மேலும் அறிய

உடலுறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவர்களுக்கு பிறப்பு உறுப்பில் சூடு வைத்த கள்ளக்காதலி கைது

தனிமையில் இருப்பதற்கு அவரது முதல் மனைவியின் குழந்தைகள் இடையூறாக இருந்ததால் சேட்டு வேளைக்குச் சென்ற பின் குழந்தைகள் இருவருக்கும் சூடு வைத்து சித்ரவதை செய்துவந்துள்ளார்

குடியாத்தம் அருகே இரு சிறுவர்களுக்கு அவர்களது  தந்தையின் கள்ளக்காதலி மர்ம உறுப்பு உள்ளிட்ட அணைத்து பகுதிகளிலும் சூடுவைத்து கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் பரப்பை   ஏற்படுத்தியுள்ளது .
 
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஜீவா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர்  சேட்டு (35) . கூலி வேலை செய்து அவருக்கு ஈஸ்வரி என்பவருடன் திருமணமாகி சித்தார்த் (10) நித்திஷ் (8) ஆகிய இரண்டு மகன்கள்  உள்ளனர். இந்த  நிலையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஈஸ்வரி தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்த நிலையில் தாயை இழந்த குழந்தைகள் தந்தை சேட்டுவிடமே வளர்ந்து வந்தனர். 

உடலுறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவர்களுக்கு பிறப்பு உறுப்பில் சூடு வைத்த கள்ளக்காதலி கைது
 
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த வேணி (30) என்ற பெண்ணுடன் சேட்டுக்குக் கள்ளத் தொடர்பு ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே இன்னொருவருடன் திருமணம் செய்து கொண்ட வேணி அவரது கணவருடன் ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாகச் சேட்டு மற்றும் அவரது இரு மகன்களுடன் ஒரே வீட்டில் சேர்ந்து வசித்து வந்துள்ளார். இதனிடையே முதல் மனைவியின் குழந்தைகளான சித்தார்த் மற்றும் நித்திஷ் ஆகியோரை வேணி சித்ரவதை செய்துவந்துள்ளார். குறிப்பாக சேட்டுவின் 8 வயது மகன் நித்திஷின் முதுகு, கை, கால்கள், பாதம்,  பிறப்பு உறுப்பு உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும்  சூடு வைத்து சித்தராவதை செய்து வந்துள்ளார். அவரது சித்ரவதை தாங்க முடியாமல்  செவ்வாய்க் கிழமை  காலை நித்திஷ் அவருடைய வீட்டிலிருந்து தப்பித்து அதே பகுதியிலுள்ள அவரது பெரியம்மாவான நிஷாந்தினி வீட்டிற்கு ஓடி சென்ற  நித்திஷ்  நடந்ததை கூறியுள்ளார் .
 

உடலுறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவர்களுக்கு பிறப்பு உறுப்பில் சூடு வைத்த கள்ளக்காதலி கைது
 
மேலும் அந்த சிறுவனின் ஆடைகளை கழற்றிப் பார்த்த போது , உடலின் ஒரு பகுதியை கூட  விட்டுவைக்காமல் சூடு வைத்து சித்ரவதை செய்தது அம்பலம் ஆனது . இதனைக் கண்டு ஆத்திரமும் , அதிர்ச்சியும்  அடைந்த நிஷாந்தினி மற்றும் அவர்களது உறவினர்கள் நித்தீஷை குடியாத்தம் நகரக்  காவல் நிலையம் அழைத்துச் சென்று  புகார் கொடுத்தனர். சிறுவனின் பெரியம்மா நிஷாந்தினி  கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆய்வாளர் லட்சுமி தலைமையிலான போலீசார்  சேட்டின்  கள்ளக்காதலி வேணியைக் கைது செய்து காவல் நிலையத்தில் வைத்து விசாரணை செய்தனர் .
 
