மேலும் அறிய

கடலூர்: மாற்று இடம் கேட்டதற்காக குறவர்கள் மீது தாக்குதல் - மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது

''பன்றி மேய்க்கிற குர பயல்களுக்கு இடம் வேண்டுமா என்று கேட்டு ஆபாச வார்த்தைகளால் திட்டியதாக புகார்’’

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள ஓமாம்புலியூர் கிராமத்தில் கொள்ளிடம் கரையோரத்தில் சுமார் 7க்கும் மேற்பட்ட மலைவாழ் குறவர்கள் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர், இவர்கள் அதே ஆற்றுப்படுகையில் பன்றி வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து  கடந்த சில நாட்களாக பல்வேறு மாவ்டங்களில் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னை, வேலூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் போன்ற பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. தொடர் கன மழையால் கடலூர் தென்பெண்ணை ஆற்றில் பெருக்கெடுத்து ஓடிய மழைவெள்ளத்தால் மாவட்டத்தில் பண்ருட்டி, நெல்லிக்குப்பம், கடலூர் நகர பகுதிகள் மற்றும் ஆற்றின் கரையோர கிராம பகுதிகள் பெரிதும் பாதிக்கப்பட்டன. 
 

கடலூர்: மாற்று இடம் கேட்டதற்காக குறவர்கள் மீது தாக்குதல் - மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது
 
மேலும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கடலூரில் 50க்கு மேற்பபட்ட கிராமங்களிலும் குடியிருப்புகளில் வெள்ளம் சூழ்ந்ததால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் கொள்ளிடம் ஆற்றில் உபரி நீர் திறப்பு அதிகரிப்பால் அங்கு வசித்து வந்த மலைவாழ் மக்களை வெளியே வரும்படி வருவாய் கோட்டாட்சியர் மற்றும் காட்டுமன்னார்கோவில் தாசில்தார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அவர்களிடம் மலைவாழ் குறவர்கள் ஆண்டுதோறும் இதே நிலை தான் எங்களுக்கு ஏற்படுகிறது ஆகவே நிரந்தரமாக வீடு கட்டுவதற்கு இடம் வேண்டும் என கேட்டதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததாக தெரிகிறது அதிகாரிகள் சென்றவுடன் மாற்று சமூகத்தைச் சேர்ந்த கண்ணையன், துரைப்பாண்டி, ராமு மற்றும் சிலர் நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் தெரு விளக்கை அணைத்துவிட்டு கழி மற்றும் இரும்பு கம்பியைக் கொண்டு மலைவாழ் குறவர்களான கொளஞ்சி, ராம்கி, சுமதி, சுகன்யா, உள்ளிட்ட பெண்களையும் கடுமையாக தாக்கி உள்ளனர். மேலும் பன்றி மேய்க்கிற குர பயல்களுக்கு இடம் வேண்டுமா என்று கேட்டும் அவர்களை அசிங்கமான வார்த்தைகளால் திட்டியும் அவதூராக பேசியும் தாக்கியதாக கூறப்படுகிறது. 

கடலூர்: மாற்று இடம் கேட்டதற்காக குறவர்கள் மீது தாக்குதல் - மாற்று சமூகத்தை சேர்ந்தவர்கள் கைது
 
இதில் பலத்த அடி மற்றும் காயம்பட்ட நான்கு பேரும் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் இவர்களைத் தாக்கிய கண்ணையன் மற்றும் ராமு ஆகிய இருவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் காட்டுமன்னார்கோவில் போலீசார் கைது செய்துள்ளனர். மேலும் இந்த சம்பவத்தில் ஈடுபட்ட சிலரை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவத்தை  அறிந்த காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன் நேரில் சென்று பார்வையிட்டு நடந்த சம்பவங்களை கேட்டறிந்து ஆறுதல் கூறினார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Chennai Udhayam Theatre: சென்னை உதயம் தியேட்டர் இருந்த இடத்துல என்ன வருதுன்னு தெரியுமா.? கேட்டா அசந்து போய்டுவீங்க...
சென்னை உதயம் தியேட்டர் இருந்த இடத்துல என்ன வருதுன்னு தெரியுமா.? கேட்டா அசந்து போய்டுவீங்க...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Prashant Kishor On Vijay: விஜய்க்கு 15% - 20% வாக்கு? TWIST கொடுத்த PK! குழப்பத்தில் தவெகPetrol Bunk Scam: ”நீங்க போடுறது பெட்ரோல்லா” வெளுத்துவாங்கிய டாக்டர் BUNK-ல் முற்றிய தகறாறுலேடி கெட்டப்பில் நானா? கோபமான விக்ரமன்! நடந்தது என்ன?”அமைச்சர்களோட இருக்கீங்களா? ஒருத்தரையும் விட மாட்டேன்” அதிமுகவினரிடம் சூடான EPS

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
சென்னை மக்களே! இன்னும் 24 மணிநேரம் இடியுடன் வெளுக்கப் போகுது மழை! மற்ற மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
NEET UG 2025: இன்றே கடைசி; நீட் தேர்வர்களே மிஸ் பண்ணிடாதீங்க! இனி வாய்ப்பில்லை!
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
TN Govt Bus: மகளிருக்கான கூடுதல் சலுகை..! லக்கேஜ்களுக்கு கட்டணமில்லை, பணம் மிச்சம் - அரசு அறிவிப்பு
Chennai Udhayam Theatre: சென்னை உதயம் தியேட்டர் இருந்த இடத்துல என்ன வருதுன்னு தெரியுமா.? கேட்டா அசந்து போய்டுவீங்க...
சென்னை உதயம் தியேட்டர் இருந்த இடத்துல என்ன வருதுன்னு தெரியுமா.? கேட்டா அசந்து போய்டுவீங்க...
Zelenskyy vs Trump: வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
வாக்குவாதம் செய்ததற்கு மன்னிப்பு கேட்டாரா ஜெலன்ஸ்கி.? ட்ரம்ப்பின் சிறப்பு தூதர் கூறுவது என்ன.?
CSK IPL Journey: சிஎஸ்கே, தல தோனியின் படை..! மறக்க முடியாத சென்னை அணியின் போட்டிகள் - தரமான சம்பவங்கள்
CSK IPL Journey: சிஎஸ்கே, தல தோனியின் படை..! மறக்க முடியாத சென்னை அணியின் போட்டிகள் - தரமான சம்பவங்கள்
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Share Market: ட்ரம்ப் பாத்துவிட்ட வேலை..! சடசடவென சரிந்த இந்திய பங்குச்சந்தை, கதறும் முதலீட்டாளர்கள் - காரணம் என்ன?
Elon Musk: வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
வான்டடாக வாயை கொடுத்து வாங்கிக் கட்டிக்கொண்ட மஸ்க்.. யாரிடம் தெரியுமா.?
Embed widget