மேலும் அறிய

இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை... தாக்குபிடிக்குமா விழுப்புரம்...?

விழுப்புரம் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது...

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம், மரக்காணம் மற்றும் அதனை சுற்றியுள்ள ஓலக்கூர், மயிலம், கூட்டேரிப்பட்டு, கிளியனூர், வெளிமேடுபேட்டை, மரக்காணம், முருக்கேரி, பிரம்மதேசம் உள்ளிட்ட பகுதிகளில் இரவு முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால் பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும் பல்வேறு இடங்களில் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்றைய தினம் விழுப்புரத்தில் மாலையில் இரண்டு மணி நேரம் பெய்த கனமழையில் விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் மழை நீர் குளம்போல் தேங்கியதால் பேருந்து பயணிகளும், ஓட்டுனர்களும் பாதிப்படைந்தனர். இந்த நிலையில் விழுப்புரம் மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் சாலை விரிவாக்க பணிக்காக பல்வேறு இடங்களில் தொடண்டபட்டுள்ள பள்ளங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம் செய்து வருகின்றனர்.

காற்றழுத்த தாழ்வு

நேற்று உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தென்மேற்கு மற்றும் அதை ஒட்டிய மேற்கு மத்திய வங்கக்கடலில் வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று மே 23, 2024 மேற்கு மத்திய மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ளது.

இது தொடர்ந்து வடகிழக்கு நோக்கி நகர்ந்து நாளை (மே 24 ஆம் தேதி) காலை வங்கக்கடலில் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும். இது வடகிழக்கு திசையில் நகர்ந்து மேலும் தீவிரமடைந்து 25 ஆம் தேதி மாலைக்குள் வடகிழக்கு மற்றும் வடமேற்கு வங்கக்கடலில் நிலைக்கொள்ளக்கூடும்.

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரிய அளவு மழை இருக்காது என தனியார் வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக நெல்லை, குமரி, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழை முதல் மிக கன மழை பதிவாகி வருகிறது.

இடி மின்னலுடன் கூடிய மழை 

அந்த வகையில்  , தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

அதேபோல் நாளை, தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை  மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், திண்டுக்கல், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என கணிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு: (செண்டிமீட்டரில்)

வேப்பூர் (கடலூர் மாவட்டம்) 20, காட்டுமயிலூர் (கடலூர் மாவட்டம்) 18, விழுப்புரம் (விழுப்புரம் மாவட்டம்) 17, மைலாடி (கன்னியாகுமரி மாவட்டம்) 14, லக்கூர் (கடலூர் மாவட்டம்), தொழுதூர் (கடலூர் மாவட்டம்) தலா 13,  குண்டேரிப்பள்ளம் (ஈரோடு மாவட்டம்), வால்பாறை தாலுகா அலுவலகம் (கோவை மாவட்டம்) 12, தம்மம்பட்டி (சேலம் மாவட்டம்) தலா 12,  வால்பாறை பிஏபி (கோயம்புத்தூர் மாவட்டம்), கொடநாடு (நீலகிரி மாவட்டம்) தலா 11,  அவினாசி (திருப்பூர் மாவட்டம்), கெத்தை (நீலகிரி மாவட்டம்), கோபிசெட்டிபாளையம் (ஈரோடு மாவட்டம்) தலா 10,  பில்லிமலை எஸ்டேட் (நீலகிரி மாவட்டம்), குந்தா பாலம் (நீலகிரி மாவட்டம்), வேடசந்தூர் (திண்டுக்கல் மாவட்டம்), புகையிலை நிலையம் (விடிஆர்) (திண்டுக்கல் மாவட்டம்) தலா 9 செ.மீ மழை பதிவாகியுள்ளது.   

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  55 வருடங்களாக திரைத்துறையில் பயணித்து 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கவிதா கிருஷ்ணமூர்த்தி
ABP Southern Rising Summit 2025 LIVE: 55 வருடங்களாக திரைத்துறையில் பயணித்து 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கவிதா கிருஷ்ணமூர்த்தி
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  55 வருடங்களாக திரைத்துறையில் பயணித்து 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கவிதா கிருஷ்ணமூர்த்தி
ABP Southern Rising Summit 2025 LIVE: 55 வருடங்களாக திரைத்துறையில் பயணித்து 20,000-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கவிதா கிருஷ்ணமூர்த்தி
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
CM MK Stalin: உலகத்தரம் வாய்ந்த கோவை செம்மொழி பூங்கா.. திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்!
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Annamalai: கூட்டணிக்காக அமைதி! நேர்மையாக இருந்தும் 90 வழக்குகள்.. அண்ணாமலை பெப் டாக்
Anbumani: சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
சாதிவாரி கணக்கெடுப்பில் இட ஒதுக்கீட்டை தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன - அன்புமணி பளிச் பதில்
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
IND vs SA: தோல்வியின் பிடியில் இந்தியா.. ஒரே நாளில் 500 ரன்கள் எடுக்குமா? ஒயிட்வாஷ் ஆகுமா?
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்... மானியத்துடன் கூடிய கடனுதவி: பயன்பெற கலெக்டர் அழைப்பு
மகளிர் தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டம்... மானியத்துடன் கூடிய கடனுதவி: பயன்பெற கலெக்டர் அழைப்பு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Embed widget