மேலும் அறிய

அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம் - 2 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்

திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம் அச்சடிக்கப்பட்ட விவகாரத்தில் அர்ச்சகர்கள் சோமநாதன், முத்துக்குமாரசாமி 6 மாதத்திற்கு சஸ்பெண்ட்.

பஞ்சபூத தலங்களில் அக்னி தளமாக விளங்கக்கூடிய நினைத்தாலே முக்தி தரும் தலமாகும் விலங்கும் திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவியில் ஆகும். கோவிலின் பின்புறம் சிவனே மலையாக காட்சி அளிக்கிறார். மலையை சுற்றிலும் உள்ள 14 கிலோமீட்டர் கிரிவலப்பாதை அமைந்துள்ளது. அண்ணாமலையார் கோவிலுக்கு வெளிமாநிலம் , வெளிநாட்டு, வெளியூர்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை புரிந்து சாமி தரிசனம் செய்தபின்பு கிரிவலம் சுற்றி வருகின்றனர். அதிக அளவில் அண்ணாமலையார் கோவிலுக்கு பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு வருவதால் கோவிலில் உள்ள பிரசாத பைகளுக்கு , வெளியில் உள்ள தனியார் மொபைல் கடைகள், துணிக்கடைகள், நகைகடைகள் போன்றவர்கள் தங்களின் கடையின் விளம்பரங்களை விபூதி மற்றும் பிரசாதம் தரக்குடிய பொருட்களில் அச்சடித்து அதனை நன்கொடையாக கோவிலுக்கு அளிக்கின்றனர். அதனை கோவிலில் பணிபுரியும் கோவில் அர்ச்சகர்கள், கோவில் ஊழியர்கள் லஞ்சமாக பெற்றுக்கொண்டு பக்தர்களுக்கு அளித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் திருவண்ணாமலை நகரில் உள்ள பிரபல தனியார் துணிக்கடையின் லோகோ அன்னை தெரசா புகைப்படம் கூடிய அன்பின் கரங்கள் என்று அச்சடிக்கப்பட்ட வாசகங்களோடு கோவிலில் உள்ள விபூதி பாக்கெட்டுகளில் இருந்ததை கண்டு ஆன்மீக பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

 


அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்  - 2 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்

 

இதனை அறிந்த இந்து முன்னணி அமைப்பினர் அன்னை தெரசா பொறித்த புகைப்படம் கொண்ட விபூதி பாக்கெட்டுகளை எடுத்துகொண்டு அண்ணாமலலயார் கோவில் இணை ஆணையர் அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.அப்போது இந்து அமைப்பினர் அலுவலகத்தில் உள்ள அதிகாரிகளிடம் விபூதி பிரசாதம் கொடுக்கப்படும் கவரில் திருவண்ணாமலையைச் சேர்ந்த துணிக்கடை பெயருடன் கூடிய பாக்கெட்டில் அன்னை தெரசா புகைப்படத்துடன் கூடிய அன்பின் கரங்கள் என்று அச்சடிக்கப்பட்டு விநியோகிக்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கவர் அறநிலையத்துறையின் அனுமதி பெற்று தான் வழங்கப்பட்டதா யார் மூலம் இந்த கவர் கொடுக்கப்பட்டு வழங்கப்பட்டது என்று பல்வேறு கேள்விகள் எழுப்பினார். போராட்டத்தில் ஈடுபட்டனர். அதனைத்தொடர்ந்து அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததால் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து விசாரணை நடத்திய இணை ஆணையர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் திருவண்ணாமலை, அண்ணாமலையார் திருக்கோயிலில், முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் என நீதிமன்றத்தின் மூலமாகவோ, இந்து சமய அறநிலையத்துறை உயர் அலுவலர்கள் உத்தரவோ எதுவும் பெறாமல்,

 


அண்ணாமலையார் கோயில் விபூதி பாக்கெட்டில் அன்னை தெரசா படம்  - 2 அர்ச்சகர்கள் சஸ்பெண்ட்

இத்திருக்கோயிலில் முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகமாக பணிபுரியும் .K.சோமநாத குருக்கள் மற்றும் .A.முத்துகுமாரசாமி குருக்கள் ஆகியோர் திருக்கோயில் நிர்வாகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில், உபயதாரர் மூலம் வழங்கப்பட்ட சர்ச்சைக்குரிய விபூதி குங்கும பிரசாத கவரினை திருக்கோயில் நிர்வாகத்திற்கு தெரிவிக்காமலும், அனுமதி பெறாமலும் இன்று பக்தர்களுக்கு வழங்கப்பட்டாதால் விசாரணை செய்த வகையில், பிரசாத கவர் திருக்கோயில் நிர்வாகத்தின் அனுமதியின்றி வழங்கிய தன்னிச்சையாக பக்தர்களுக்கு வழங்கப்பட்டது தெரியவருவதாலும், திருக்கோயிலுக்கு அவப்பெயர் மற்றும் துறைக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டதால் இருவரையும் ஆறு மாத காலத்திற்கு முறை அர்ச்சகர் மற்றும் ஸ்தானீகம் பணியிலிருந்து தற்காலிக பணிநீக்கம் செய்து இணை ஆணையர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget