் இருந்த நடராஜர் கோயிலை மீண்டும் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
 

’பட்டியலின பெண்ணை இழிவுப்படுத்திய விவகாரம்’ சிதம்பரம் கோயில் தீட்சதர்களை வன்கொடுமை சட்டத்தில் கைது செய்யக்கோரி போராட்டம்..!
 
மேலும், பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற அமைப்புகள் தமிழ் தேசியத்தை திராவிடத்தி்ற்கு எதிராக திசை திருப்ப முயற்சி செய்து வருகின்றனர், இங்கும் அதற்கு நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகளும் சங்பரிவார் அமைப்புகளுடன் இணைந்து தமிழ் தேசியம் பற்றி ஒன்றும் தெரியாமல் திராவிடத்திற்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர் ஆகையால் நாம் எச்சரிக்கையோடு செயல்பட்டு சமூக நீதியை மீட்க வேண்டும், என பேசி நாம் தமிழர் கட்சியை சாடினார்.மேலும் இந்த போராட்டத்தில் சிதம்பரம் நடராஜர் கோவிலை மீட்க தனி சட்டம் இயற்ற வேண்டும், நந்தன் நுழைந்த வாயில் தீண்டாமைச் சுவரை அகற்றி மக்கள் செல்ல அனுமதிக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளை முன் வைக்கப்பட்டன.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை
Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Sengottaiyan on Vijay: “2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
“2026-ல் விஜய்தான் முதல்வர்“, அந்த சக்தியால் இது நிச்சயம் நடக்கும்.. செங்கோட்டையன் கூறியது என்ன.?
Trump to Ban Migration: துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
துப்பாக்கிச் சூட்டால் பீதி; 3-ம் உலக நாட்டினர் குடியேற நிரந்தர தடை; ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
CM Stalin Alert: டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
டிட்வா புயல்; “பொதுமக்கள் அவசியமின்றி வெளியே வர வேண்டாம்“ - முதலமைச்சர் ஸ்டலின் விடுத்த அலெர்ட்
TN Weather Report: டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
டேஞ்சர் மோடில் வரும் ‘டிட்வா‘; எந்தெந்த மாவட்டங்கள்ல அதிகனமழை.? - வானிலை மைய அப்டேட் இதோ
TN School Leave: டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
டிட்வா புயலால் கனமழை எச்சரிக்கை; தமிழ்நாடு முழுவதும் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
Ditwah Cyclone: பீதியை கிளப்பும் டிட்வா! பள்ளிகளுக்கு விடுமுறை.. நாளை எங்கெல்லாம் ரெட் அலர்ட்
ராட்சசன்
ராட்சசன் "டிட்வா" புயல் வருது... உடனே களத்தில் இறங்குங்க- திமுகவினருக்கு ஸ்டாலின் அதிரடி உத்தரவு
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
ரயில் பயணிகளுக்கு குஷியான அறிவிப்பு.! ஜனவரி 1 முதல் புதிய திட்டம் தொடக்கம்- தெற்கு ரயில்வே அசத்தல்
Embed widget