மேலும் அறிய

வேலூர் | விசாரணை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை , சிறை வார்டன் உற்பட 3 பேர் சஸ்பெண்ட் ..!

சிறை கண்காணிப்பாளர் ருக்மணி, பணியில் இருந்த சிறை தலைமை காவலர் இளையராஜா , முதல் நிலை காவலர் செல்வகுமார் மற்றும் சிறை வார்டன் அஜித் குமார் ஆகிய மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார் . 

வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தொரப்படி பகுதியில் வேலூர் மத்திய சிறைச்சாலை செய்யப்பட்டு வருகின்றது . இங்கு ஆண்களுக்கென ஆண்கள் மத்திய சிறை சாலையும் , பெண் கைதிகளுக்கென பெண்கள் மத்திய சிறை சாலையும் , சிறுவர்களுக்குக்கென பார்ஸ்டல் பள்ளியும் , தனி தனி வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. தற்சமயம் ஆண்கள் மத்திய சிறையில்  742  தண்டனை மற்றும் விசாரணை கைதிகளும் , பெண்கள் தனிச்சிறையில் 97 தண்டனைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். 


வேலூர் | விசாரணை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை , சிறை வார்டன் உற்பட 3 பேர் சஸ்பெண்ட் ..!

18  முதல் 21 வயதுக்குட்பட்ட குற்றவாளிகளை அடைக்கப்படும் பார்ஸ்டல் பள்ளி , ஆண்கள் மத்திய சிறை சாலைக்கு எதிரேயுள்ள தனி வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது .

கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்பொழுது காவல் நிலையங்களில் இருந்து புதிதாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் கொண்டு வரப்படும் விசாரணைக் கைதிகள் நேரடியாக சிறையில் அடைக்க அனுமதியில்லை.  அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா நெகடிவ் என்ற  முடிவுக்குள் வந்த பின்னரே சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படுகின்றன . அதன்படி ஏறக்குறைய 10 நாட்கள் வரை காவல் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்படும் புதிய கைதிகளை வேலூர் பார்ஸ்டல் பள்ளியில் தனிமைப்படுத்தி வைக்க படுகின்றனர். இந்நிலையில் , நேற்று , வேலூர் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி ப்ரியதர்ஷினிக்கு , பார்ஸ்டல் பள்ளியில் அடைக்கப்படும் விசாரணை கைதிகளுக்கு ஏகபோகமாக கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பாதுகாப்பு பணியில் இருக்கும்  சிறை காவலர்கள் உதவியுடன் சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது . 


வேலூர் | விசாரணை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை , சிறை வார்டன் உற்பட 3 பேர் சஸ்பெண்ட் ..!

ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சிறை கண்காணிப்பாளர் ருக்மணி ப்ரியதர்ஷினியின்  பார்ஸ்டல் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும்படி , சிறை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் , அவரது  உத்தரவின் பேரில் , சிறை துறை அதிகாரிகள் , பார்ஸ்டல் பள்ளியில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர் . இந்த சோதனையின் பொழுது , விசாரணை கைதிகள் 3  பேர் அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் 50  கிராம் அளவுடைய கஞ்சா பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது .

சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்கு , அறையில் இருந்த 3  கைதிகளும்  ஒத்துழைப்பு தராத நிலையில் , பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்களும் , தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தட்டி கழித்துள்ளனர். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிறை கண்காணிப்பாளர் ருக்மணி , அப்பொழுது பணியில் இருந்த சிறை தலைமை காவலர் இளையராஜா , முதல் நிலை காவலர் செல்வகுமார் மற்றும் சிறை வார்டன் அஜித் குமார் ஆகிய மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார் . 

கடந்த ஜூலை  21 -ஆம் தேதி வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் மத்திய சிறைகளில் ஆய்வு மேற்கொண்ட சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் சிறை துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த சூழ்நிலையில் , விசாரணை  கைதிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  அறையில் இருந்து கஞ்சா  பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டு , 3  சிறை துறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட  சம்பவம் சிறை துறை அதிகாரிகள்  மத்தியில் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

தலைப்பு செய்திகள்

CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CJP Protest: கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
கண்மூடித்தனமாக அடித்து விரட்டப்பட்ட இளைஞர்கள்..! வீடியோக்கள் வைரல், பரபரப்பில் தலைநகர்
Actor Dhanush Political Entry : ’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
’ரஜினி விட்டதை பிடிக்கத் திட்டம்’ புதிய கட்சித் தொடங்கும் நடிகர் தனுஷ்?
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
DMK MLA Markandeyan : திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்திரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
Embed widget