மேலும் அறிய

திருவண்ணாமலை தீப மலையில் பயங்கர தீ விபத்து; எரிந்த மூலிகை செடிகள் - தீ வைத்தது யார்..?

தீயினை சமூகவிரோதிகள் வைத்தார்களா அல்லது வெயிலின் தாக்கத்தால் எரிந்ததா என வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவண்ணாமலை (Tiruvannamalai News): நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாக திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையார் திருக்கோவில் உள்ளது. இக்கோவில் பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக்கோவிலுக்கு வெளிநாடு, உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். ஆலயத்தின் பின்புறம் அமைந்துள்ள மலை சிவனே மலையாகா காட்சி அளிக்கிறார். பௌர்ணமி நாட்களில் மலையை சுற்றிலும் 14 கிலோமீட்டர் பக்தர்கள் கிரிவலம் வருகின்றனர். அண்ணாமலையார் மலையில் அரியவகை மூலிகைகள் மற்றும் சிங்கவால் குரங்கு, புள்ளி மான்கள், காட்டு பன்றிகள் வாழ்ந்து வருகின்றது. மலையின் மீது ஏறும் பக்தர்கள் எடுத்து செல்லும் பிளாஸ்டிக் பொருட்களால் மிருகங்களுக்கும் அரியவகை மூலிகைகள் அனைத்தும் மாசு படுவதால் மலையின் மீது ஏறுவதற்கு வனத்துறையினர் தடைவிதித்து இருந்தனர். அதையும் மீறி மலையின் மீது ஏறும் பக்தர்களுக்கு வனத்துறையினர் அபராதம் விதித்ததும் அவர்களுக்கு கடுமையான தண்டனையும் விதித்தனர்.


திருவண்ணாமலை தீப மலையில் பயங்கர தீ விபத்து; எரிந்த மூலிகை செடிகள் - தீ வைத்தது யார்..?

அண்ணாமலையார் மலையின் மீது காட்டு தீ 

இந்நிலையில், அண்ணாமலையார் மலையில் திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் குறித்து வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்தவுடன் திருவண்ணாமலை மாவட்ட வனத்துறையினர் மலையின் உச்சியில் சென்று தீயை அணைக்க முயற்சித்தனர். தீயை அணைக்க முடியாத அளவிற்கு நான்கு புறமும் பரவியது, இதனை அறிந்த சமூக ஆர்வலர்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரும் மலையின் மீது ஏறி வனத்துறையினருடன் சேர்ந்து தீயை கட்டுக்குள் கொண்டுவர போராடினர். பலமணிநேரம் போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டுவந்து முற்றிலுமாக தீயை அனைத்தனர். மலையின் மீது சமூக விரோதிகள் அடிக்கடி தீ வைப்பது வழக்கமாக இருந்து வந்த நிலையில், தற்போது வனத்துறை பாதுகாப்பில் திருவண்ணாமலை மலை முழு கட்டுப்பாட்டுடன் இருப்பதால் மர்ம நபர்கள் தீ வைத்தார்களா, அல்லது வெயிலின் தாக்கம் தாங்காமல் மலையில் உள்ள மஞ்சள் பில் எரிகிறதா என்று வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.

 


திருவண்ணாமலை தீப மலையில் பயங்கர தீ விபத்து; எரிந்த மூலிகை செடிகள் - தீ வைத்தது யார்..?

 

தீ வைத்தது சமூக விரோதிகளா என வனத்துறையினர் விசாரணை 

மேலும் இந்த தீ விபத்தால் திருவண்ணாமலை மலை மீது உள்ள அரிய வகை மூலிகைகள் எரிந்து நாசமாகியது. இது மட்டுமின்றி தீயினால் மலையில் இருந்த மான்கள், காட்டுபன்றி, முயல், மயில்கள் அனைத்தும் தீயில் சிக்கியதா என்று தெரியவில்லை. மேலும், மலையின் மீது ஏறுவதற்கு தடைவிதித்த நிலையில், மலையின் மீது சமூக விரோதிகள் தீ வைத்தார்களா? அல்லது வெயிலின் தாக்கத்தால் தீப்பற்றியதா என வனத்துறையினர் விசாரணை நடத்தியதாக நாம் தொடர்பு கொண்டு கேட்டதற்கு வனத்துறையினர் தெரிவித்தனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nayanthara Divorce | விக்னேஷ் சிவனுடன் விவாகரத்தா?வெளியான பரபரப்பு தகவல் நயன்தாரா கொடுத்த ரியாக்‌ஷன்
Pothupani Thilagam | ’நீர்வளத்துறையில் முறைகேடு?’ துரைமுருகனுக்கே விபூதி அடித்த பொதுப்பணி திலகம்!
EPS with Amit Shah | களம் இறங்கும் அமித்ஷா உறுதி அளித்த நயினார்! இபிஎஸ் பக்கா ஸ்கெட்ச்
BJP தேசிய தலைவராகும் தமிழ்பெண்! வானதி OR நிர்மலாவுக்கு ஜாக்பார்ட்!மோடியின் கணக்கு என்ன?
கொத்தாக விலகிய தொண்டர்கள் அதிமுகவில் இணைந்த பாமகவினர்! அதிர்ச்சியில் அன்புமணி ராமதாஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PMK Conflict:  வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
PMK Conflict: வீட்டில் இல்லாத ராமதாஸ்! உள்ளே நுழைந்த அன்புமணி.. தைலாபுரத்தில் பரபரப்பு
EPS : ‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
‘திமுகவினர் வீட்டிற்கு வந்தால் நம்பாதீர்கள்’ விழுப்புரத்தில் Vibe செய்த எடப்பாடி பழனிசாமி..!
Ramadoss Warns Anbumani: “அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
“அன்புமணி பெயருக்கு பின்னால் என் பெயரை போடக்கூடாது“; ராமதாஸ் அதிரடி - முற்றிய மோதல்
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
பிளவுபடும் மதிமுக? மல்லை சத்யாவும் துரோகி- புயலைக் கிளப்பிய வைகோ!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
மதுரை மாநகராட்சியில் பரபரப்பு! வரி முறைகேடு எதிரொலி: 7 பேர் பதவி பறிப்பு! அதிர்ச்சி தரும் பின்னணி!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
ரயில் பயணிகளுக்கு குட் நியூஸ்! டிக்கெட் ரத்து கட்டணம் குறையுமா? காத்திருப்பு டிக்கெட் மாற்றம்!
Guru Purnima 2025 Wishes: குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
குரு பூர்ணிமா 2025; வாழ்த்துகள் மற்றும் மேற்கோள்கள் தமிழில் உங்களுக்காக
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
TRB Notification: வெளியான சூப்பர் அறிவிப்பு; 2 ஆயிரம் காலியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- ஆசிரியர் தேர்வு வாரியம் அழைப்பு!
Embed widget