அப்போது வேணி தன்னுடைய வாக்குமூலத்தில், அவரும் அவரது கள்ளக் காதலனுமான சேட்டும் தனிமையில் இருப்பதற்கு அவரது முதல் மனைவியின் குழந்தைகள் இடையூறாக இருந்ததால் , சேட்டு வேளைக்குச் சென்ற பின் குழந்தைகள் இருவருக்கும் சூடு வைத்து சித்ரவதை செய்துவந்துள்ளார் . மேலும் சேட்டு பெரும்பாலான நேரங்களை வேணியுடனே செலவு செய்து வந்ததால் குழந்தைகளுக்கு வேணியை பற்றிய  புகாரைத் தெரிவிக்க வாய்ப்பு கிடைக்க வில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

உடலுறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவர்களுக்கு பிறப்பு உறுப்பில் சூடு வைத்த கள்ளக்காதலி கைது
 
இந்த வழக்கு தொடர்பாக ABP நாடு செய்து குழுமம் இந்த வழக்கின் விசாரணை அதிகாரி , ஆய்வாளர் லட்சுமியை தொடர்பு கொண்டு பேசிய போது "வேணி அளித்த  வாக்குமூலத்தின் அடிப்படையில் அவர் மீது   இந்தியத் தண்டனை சட்டம் பிரிவு 294 (b) (அசிங்கமாகப் பேசுவது ) ,  324 (நெருப்பில் காய்ச்சப்பட்ட பொருளைக் கொண்டு காயம் ஏற்படுத்துதல்), 326 (நெருப்பில் காய்ச்சப்பட்ட பொருளைக் கொண்டு உள்ளுறுப்புகளில் காயம் ஏற்படுத்துதல்) , 355 (ஒருவரை அவமதிக்கும் நோக்கத்துடன் தாக்குதலில் ஈடுபடுவது) ,  506 (ii)  (உயிரைப் பறிக்கவோ அல்லது  கொடுங்காயாம் ஏற்படுத்தியதற்கான தண்டனை)  மற்றும் பிரிவு 75  சிறார் நீதி (பராமரிப்பு மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு) சட்டம் உள்ளிட்ட ஆறு  பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, குடியாத்தம் நீதி மன்றத்தில் முன்னிறுத்தப்பட்டு வேலூர் பெண்கள் தனிச் சிறையில் தற்பொழுது அடைக்கப்பட்டுள்ளார் . என்று தெரிவித்தார்.

உடலுறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவர்களுக்கு பிறப்பு உறுப்பில் சூடு வைத்த கள்ளக்காதலி கைது
 
மேலும் காயமடைந்த நித்திஷை அவரது உறவினர்கள் மருத்துவச் சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர் .  8 வயதுக் குழந்தை  என்றும் பாராமல் சிறுவனின் உடல் முழுவதும் அவரது தந்தையின் கள்ளக்காதலி சூடு வைத்த கொடுமைப் படுத்தி வந்த சம்பவம் குடியாத்தம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக குடியாத்தம் போலீசார் தொடர்ந்து சிறுவர்களின் தந்தை சேட்டுவிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

உடலுறவுக்கு இடையூறாக இருந்ததால் சிறுவர்களுக்கு பிறப்பு உறுப்பில் சூடு வைத்த கள்ளக்காதலி கைது
 
