மேலும் அறிய

அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம் - 2 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம் அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில் அர்ச்சகர்கள் சோமநாதன், முத்துக்குமாரசாமி 6 மாதத்திற்கு சஸ்பெண்ட்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் தலமாகும் விலங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவியில் ஆகும். கோவிலின் பின்புறம் சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சுற்றிலும் உள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. அண்ணாமலையார் கோவிலுக்கு வெளிமாநிலம் , வெளிநாட்டு, வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தபின்பு கிரிவலம் சுற்றி வருகின்றனர். அதிக அளவில் அண்ணாமலையார் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவதால் கோவிலில் உள்ள பிரசாத பைகளுக்கு , வெளியில் உள்ள தனியார் மொபைல் கடைகள், துணிக்கடைகள், நகைகடைகள் போன்றவர்கள் தங்களின் கடையின் விளம்பரங்களை விபூதி மற்றும் பிரசாதம் தரக்குடிய பொருட்களில் அச்சடித்து அதனை நன்கொடையாக கோவிலுக்கு அளிக்கின்றனர். அதனை கோவிலில் பணிபுரியும் கோவில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் லஞ்சமாக பெற்றுக்கொண்டு பக்தர்களுக்கு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையின் லோகோ அன்னை தெரசா புகைப்படம் கூடிய அன்பின் கரங்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்களோடு கோவிலில் உள்ள விபூதி பாக்கெட்டுகளில் இருந்ததை கண்டு ஆன்மீக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 


அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்  - 2 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்

 

இதனை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அன்னை தெரசா பொறித்த புகைப்படம் கொண்ட விபூதி பாக்கெட்டுகளை எடுத்துகொண்டு அண்ணாமலலயார் கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அப்போது இந்து அமைப்பினர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் விபூதி பிரசாதம் கொடுக்கப்படும் கவரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த துணிக்கடை பெயருடன் கூடிய பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படத்துடன் கூடிய அன்பின் கரங்கள் என்று அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கவர் அறநிலையத்துறையின் அனுமதி பெற்று தான் வழங்கப்பட்டதா யார் மூலம் இந்த கவர் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகள் எழுப்பினார். போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் திருக்கோயிலில், முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் என நீதிமன்றத்தின் மூலமாகவோ, இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் உத்தரவோ எதுவும் பெறாமல்,

 


அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்  - 2 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்

இத்திருக்கோயிலில் முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகமாக பணிபுரியும் .K.சோமநாத குருக்கள் மற்றும் .A.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விபூதி குங்கும பிரசாத கவரினை திருக்கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் இன்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டாதால் விசாரணை செய்த வகையில், பிரசாத கவர் திருக்கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி வழங்கிய தன்னிச்சையாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது தெரியவருவதாலும், திருக்கோயிலுக்கு அவப்பெயர் மற்றும் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இருவரையும் ஆறு மாத காலத்திற்கு முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்து இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sengottaiyan Joins TVK | தவெகவில் இணைந்தார்  செங்கோட்டையன்! விஜய் கொடுத்த முதல் TASK?
இன்னும் 2 நாள் தான்...நெருங்கி வரும் பேராபத்து 6 மாவட்டங்களுக்கு RED ALERT | Rain Alert | TN Rain | Weather Report
செஞ்சி மஸ்தானுக்கு செக் மா.செ-வாகும் உதய் வலதுகரம் சாட்டையை சுழற்றும் ஸ்டாலின் | DMK | Senji Masthan Vs Senji Siva
ஒரே நொடியில் பறிபோன உயிர் இந்திய வீரர் உயிரிழப்பு பரபரப்பு CCTV காட்சி | Volley Ball Player Hardik Death
தவெகவில் செங்கோட்டையன் பாஜகவின் SLEEPER CELL விஜய்யை காலி செய்ய திட்டமா? | Sengottaiyan Vs TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
TN Weather Update: வடதமிழகத்தை நோக்கி டிட்வா புயல் - 9 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னை? வானிலை அறிக்கை
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
WPL 2026 Auction: உலகக் கோப்பை நாயகிக்கு குவிந்த கோடிகள் - ஷிகா ஷாக், மகளிர் ப்ரீமியர் லீக் ஏலம் - வீராங்கனைகள் லிஸ்ட்
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
இனி நோ க்யூ.. சென்னை ஒன் செயலி போதும்.. மாதாந்திர பேருந்து பயண அட்டை பெறுவது எப்படி?
தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
தித்வா புயல்: செங்கல்பட்டுக்கு ரெட் அலர்ட்! கனமழை எச்சரிக்கை, பாதுகாப்பாக இருங்கள்! உதவி எண்கள் இதோ!.
Mahindra XEV 9S: பேஸ் வேரியண்டிலேயே டாப் அம்சங்கள்- போட்டியாளர்களை அலற விடும் XEV 9S, பெஸ்ட் SUV ஏன்?
Mahindra XEV 9S: பேஸ் வேரியண்டிலேயே டாப் அம்சங்கள்- போட்டியாளர்களை அலற விடும் XEV 9S, பெஸ்ட் SUV ஏன்?
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
காரைக்காலில் ரெட் அலர்ட்: மிரட்டும் புயல் - பாதுகாப்பாக இருக்க ஆட்சியரின் 15 முக்கிய அறிவுரைகள்!
Pakistan Afghanistan War?: எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
எல்லையில் படைகள் குவிப்பு; பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் இடையே போரா.? உற்று நோக்கும் உலக நாடுகள்
Sri Lanka Flood: இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
இலங்கையை புரட்டிப் போடும் கனமழை; வெள்ளம், நிலச்சரிவில் 33 பேர் பலி; ஏராளமானோர் மாயம்
Embed widget