மேலும் அறிய

அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்ட விஐபி வீடுகளை குறிவைத்து கொள்ளையடித்து வந்த கொள்ளையன் கைது செய்யப்பட்டார். 

திருப்பத்தூர் மாவட்டம் ஏலகிரி மலையில் உள்ள மஞ்சக்கொல்லை புதூர் பகுதியில் தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு சொந்தமாக 25 ஏக்கர் நிலப்பரப்பின் மத்தியில் பண்ணை வீடு உள்ளது.அந்த பண்ணை வீட்டை திருவண்ணாமலை மாவட்டம் புனிகாந்தூர் பகுதியைச் சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி சங்கீதா ஆகியோர் பராமரித்து வருகின்றனர்.


அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 11 ஆம் தேதி நள்ளிரவில்  , பிரேம்குமார் உற்பட்ட அனைவரும் அவுட்ஹவுஸ்ல் தூங்கிக்கொண்ட இருந்தபொழுது , அடையாளம் தெரியாத திருடன் பண்ணை வீட்டுக்குள் புகுந்து, நுழைவு வாயிலின் பெரிய கதவை உடைத்து உள்ளே சென்று உள்ளான் .

வீட்டுக்குள் பணம், நகைகள் ஏதும் கிடைக்காததால் ஆத்திரமடைந்து மேல் தளத்திலிருந்த டிவி-யை உடைத்துள்ளனர். பின்னர், அங்கிருந்த சிசிடிவி கேமராவின் ஹார்டு டிஸ்க்கை மட்டும் திருடிச் சென்றுள்ளனர்.

அன்று இரவே  , துரைமுருகன் பண்ணை வீட்டிற்கு பக்கத்திலுள்ள வாணியம்பாடி தனியார் பள்ளி தாளாளர் செந்தில் குமார் என்பவரின் பண்ணை வீட்டிலும் திருட முற்பட்ட கொள்ளையர்களுக்கு , பணம் , நகை ஏதும் கிடைக்காததால் ஆத்திரத்தில் ,துரைமுருகனின் பண்ணை வீட்டு நுழைவாயிலில் அங்கு கிடந்த லிப்ஸ்டிக் ஒன்றை எடுத்து துரைமுருகன் பண்ணை வீட்டு காம்பௌண்ட் சுவரில், ‘‘ஒரு நூறு ரூபாய் வைக்க மாட்டியா?’’ என  எழுதி சென்றுள்ளனர் . அங்கிருந்த நோட்டு புத்தகத்திலும், ‘‘ஒரு ரூபாய் கூட இல்ல, எடுக்கல’’ என எழுதி கண்ணுக்குத் தெரியும்படி வைத்துவிட்டுச் சென்றுள்ளனர்.   


அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

இது தொடர்பாக ஏலகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர் . 

இந்நிலையில்  வாணியம்பாடி நகர காவல்நிலைய பகுதிக்குட்பட்ட முஸ்லிம்பூர்  அபூபக்கர் தெருவை சேர்ந்த  அதாவுர் ரஹமான் என்பவர் வீட்டில்  ஜூலை மாதம் 13ஆம்  தேதியும்   , வாணியம்பாடி ஆசிரியர் நகர் பகுதியில் வசிக்கும் ஆசிரியர் வசீம் அக்ரம் என்பவர் வீட்டில்  ஜூன் மாதம்  23ஆம் தேதி  தேதியும் , இரு வீட்டிலும் சேர்த்து  40  சவரன் தங்கநகைக்கு மேல் கொள்ளையடிக்கப்பட்டது .  

இந்த தொடர் கொள்ளை சம்பவங்கள் குறித்து , புதிதாக பதவியேற்ற திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிபி சக்கரவர்த்தி தனிப்படை அமைத்து குற்றவாளிகளை விரைந்து பிடிக்க உத்தரவிட்டு இருந்தார் .


அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

 இதனிடையே ஞாயிற்றுக்கிழமையான இன்று , தனிப்படை போலீசார் ,வாணியம்பாடி பெருமாள் பேட்டை பகுதியில்  வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்பொழுது வாணியம்பாடி பகுதியை சேர்ந்த நவீத் (வயது 28 ) தந்தை பெயர் நஸீர் பாஷா என்ற இளைஞரை சோதனை செய்த பொழுது அவரிடம் 20 சவரன் தங்க நகை இருப்பது தெரியவந்தது .

 சந்தேகத்து இடமான அந்த  இளைஞரை உடனடியாக கைது செய்து திருப்பத்தூர் எஸ் பி சிபி சக்ரவர்த்தி முன்னிலையில் ஆஜர் படுத்தினர் .   தீவிர விசாரணை செய்ததில் வாணியம்பாடியில் 2 வீடுகளில்  தங்க நகையையும் மற்றும் அமைச்சர் துரைமுருகன் மற்றும் பள்ளி தாளாளர் செந்தில் குமார் ஆகியோர் பண்ணை வீடுகளிலும் கொள்ளையடிக்க முயன்றதையும்  ஒப்புக்கொண்டார்.


அமைச்சர் துரைமுருகன் பங்களாவில் கொள்ளை முயற்சி.. ஏதும் கிடைக்காததால் திருடன் செய்த செயல்!

மேலும், வாணியம்பாடியில் முஸ்லிம்பூர்  பகுதியில் வீட்டுக்குள் நுழைய முடியாதபடி சுற்றுசுவர் இருந்ததால் மேல் மாடியில் சென்று வீட்டிற்குள் நுழைய கம்பியின் வளைத்து ஆம்பூர் ரெட்டி தோப்பு பகுதியை சேர்ந்த 13 வயது சிறுவனை கொள்ளை சம்பவத்தில் ஈடுபடுத்தியதாக திருடன் நவீத் தெரிவித்ததை கேட்ட காவல்துறையினர் அதிர்ந்து போயினர்.

கொள்ளையன் நவீத் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் அவன் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 457 , 380 , 294 b , 384  , 397 , 506  (II ) உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .

மேலும் இவனது இந்த தொடர் திருட்டு சம்பவங்களில் , 13  வயதுடைய சிறுவன் உட்பட இருவருக்கு தொடர்பு இருப்பதால் அவர்களையும் கைது செய்ய 3  தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget