மேலும் அறிய

வேலூர் | விசாரணை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை , சிறை வார்டன் உற்பட 3 பேர் சஸ்பெண்ட் ..!

சிறை கண்காணிப்பாளர் ருக்மணி, பணியில் இருந்த சிறை தலைமை காவலர் இளையராஜா , முதல் நிலை காவலர் செல்வகுமார் மற்றும் சிறை வார்டன் அஜித் குமார் ஆகிய மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார் . 

வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட தொரப்படி பகுதியில் வேலூர் மத்திய சிறைச்சாலை செய்யப்பட்டு வருகின்றது . இங்கு ஆண்களுக்கென ஆண்கள் மத்திய சிறை சாலையும் , பெண் கைதிகளுக்கென பெண்கள் மத்திய சிறை சாலையும் , சிறுவர்களுக்குக்கென பார்ஸ்டல் பள்ளியும் , தனி தனி வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது. தற்சமயம் ஆண்கள் மத்திய சிறையில்  742  தண்டனை மற்றும் விசாரணை கைதிகளும் , பெண்கள் தனிச்சிறையில் 97 தண்டனைக் கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனர். 


வேலூர் | விசாரணை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை , சிறை வார்டன் உற்பட 3 பேர் சஸ்பெண்ட் ..!

18  முதல் 21 வயதுக்குட்பட்ட குற்றவாளிகளை அடைக்கப்படும் பார்ஸ்டல் பள்ளி , ஆண்கள் மத்திய சிறை சாலைக்கு எதிரேயுள்ள தனி வளாகத்தில் செயல்பட்டு வருகின்றது .

கொரோனா தொற்று பரவல் காரணமாக தற்பொழுது காவல் நிலையங்களில் இருந்து புதிதாக கைது செய்யப்பட்டு சிறைக்குள் கொண்டு வரப்படும் விசாரணைக் கைதிகள் நேரடியாக சிறையில் அடைக்க அனுமதியில்லை.  அவர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு , கொரோனா நெகடிவ் என்ற  முடிவுக்குள் வந்த பின்னரே சிறைச்சாலைகளுக்கு மாற்றப்படுகின்றன . அதன்படி ஏறக்குறைய 10 நாட்கள் வரை காவல் நிலையங்களில் இருந்து கொண்டுவரப்படும் புதிய கைதிகளை வேலூர் பார்ஸ்டல் பள்ளியில் தனிமைப்படுத்தி வைக்க படுகின்றனர். இந்நிலையில் , நேற்று , வேலூர் சிறை கண்காணிப்பாளர் ருக்மணி ப்ரியதர்ஷினிக்கு , பார்ஸ்டல் பள்ளியில் அடைக்கப்படும் விசாரணை கைதிகளுக்கு ஏகபோகமாக கஞ்சா மற்றும் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை பாதுகாப்பு பணியில் இருக்கும்  சிறை காவலர்கள் உதவியுடன் சப்ளை செய்யப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது . 


வேலூர் | விசாரணை கைதிகளுக்கு கஞ்சா சப்ளை , சிறை வார்டன் உற்பட 3 பேர் சஸ்பெண்ட் ..!

ரகசிய தகவலின் அடிப்படையில் நேற்று சிறை கண்காணிப்பாளர் ருக்மணி ப்ரியதர்ஷினியின்  பார்ஸ்டல் பள்ளியில் ஆய்வு மேற்கொள்ளும்படி , சிறை துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார் , அவரது  உத்தரவின் பேரில் , சிறை துறை அதிகாரிகள் , பார்ஸ்டல் பள்ளியில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர் . இந்த சோதனையின் பொழுது , விசாரணை கைதிகள் 3  பேர் அடைக்கப்பட்டிருந்த ஒரு அறையில் 50  கிராம் அளவுடைய கஞ்சா பொட்டலம் கண்டெடுக்கப்பட்டது .

சிறைத்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணைக்கு , அறையில் இருந்த 3  கைதிகளும்  ஒத்துழைப்பு தராத நிலையில் , பாதுகாப்பு பணியில் இருந்த சிறை காவலர்களும் , தங்களுக்கு எதுவும் தெரியாது என்று தட்டி கழித்துள்ளனர். கோபத்தின் உச்சிக்கே சென்ற சிறை கண்காணிப்பாளர் ருக்மணி , அப்பொழுது பணியில் இருந்த சிறை தலைமை காவலர் இளையராஜா , முதல் நிலை காவலர் செல்வகுமார் மற்றும் சிறை வார்டன் அஜித் குமார் ஆகிய மூவரையும் தற்காலிக பணிநீக்கம் செய்து உத்தரவிட்டார் . 

கடந்த ஜூலை  21 -ஆம் தேதி வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் மத்திய சிறைகளில் ஆய்வு மேற்கொண்ட சிறை மற்றும் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி , சிறைக்குள் தடைசெய்யப்பட்ட பொருட்கள் கண்டெடுக்கப்பட்டால் சிறை துறை அதிகாரிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்திருந்த சூழ்நிலையில் , விசாரணை  கைதிகள் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்த  அறையில் இருந்து கஞ்சா  பொட்டலம் பறிமுதல் செய்யப்பட்டு , 3  சிறை துறை காவலர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட  சம்பவம் சிறை துறை அதிகாரிகள்  மத்தியில் அச்சத்தையும், கலக்கத்தையும் ஏற்படுத்தியுள்ளது .

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!
Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்
Embed widget