மேலும் அறிய

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷை கண்டு பிடித்து தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை மாவட்டத்தில்  விவசாய குறை தீர்வு நாள் கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட கூடுதல் ஆட்சியர் ரிஷப் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. இதில் வேளாண்மை துறை, மின்வாரியத்துறை, வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித் துறை உள்ளிட்ட மாவட்டத்தின் அனைத்து துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இந்த நிலையில் திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த விவசாய பிரதிநிதிகள், விவசாய சங்கத்தைச் சேர்ந்தவர்கள் என திருவண்ணாமலை, கீழ்பெண்ணாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, கலசப்பாக்கம், போளூர், ஜமுனாமரத்தூர், சேத்துப்பட்டு, செய்யார், ஆரணி, வந்தவாசி, வெம்பாக்கம் உள்ளிட்ட 12 தாலுகாக்களிலும் இருந்து விவசாயிகள் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். தங்களது கோரிக்கைகள் குறித்து மாவட்ட கூடுதல் ஆட்சியர் முன்னிலையில் பேசினர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் முருகேஷ் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்திற்கு வரவேண்டும், நீர் வரத்து கால்வாய்களை தூர்வார வேண்டும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கவேண்டும், அரசு அதிகாரிகள் அலுவலக நேரத்திற்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

 


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கோஷம் 

அப்போது விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் கலந்து கொண்ட நிலையில் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சியர் வருகை புரியாததால் ஆத்திரமடைந்த விவசாயிகள் தங்கள் கோரிக்கைகளை யாரிடம் சொல்வது என்று தெரியாமல் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கூட்ட அரங்கில் காத்திருந்து பின்னர் ஆட்சியரை கண்டித்து கண்டன கோஷங்களை எழுப்பினர். விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தில் கலந்து கொண்ட விவசாயிகள் காணவில்லை காணவில்லை மாவட்ட ஆட்சியரை காணவில்லை, கண்டுபிடி கண்டுபிடி காவல்துறையை கண்டுபிடி, வரச்சொல் வரச்சொல் மாவட்ட ஆட்சியரை வரச்சொல், கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம் மாவட்ட ஆட்சியரை கண்டிக்கிறோம், மதிக்கவில்லை மதிக்கவில்லை விவசாயிகளை மதிக்கவில்லை, விவசாயிகளை மதிக்காத மாவட்ட ஆட்சியரே, நடத்த வேண்டும் நடத்த வேண்டும் விவசாயிகள் குறைதீர்வு கூட்டத்தை நடத்த வேண்டும் என கண்டன கோஷங்களை எழுப்பி விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்தனர்.

 


திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரை கண்டுபிடித்து தரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

விவசாயிகள் கோரிக்கை 

கண்ணமங்கலம் பகுதியில் நீர் நிலை பகுதியில் உள்ள ஆக்கரமிப்புகள் உள்ளது. அதனை அகற்ற வலியுறுத்தி பலமுறை மனு அளித்துள்ளோம் ஆனால் இதுவரையில் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை, நீர் நிலை பகுதிகளில் பட்ட வழங்கிய அதிகாரிகள் மீது நீதிமன்றம் உத்தரவு விட்டும் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை, விவசாயிகளிடம் இருந்து ஆவின் பால் கொள்முதல் செய்து வருகிறது. அனைத்து ஆவின் பாலிற்கும் ஒரே  விலைக்கே கொள்முதல் செய்யப்படுகிறது. பாலின் தரத்திற்கு ஏற்றவாரு பாலின் விலை ஆவின் நிர்வாகம் கொடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்தனர். மேலும் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் எந்த அளவுக்கு ஈரப்பதம் இருந்தால் விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படும் என்பதனை முன்கூட்டியே அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் எனவும், புதுப்பாளையம் பகுதியில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்து இருப்பதாக முறையான ஆதாரத்துடன் அதிகாரிகளிடம் புகார் மனு அளித்த பிறகும் முறைகேடு நடத்தியவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் உள்ளார் என விவசாயி குற்றம் சாடினார்    

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
1504
Active
26406
Recovered
146
Deaths
Last Updated: Wed 2 July, 2025 at 11:05 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Cheetah Attack CCTV : ஒரே வீட்டில் 3 வேட்டை !நடுங்க வைக்கும் சிறுத்தை திக்..திக்..cctv காட்சிகள்
EPS Vs Amit Shah : எடப்பாடி பழனிச்சாமி vs அமித் ஷாஉடையும் அதிமுக பாஜக கூட்டணி?புது ரூட்டில் EPS?
திருடன் கையில் பதவி! தடுமாறும் ராமதாஸ்! புலம்பும் பாமகவினர்
அண்ணாமலைக்கு தேசிய பொறுப்பு! வாக்கு கொடுத்த அமித்ஷா! மாநில அரசியல் ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
பரந்தூர் விமான நிலையம்: ஏக்கருக்கு 2.57 கோடி இழப்பீடு! அரசு அதிரடி அறிவிப்பு! அடுத்த கட்டம் என்ன?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
DMK lock-Up Death: வழுக்கும் கழிவறைகள், பலி வாங்கும் சிறைகள் - சீர்கெட்ட காவல்துறை? கண்கெட்ட சிஎம் ஸ்டாலின்?
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Indian Railways: மக்களே கவனம் - ரயில்வேயில் 3 முக்கிய மாற்றங்கள் - தட்கல் டிக்கெட், ரிசர்வேஷனில் திருத்தம்
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
Jobs: அரியலூர் நீதிமன்றத்தில் வேலைவாய்ப்பு.. மாசம் 70 ஆயிரம் சம்பளம்! என்ன வேலை?
IND vs ENG 2nd Test: எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்படி? கரைசேருமா இந்தியா? பர்மிங்காம் சொல்லும் வரலாறு இதுதான்!
IND vs ENG 2nd Test: எட்ஜ்பாஸ்டன் மைதானம் எப்படி? கரைசேருமா இந்தியா? பர்மிங்காம் சொல்லும் வரலாறு இதுதான்!
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
”திமுகவுக்கு பயம் வந்துவிட்டது.. அதிமுகவை அழிக்க முடியாது! ஃபயர் மோடில் எடப்பாடி பழனிசாமி பேச்சு
2026-ல் தொடங்கும் மக்கள்  தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
2026-ல் தொடங்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு! உங்கள் வீட்டில் என்ன கேள்விகள் கேட்கப்படும்? முழு விவரம் இதோ!
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி..  கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
அதிமுகவிற்கு தேவையற்ற சுமை! கொள்கையை விட்டு கூட்டணி.. கட்சியை அவமதிப்பதாகும்! சீமான் ஆவேசம்
Embed widget