மேலும் அறிய

ஆரணியில் சைவ ஓட்டல் உணவில் நெளிந்த புழுவால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆரணியில் சைவ ஓட்டலில் உணவு சாப்பிட்ட போது திடீரென புழு நெளிந்ததால் வாடிக்கையாளர் அதிர்ச்சி. இச்சம்பவம் குறித்து மாவட்ட உணவு பாதுகாப்புதுறையினர் மாதிரியை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த சேவூர் சாலை மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகில் ஓம் சரவணன் பவன் என்ற சைவ உணவகம் இயங்கி வருகின்றது. இந்த உணவகத்தில் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் சென்று உணவுகள் சாப்பிட்டு வருகின்றனர். மேலும் நெடுஞ்சாலையில் செல்லும் வெளியூர் பயணிகளும் சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். இந்நிலையில் இந்த சைவ உணவகத்தில் ஆரணி நகர் பகுதியில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்களும் சாப்பிட்டு வருகின்றனர். வழக்கம் அருந்ததிபாளையம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் உமேஷ் வயது (35) என்பவர் தனது நண்பருடன் மதிய உணவு சாப்பிட சரவண பவன் உணவகத்திற்கு சென்றுள்ளார். மேலும் ஆட்டோ ஓட்டுநர் 2 டோக்கன் பெற்று சாப்பாடு ஓன்றுக்கு 75 வீதம் பணத்தை கொடுத்து சாப்பிட்டு கொண்டிருந்தனர். அப்போது திடீரென அதிர்ச்சி சம்பவமாக ஆட்டோடிரைவர் உமேஷ் சாப்பிட்ட கொண்டிருந்த அவரக்காய் சாம்பாரில் புழு நெளிந்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது சம்மந்தமாக ஓட்டல் ஊழியர்களிடம் ஆட்டோ ஓட்டுநர் கேட்ட போது புழுவை அப்புறபடுத்தி சாப்பிடமாறு சாதரணமாக கூறியதால் ஆட்டோ ஓட்டுநர் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் இச்சம்பவம் குறித்து ஆரணி தாலுக்கா காவல்நிலையத்தில் ஆட்டோ ஓட்டுநர் புகார் அளித்துள்ளார். இதன்பேரில் இன்ஸ்பெக்டர் புகழ் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார். இதுகுறித்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலகத்திற்கு தகவல் அளித்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்த உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மற்றும் கைலேஷ்குமார் ஆகிய குழுவினர் புழு இருந்த உணவகத்திற்கு நேரில் சென்று அதன்பேரில் ஓட்டலில் சமையல் கூடம், உணவு பரிமாறும் இடங்களில் ஆரணி உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் வாடிக்கையாளரிடம் கனிவாக பேச வேண்டும், காய்கறிகளில் புழு இருந்திருக்கலாம். அதை ஒன்றுக்கு இரண்டு முறை அலசி காய்கறிகளை பதப்படுத்தி உணவு சமைத்து பரிமாறுங்கள். புழுதானே என்றெல்லாம் வாடிக்கையாளர்களிடம் அலட்சியமாக பேச கூடாது என ஊழியர்கள், ஓட்டல் உரிமையாளரை எச்சரித்தார்.


ஆரணியில் சைவ ஓட்டல் உணவில் நெளிந்த புழுவால் வாடிக்கையாளர் அதிர்ச்சி

ஆரணி நகரில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அசைவ ஓட்டலில் பரிமாறப்பட்ட உணவில் ஏற்பட்ட கோளாறால் அங்கு சாப்பிட்ட சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் ஒரு சிறுமி உயிரிழந்தார். மற்றொரு அசைவ ஓட்டலில் தேர்வு முடிந்து மாணவர்கள் சாப்பிட்டதில் அங்கும் இது போன்ற கோளாறால் பாதிக்கப்பட்ட மாணவரில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதன் எதிரொலியாக 2 அசைவ ஓட்டல்களும் மூட நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆரணியில் ஏற்கனவே சிக்கன் பிரியாணி சாப்பிட்ட சிறுமி இறந்த சம்பவமும் கடந்தாண்டு சிக்கன் தந்தூரி சாப்பிட்ட மாணவன் இறந்த சம்பவத்தை அடுத்துஇச்சம்பவம் ஆரணியில் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ABP Premium

வீடியோ

பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி
”பி.ஆர். பாண்டியனுக்கு 13 ஆண்டு சிறை”திருவாரூர் நீதிமன்றம் அதிரடிதீர்ப்பு முழு விவரம்
Durga Stalin |காஞ்சி கோயிலில் தங்கத்தேர்!பக்தி பரவசத்தில் துர்கா மெய்சிலிர்த்து வேண்டும் காட்சிகள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பக்தி பரவசத்தில் துர்கா ஸ்டாலின் - தேர்தல் நெருங்கும் வேளையில் பால்குடம் சுமந்து வேண்டுதல்..
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
பெண் குழந்தைகள் பாதுகாப்பு: போக்சோ நீதிமன்றங்களை அதிகரிக்க சௌமியா அன்புமணி வலியுறுத்தல்!
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
சபரிமலை யாத்திரை: கேரள அரசு அதிரடி! பக்தர்களுக்காக பேருந்து வசதிகள், வருமானம் எவ்வளவு தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
ஆஷஸ் டெஸ்ட்: பிரிஸ்பேனில் ஆஸ்திரேலியாவின் அபார வெற்றி! இங்கிலாந்துக்கு காத்திருந்த அதிர்ச்சி என்ன தெரியுமா?
TN Weather Report: தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
தமிழ்நாட்டில் வரும் 13-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு; வானிலை மையத்தின் அப்டேட்ட பாருங்க
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
எந்த பந்து வீசினாலும் நம்ம கிட்ட வந்தா சிக்ஸர் தான்.! கேடு கெட்ட அரசியல் செய்யும் பாஜக! இறங்கி அடிக்கும் ஸ்டாலின்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
கொத்து கொத்தாக அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்.! கொண்டாடும் மதுரை மக்கள்
Who Owns IndiGo Airlines.?: சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? அவருக்கு வேறு என்ன தொழில்கள் உள்ளன.?
சர்ச்சையில் சிக்கிய இண்டிகோ நிறுவனத்தின் உரிமையாளர் யார்.? இதுபோக இத்தனை தொழில்களா.?
Embed widget