மேலும் அறிய

மதுபானக் கடைகளை மூட உத்தரவு! ஏன் எதற்கு தெரியுமா ?

புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் சாராயக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது.

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் வரும் 11-ம் தேதி மதுபானக் கடை மற்றும் சாராயக் கடைகளை மூட கலால் துறை உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரியில் இயங்கி வரும் மதுபான கடைகள், சாராயம்- கள்ளுக்கடை போன்றவை, வழக்கமாக முக்கிய நாட்களில் மூடப்படுவது வழக்கம். அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் அன்று மதுபான கடைகள் மூடப்படும்.

அதன்படி ஒவ்வொரு ஆண்டும் திருவள்ளுவர் தினம், குடியரசு தினம், காந்தி ஜெயந்தி, மகாவீரர் ஜெயந்தி, நபிகள் நாயகம் ஜெயந்தி, வடலூர் ராமலிங்கர் நினைவு தினம், சுதந்திர தினம், உழைப்பாளர்கள் தினம் அன்று மதுபான கடைகள் மூடப்படும்.

அந்த வகையில், புதுச்சேரியில் வள்ளலார் தினத்தையொட்டி பிப்ரவரி 11ஆம் தேதி சாராயம், கள்ளுக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் பிறப்பித்துள்ள உத்தரவில், ‘வள்ளலார் ஜோதி தினத்தையொட்டி வரும் 11-ம் தேதி புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் இயங்கும் அனைத்து கள், சாராயம், பார் உட்பட அனைத்து மதுக்கடைகளும் , மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார் மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் அனைத்து கடைகளிலும் மது விற்பனை தடை செய்யப்படுகிறது. மீறுவோர் மீது கலால் சட்ட விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ என எச்சரித்துள்ளார்.

வள்ளலாரின் 154 வது ஜோதி தரிசன விழா

வள்ளலார் தர்ம ஞானசபையில் கண்ணாடிக்கு முன்னாள் உள்ள ஏழு வண்ண திரைகள் நீக்கப்பட்டு, நிலை கண்ணாடிக்கு பின் உள்ள ஜோதி தரிசனம் காட்டப்படும். இந்த ஆண்டு வடலூர் வள்ளலாரின் 154 வது ஜோதி தரிசன விழாவாக நடைபெற உள்ளது. 

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்'

'வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன்' என அனைத்து உயிர்களிடத்தும் அன்பு செலுத்துவது, உணவே மருந்து என உணவு ஒழுங்கு முறை கட்டுப்பாடு ஆகியவற்றை உலகிற்கு போதித்தவர் ராமலிங்க அடிகளார். யாரும் பசியால் இறக்கக் கூடாது என்பதற்காக சன்மார்க் சங்கத்தை நிறுவி 24 மணி நேரமும் அன்னதானம் வழங்கும் முறையை கொண்டு வந்தவர். அதனாலேயே இவரை அடியவர்கள் வள்ளலார் என அழைக்கின்றனர்.

இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ஆன்மிக நெறி முறை

இறைவனை ஒளி வடிவமாக வணங்கும் ஆன்மிக நெறி முறையை வகுத்தவர். வள்ளலார். இறைவனுக்கு உருவம் கிடையாது. அவர் ஜோதி வடிவானவர் என அனைவருக்கும் போதித்தவர். இவர் கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூரில் அவதரித்தார். வள்ளலார், இறைவனுடன் ஜோதியாக கலந்த தினம் தைப்பூச திருநாள்.

இதன் நினைவாக மாதந்தோறும் வள்ளலார் நிறுவிய வடலூர் தர்ம ஞான சபையில் பூசம் நட்சத்திரத்தன்று 7 திரைகள் விலக்கி ஜோதி தரிசனம் காட்டப்படும். இருந்தாலும் வள்ளலார் முக்தி அடைந்த தைப்பூச தினம் என்பதால், அன்றைய தினம் நடக்கும் ஜோதி தரிசனமே மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த நாளிலேயே உலகின் பல பகுதிகளில் இருந்தும் வள்ளலாரின் கொள்கைகளை பின்பற்றும் பலரும் வடலூர் தலத்தில் கூடுகின்றனர். அன்றைய தினம் நாள் முழுவதும் அன்னதானம் நடந்து கொண்டே இருக்கும். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
இன்று தொடங்கும் குளிர்கால கூட்டத்தொடர்.. கார்குண்டு வெடிப்பு முதல் வாக்காளர் பட்டியல் திருத்தம் வரை - அனல் பறக்கப்போகும் வாதம்
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
TN Weather Update: வடமாவட்டங்களை ஏமாற்றிப்போன டிட்வா புயல், கனமழை தொடருமா? தமிழக வானிலை அறிக்கை
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
சாதிய ஆணவம்..அடித்து, சுட்டு, தலையை நசுக்கி கொலை, காதலனின் உடலுடன் திருமணம் செய்துகொண்ட காதலி
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
Kia Seltos: முழு வீச்சில் கியா செல்டோஸ் டெஸ்டிங்.. டிச.10 சம்பவம் - அப்க்ரேடில் வந்துள்ள அம்சங்கள், வசதிகள்
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
விலைவாசியை கட்டுப்படுத்த திமுக அரசு முயற்சிக்கவில்லை - விலைப்பட்டியலை வெளியிட்டு இபிஎஸ் குற்றச்சாட்டு
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
லாயக்கற்றவர்.. சுயநலவாதி.. துரோகி.. செங்கோட்டையனை விளாசித் தள்ளிய எடப்பாடி பழனிசாமி!
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
சென்னை ; காரில் கடத்தி வரப்பட்ட 265 கிலோ புகையிலை !! அதிரடியாக பறிமுதல் செய்த போலீசார்
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Tirupattur Bus Accident: நேருக்கு நேருக்கு மோதிய அரசுப் பேருந்துகள்..திருப்பத்தூரில் கோர விபத்து
Embed widget