மேலும் அறிய

ஆரணியில் சைவ ஓட்டல் உணவில் நெளிந்த புழுவால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆரணியில் சைவ ஓட்டலில் உணவு சாப்பிட்ட போது திடீரென புழு நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி. இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புதுறையினர் மாதிரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் சாலை மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஓம் சரவணன் பவன் என்ற சைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று உணவுகள் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையில் செல்லும் வெளியூர் பயணிகளும் சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்த சைவ உணவகத்தில் ஆரணி நகர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் சாப்பிட்டு வருகின்றனர். வழக்கம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உமேஷ் வயது (35) என்பவர் தனது நண்பருடன் மதிய உணவு சாப்பிட சரவண பவன் உணவகத்திற்கு சென்றுள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் 2 டோக்கன் பெற்று சாப்பாடு ஓன்றுக்கு 75 வீதம் பணத்தை கொடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அதிர்ச்சி சம்பவமாக ஆட்டோடிரைவர் உமேஷ் சாப்பிட்ட கொண்டிருந்த அவரக்காய் சாம்பாரில் புழு நெளிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது சம்மந்தமாக ஓட்டல் ஊழியர்களிடம் ஆட்டோ ஓட்டுநர் கேட்ட போது புழுவை அப்புறபடுத்தி சாப்பிடமாறு சாதரணமாக கூறியதால் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் கைலேஷ்குமார் ஆகிய குழுவினர் புழு இருந்த உணவகத்திற்கு நேரில் சென்று அதன்பேரில் ஓட்டலில் சமையல் கூடம், உணவு பரிமாறும் இடங்களில் ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாடிக்கையாளரிடம் கனிவாக பேச வேண்டும், காய்கறிகளில் புழு இருந்திருக்கலாம். அதை ஒன்றுக்கு இரண்டு முறை அலசி காய்கறிகளை பதப்படுத்தி உணவு சமைத்து பரிமாறுங்கள். புழுதானே என்றெல்லாம் வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாக பேச கூடாது என ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளரை எச்சரித்தார்.


ஆரணியில் சைவ ஓட்டல் உணவில் நெளிந்த புழுவால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆரணி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசைவ ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் ஏற்பட்ட கோளாறால் அங்கு சாப்பிட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒரு சிறுமி உயிரிழந்தார். மற்றொரு அசைவ ஓட்டலில் தேர்வு முடிந்து மாணவர்கள் சாப்பிட்டதில் அங்கும் இது போன்ற கோளாறால் பாதிக்கப்பட்ட மாணவரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் எதிரொலியாக 2 அசைவ ஓட்டல்களும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரணியில் ஏற்கனவே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி இறந்த சம்பவமும் கடந்தாண்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்ட மாணவன் இறந்த சம்பவத்தை அடுத்துஇச்சம்பவம் ஆரணியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
ரயில் மோதி 231 பேர் உயிரிழப்பு... அதிர்ச்சி தகவல்...
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
Jana Nayagan: முதல் படம் நாளைய தீர்ப்பு.. கடைசி படத்திற்கு நாளை தீர்ப்பு..! ஜனநாயகன் ரிலீஸ் ஆகுமா?
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
மத்திய அரசின் அடக்குமுறை: அமைச்சர் ஐ. பெரியசாமி கடும் எச்சரிக்கை! உரிமை பறிப்புக்கு எதிராக கொந்தளிப்பு
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Embed widget