அண்மையில் விழுப்புரத்தில் பெற்ற தாயே தனது குழந்தையை அடித்து சித்ரவதை செய்யும் காணொளி வெளியாகி சமூக வலைத்தளத்தில் வைரலான நிலையில், தற்பொழுது இந்த குடியாத்தம் சம்பவமும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது . 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
TVK Vijay:  ‘என் பின்னால் இனிமே வராதீங்க’ கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய விஜய் - அதிர்ச்சியில் தவெகவினர்
 ‘என் பின்னால் இனிமே வராதீங்க’ கையெடுத்து கும்பிட்டு கெஞ்சிய விஜய் - அதிர்ச்சியில் தவெகவினர்
Vellore Power Cut (07-02-2026): வேலூரில் நாளை மின் தடை! உங்கள் பகுதியா? மின்சாரம் தடை நேரத்தில் பாதுகாப்பாக இருக்க இதோ வழிகள்
வேலூரில் நாளை மின் தடை! உங்கள் பகுதியா? மின்சாரம் தடை நேரத்தில் பாதுகாப்பாக இருக்க இதோ வழிகள்
Vellore Power Cut (06-02-2026 ): வேலூரில் நாளை மின் தடை! 9 மணி முதல் 3 மணி வரை என்ன செய்யப்போறீங்க
வேலூரில் நாளை மின் தடை! 9 மணி முதல் 3 மணி வரை என்ன செய்யப்போறீங்க
West Bengal | Phase 1

294 Constituencies 23RD APRIL 2026 | Thursday

West Bengal | Phase 2

294 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

Tamil Nadu | Phase 1

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

Puducherry | Phase 1

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Kerala | Phase 1

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Assam | Phase 1

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

Counting Day 4th MAY 2026 | MONDAY

ABP Premium

வீடியோ

CV Shanmugam on Nayanthara | ”எனக்கு நயன்தாரா வேணும்! கனவை நிறைவேத்துவாரா” எல்லை மீறிய சிவி சண்முகம்
MK Stalin biopic | ஸ்டாலினாக சமுத்திரக்கனி? படமாகும் வாழ்க்கை வரலாறு! விஜய் சேதுபதி யார் கேரக்டர்?
DMK VCK Alliance | ”6 சீட் பத்தாது, 10 குடுங்க” விடாப்பிடியாக நிற்கும் திருமா இழுபறியில் திமுக-விசிக
Adani Group Helps Tamil Farmers | இயற்கை விவசாயம் உதவும் அதானி குழுமம் தமிழர்களின் வெற்றிக் கதை
Bussy Anand vs Aadhav Arjuna | கைகோர்த்த ஆதவ், ஜான் ! தலைவலியில் ஆனந்த்! ஓரங்கட்டும் விஜய்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran Israel War:
Iran Israel War: "ஈரான் போரை ஆதரிக்க முடியாது.." அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு இயக்குனர் ராஜினாமா ! அதிர்ச்சியில் ட்ரம்ப்
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையில் களமிறங்கப்போகும் தவெக தலைவர்கள் லிஸ்ட்!
TVK Candidate List: விஜய் முதல் ஆதவ் அர்ஜுனா வரை.. சென்னையில் களமிறங்கப்போகும் தவெக தலைவர்கள் லிஸ்ட்!
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Dindigul Srinivasan: ’’சேலை மட்டுமா, பாவாடை கிடையாதா?’’ திண்டுக்கல் சீனிவாசன் சர்ச்சை பேச்சு- பொளக்கும் நெட்டிசன்கள்
Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!
Demonte Colony 3: டிமான்டி காலனி 3 லைப்ரேரியன் வேடத்தில் இவரா? செம ட்ரீட் இருக்கு!
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
ஒருவழியாக கருப்பு படத்தை வாங்க முன்வந்த ஓடிடி நிறுவனம்..எத்தனை கோடிக்கு தெரியுமா?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TN Election Rewind: அண்ணாவுக்கு சேவல், கருணாநிதிக்கு உதயசூரியன்! ஆளாளுக்கு ஒரு சின்னம் - திமுகவிலா இப்படி?
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
TVK Candidate List: பெரம்பூரில் களமிறங்கும் விஜய்? ஆதவ், ஆனந்த் எங்கே? தவெக வேட்பாளர் பட்டியல் வெளியீடு! பரபரப்பு தகவல்!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
விஐடி - மொரீஷியஸ் நடத்திய தொழில்நுட்ப ஐடியாத்தான் போட்டி: மாணவிகளின் அசத்தல் கண்டுபிடிப்பு!
Embed widget