மேலும் அறிய

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்.. மகிழ்ச்சியில் இலவசமாக தக்காளிகளை அளித்த வியாபாரி..!

ஒலிம்பிக் போட்டியில் இந்தியா தங்கம் வென்றதனால் மகிழ்ச்சியடைந்த வியாபாரி, இதனை கொண்டாடும் வகையில் பொதுமக்களுக்கு இலவசமாக 1 டன் கிலோ தக்காளி வழங்கினார்.

ஒலிம்பிக் தடகளத்தில் இந்திய வீரர்கள் யாரும் இதுவரை பதக்கங்களைப் பெற்றதில்லை. மில்கா சிங், பி.டி. உஷா ஆகியோர்கள் தடகளத்தில் மிகக்குறைந்த வித்தியாசத்தில் பதக்கங்களைத் தவற விட்டனர். இந்தியாவின் அந்த நூற்றாண்டு கால ஏக்கத்தைத் தீர்த்து வைத்திருக்கிறார் நீரஜ் சோப்ரா. டோக்யோ ஒலிம்பிக்கில் அவர் ஈட்டி எறிந்த அதிகபட்சத் தொலைவு 87.58 மீட்டர். ஈட்டி எறிதல் இறுதிச் சுற்றில் தனது முதல் முயற்சியிலேயே 87.03 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்த நீரஜ் சோப்ரா முதல் மூன்று முயற்சிகளிலுமே தங்கப் பதக்கத்துக்கான நிலையை தக்க வைத்துக் கொண்டார். ஒலிம்பிக் தடகள வரலாற்றில் இந்தியாவுக்காக முதல் முறையாக தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்திருக்கிறார் ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா.

தங்கப் பதக்கம் வென்று வரலாறு படைத்த ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ராவுக்கு அவரது சொந்த மாநிலமான ஹரியானாவில் மாநில அரசு சன்மானம் அறிவித்துள்ளது.
சாதனையைப் பாராட்டி 6 கோடி ரூபாய் வழங்கப்படும் என்று அந்த மாநிலத்தின் முதல்வர் மனோகர்லால் கத்தார் அறிவித்துள்ளார். 

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்.. மகிழ்ச்சியில் இலவசமாக தக்காளிகளை அளித்த வியாபாரி..!

அதனைத்தொடர்ந்து பல மாநிலங்களில் இந்தியா தங்கம் பதக்கம் வென்றதை அடுத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் இந்தியா தங்கம் வென்றது இதை கொண்டாடும் வகையில் வந்தவாசி காய்கறி வியாபாரி சேட்டான் என்பவர் இன்று ஒருநாள் முழுவதும்  கடைக்கு வரும் பொதுமக்களுக்கு மொத்தமாக 1 டன்  தக்காளிகளை இலவசமாக ஒரு நபருக்கு 2 கிலோ என பாக்கெட்டில் அடைத்து வழங்கிக்கொண்டு இருக்கிறார்

 

ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு தங்கம்.. மகிழ்ச்சியில் இலவசமாக தக்காளிகளை அளித்த வியாபாரி..!

இது குறித்து அவரிடம் பேசுகையில் வந்தவாசியில் நாங்கள் பல தலைமுறையாக இங்கு வசித்து வருகிறோம். 50 வருடங்களாக காய்கறி வியாபாரம் செய்துவருகிறோம். இந்நிலையில் நான் 1906-இல் இருந்து ஒலிம்பிக் போட்டிக்களை பற்றி செய்தித்தாள்களிலும் மற்றும் தொலைக்காட்சியிலும் பார்த்து வருகிறேன்.  இந்திய வீரர்கள் தங்கம் வெல்லமுடியாமல் இந்தியாவிற்கு வீரர்கள் திரும்பி வரும்பொழுது எல்லாம் நான் கண்ணீர் விட்டு அழுதுள்ளேன். ஏன் என்றால் நானும் ஒரு விளையாட்டு வீரர்தான்  நான் கபடி விளையாட்டில் பள்ளியில் இருந்து கல்லூரி வரையில் சிறப்பாக விளையாடி வந்துள்ளேன். 

ஆனால் என்னால் அந்த நிலையில், வீட்டு வறுமையால் தொடர்ந்து விளையாட முடியவில்லை. இந்த முறையாவது டோக்கியாவில் நடைபெரும், ஒலிம்பிக் போட்டியில் நம் இந்திய வீரர்கள் தங்கம் வெல்ல வேண்டும் என்று பலமுறை கடவுளிடம் வேண்டிக்கொண்டேன். என்னுடைய பலநாள் கனவு மட்டும் இன்றி, இந்தியாவின் வரலாறை  ஒலிம்பிக்கில் , ஈட்டி எறியும் வீரர் நீரஜ் சோப்ரா ஈட்டி எரிந்து தங்கம் பதக்கம் வென்றுள்ளதை, மகிழ்ச்சியில் கொண்டாடும் விதமாக என்னுடைய கடையில் இருந்த ஒரு டன் தக்காளியை பொதுமக்களுக்கு வழங்கும்போது வீரரை பற்றியும் இந்தியாவை பற்றியும் கூறி ஒரு நபருக்கு 2 கிலோவீதம் தக்காளிகளை வழங்கி வருகிறேன் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
ABP Premium

வீடியோ

Kaliyammal Joins TVK | காளியம்மாளுக்கு மகளிரணி? டிக் அடித்த விஜய்! குஷியில் தவெகவினர்! | NTK | Vijay
Minister CV Ganesan Controversial Speech ”ஏய்யா எதுக்கு இப்ப கத்துற?”அமைச்சர் கணேசன் சர்ச்சை பேச்சு
Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Savukku shankar: வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட சவுக்கு சங்கர்.! கடப்பாரையோடு உள்ளே செல்லும் போலீஸ்- வெளியான ஷாக் வீடியோ
Savukku Shankar: எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
எங்க மொத்த டீமையும் போலீஸ் கைது செய்ய போறாங்க..! அலறி துடிக்கும் சவுக்கு சங்கர்- காரணம் என்ன.?
EPS ADMK: அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
அதிமுகவில் மட்டுமல்ல கூட்டணியிலும் நோ.! ஓபிஎஸ், டிடிவிக்கு கேட் போட்ட இபிஎஸ்.? - கதறும் பாஜக
OPS vs EPS: கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
கை விட்ட பாஜக.! கடைசி சான்ஸும் அவுட்... வேறு வழியில்லாமல் ஓபிஎஸ் போட்ட புதிய பிளான்.?
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
முருகனை எப்படி கும்பிடணும்னு நீங்க சொல்லாதீங்க.. பாஜக அமைச்சரை விளாசிய திமுக எம்.பி.,
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
Sanchay Plus: கவலையற்ற திருமண வாழ்க்கை- புதுமணத் தம்பதிகளுக்கு நிதி திட்டமிடல் ஏன் முக்கியமானது?
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
HPV Vaccine ; 9 வயது முதல் 14 வயது சிறுமிகளுக்கு தடுப்பூசி திட்டம் அடுத்த மாதம் தொடக்கம் !!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
செம்பரம்பாக்கம் ஏரி: முழு கொள்ளளவு நீர் சேமிப்பு! சென்னை குடிநீர் பாதுகாப்புக்கு புதிய மைல்கல்!
Embed widget