மேலும் அறிய

Tiruvannamalai: புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்

திருவண்ணாமலை புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து நடை பயணம் மேற்கொண்ட விவசாய சங்க கிராம மக்களை பேரிக்காடுகள் அமைத்து தடுத்த போலீசார்.

திருவண்ணாமலை அடுத்த புனல்காடு கிராமத்தில் மலைகள், காடுகளை அழித்து குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் புனல் காடு கிராம மக்கள் கடந்த 20 நாட்களுக்கு மேலாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் புனல்காடு கிராமத்தில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணமாக சென்று  ஆட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்திருந்தனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை அண்ணா நுழைவாயில் அருகில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் பெ.சண்முகம், மாநிலத் துணைத் தலைவர் டெல்லி பாபு உள்ளிட்டோர் தலைமையில் 300-க்கும் மேற்பட்ட புனல்காடு கிராம மக்கள் மற்றும் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஒன்று கூடி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி நடைபயணம் மேற்கொள்ள முயற்சித்தனர். அப்போது திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவல் துறையினர், அண்ணா நுழைவாயில் அருகில் குவிக்கப்பட்டு பேரிகாடுகள் அமைத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி செல்லாதவாறு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் மற்றும் கிராம மக்கள் காவல்துறை தடுப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற போது காவல்துறைக்கும் விவசாய சங்கத்திற்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.காவல்துறையினர் தடுப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி கிராம மக்கள் தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் நடை பயணம் மேற்கொண்டனர்


Tiruvannamalai: புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்

 

 ஆனால் போராட்ட களத்தில் கலந்து கொள்ள வந்த மாநில தலைவர் சண்முகம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டெல்லி பாபு உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பேரிக்காடுகள் அமைத்து அவர்களை கீழே தள்ளி காவல்துறை அண்ணா நுழைவாயில் அருகிலேயே கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் அமர வைத்தனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தமிழ்நாடு விவசாய சங்கம் மற்றும் கிராம மக்கள் புறப்பட்டு சென்றனர். போராட்டக்காரர்களை காவல்துறையினர் போலீஸ் வாகனம் மற்றும் ரோடு போடும் இயந்திரம் உள்ளிட்ட வாகனங்களைக் கொண்டு ரோட்டின் குறுக்கே நிறுத்தி வைத்து பொதுமக்கள் செல்லாதவாறு தடையை ஏற்படுத்தினர். சிறிது நேரம் அங்கேயே இருந்த பொதுமக்கள் மீண்டும் நடை பயணத்தை தொடங்கி காவல்துறை கட்டுப்பாட்டையும் மீறி செல்ல முயற்சித்தனர். அப்பொழுது போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள்,ஆண்கள் என அனைவருக்கும் காவல்துறை இருக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில் ஒரு சிலரை குண்டு கட்டாக காவல்துறையினர் போலீஸ் வாகனத்தில் கைது செய்வதற்காக வாகனத்தில் ஏற்றினர்.

 


Tiruvannamalai: புனல் காடு கிராமத்தில் குப்பை கிடங்கு அமைக்க எதிர்ப்பு - ஒப்பாரி வைத்து பெண்கள் போராட்டம்

 

அப்பொழுது காவல்துறைக்கும் போராட்டக்காரர்களுக்கு இடையே ஏற்பட்ட தள்ளு முள்ளால் 5க்கும் மேற்பட்ட பெண்கள் மயக்கமடைந்து காயம் அடைந்து ஆட்டோக்கள் மூலம் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். காவல்துறையினரால் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களை கட்டுப்படுத்த முடியாமல் திணறினர். ஒரு கட்டத்தில் பொதுமக்கள் அனைவரும் காவல்துறை பாதுகாப்பையும் மீறி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு குவிந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாவட்ட ஆட்சியர் அளுவளாகத்திற்கு உள்ளே செல்லக்கூடிய அனைத்து பாதைகளிலும் பூட்டப்பட்டு பேரிகாடுகள் அமைக்கப்பட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. அதையும் மீறி போராட்டத்தில் ஈடுபட்ட பெண்கள் ஆட்சியர் அலுவலகம் முன்பு சென்று தரையில் அமர்ந்து ஒப்பாரி ‌வைத்தும்‌, புடவைகளை அவிழ்த்தும் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உடனடியாக அங்கு இருந்த போலீசார் ஆட்சியர் அலுவலக கதவினை மூடினர். பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
ABP Premium

வீடியோ

நயினார் கொடுத்த REPORT! அமித்ஷாவின் GAMESTARTS! பியூஸ் கோயல் வைத்து ஸ்கெட்ச்
DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Gold Rate Dec.15th: அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
அம்மாடியோவ்.! ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,00,000-த்தை தாண்டியது; தற்போது விலை என்ன தெரியுமா.?
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
JACTO-GEO Strike: ஜன.6 முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம்; அரசு ஊழியர் ஆசிரியர் அமைப்பு ஜாக்டோ ஜியோ அறைகூவல்!
Ukraine Zelensky: “நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
“நேட்டோவில் இணைவதை கைவிட தயார், ஆனா ஒரு கன்டிஷன்“; உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி கேட்பது என்ன.?
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
Tasmac Scam : ஆப்பு வைத்த உயர் நீதிமன்றம்..தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரனிடம் மன்னிப்பு கேட்ட அமலாக்கத்துறை
OnePlus 15R Leaked Details: மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
மெகா பேட்டரியுடன் ஒன்பிளஸ் 11R; வெளியீட்டிற்கு முன் கசிந்த விவரங்கள்; விலை, ஸ்டோரேஜ் என்ன.?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
பிளஸ் 2 பொதுத்தேர்வு மாணவர்களா? வெளியான முக்கிய அறிவிப்பு- இவர்களுக்கெல்லாம் விலக்கு!- எதில் இருந்து?
TVK VIJAY: ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
ஈரோட்டில் விஜய் மக்கள் சந்திப்பு.! 43 நிபந்தனைகளை விதித்த போலீஸ்- என்னென்ன தெரியுமா.?
BJP ELECTION PLAN: தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
தமிழகத்தை குறிவைக்கும் பாஜக.! பக்கா ஸ்கெட்ச் போட்டு 3 மத்திய அமைச்சர்களை களம் இறக்கிய அமித்ஷா
Embed widget