மேலும் அறிய

Tiruvannamalai: புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்

திருவண்ணாமலை புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடை பயணம் மேற்கொண்ட விவசாய சங்க கிராம மக்களை பேரிக்காடுகள் அமைத்து தடுத்த போலீசார்.

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் மலைகள், காடுகளை அழித்து குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் புனல் காடு கிராம மக்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புனல்காடு கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணமாக சென்று  ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் டெல்லி பாபு உள்ளிட்டோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட புனல்காடு கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயற்சித்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், அண்ணா நுழைவாயில் அருகில் குவிக்கப்பட்டு பேரிகாடுகள் அமைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல்துறை தடுப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற போது காவல்துறைக்கும் விவசாய சங்கத்திற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காவல்துறையினர் தடுப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நடை பயணம் மேற்கொண்டனர்


Tiruvannamalai: புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்

 

 ஆனால் போராட்ட களத்தில் கலந்து கொள்ள வந்த மாநில தலைவர் சண்முகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லி பாபு உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பேரிக்காடுகள் அமைத்து அவர்களை கீழே தள்ளி காவல்துறை அண்ணா நுழைவாயில் அருகிலேயே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் அமர வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் கிராம மக்கள் புறப்பட்டு சென்றனர். போராட்டக்காரர்களை காவல்துறையினர் போலீஸ் வாகனம் மற்றும் ரோடு போடும் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு ரோட்டின் குறுக்கே நிறுத்தி வைத்து பொதுமக்கள் செல்லாதவாறு தடையை ஏற்படுத்தினர். சிறிது நேரம் அங்கேயே இருந்த பொதுமக்கள் மீண்டும் நடை பயணத்தை தொடங்கி காவல்துறை கட்டுப்பாட்டையும் மீறி செல்ல முயற்சித்தனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்,ஆண்கள் என அனைவருக்கும் காவல்துறை இருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு சிலரை குண்டு கட்டாக காவல்துறையினர் போலீஸ் வாகனத்தில் கைது செய்வதற்காக வாகனத்தில் ஏற்றினர்.

 


Tiruvannamalai: புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்

 

அப்பொழுது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளால் 5க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்து காயம் அடைந்து ஆட்டோக்கள் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் காவல்துறை பாதுகாப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அளுவளாகத்திற்கு உள்ளே செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பூட்டப்பட்டு பேரிகாடுகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்று தரையில் அமர்ந்து ஒப்பாரி ‌வைத்தும்‌, புடவைகளை அவிழ்த்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார் ஆட்சியர் அலுவலக கதவினை மூடினர். பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget