மேலும் அறிய

Crime: கொடுத்த கடனை திருப்பி கேட்ட நண்பன்.. கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபர் - தி.மலையில் நடந்தது என்ன?

திருவண்ணாமலை அருகே கடன் கொடுத்த பணத்தை திரும்பி கேட்ட தகராறில் வாலிபர் கொலை செய்யப்பட்டார். கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் வாலிபர் பிணத்தை போலீசார் மீட்டனர்.

திருவண்ணாமலை வ.உ.சி நகர் 10-வது தெருவை சேர்ந்த வாலிபர் விஜய் 25 வயதான இவர் கடந்த மாதம் 10-ம் தேதி தண்டராம்பட்டு பகுதியில் பெயிண்டர் வேலைக்கு செல்வதாக வீட்டில் கூறிவிட்டு சென்றுள்ளார். ஆனால் மாலை வீட்டிற்கு விஜய் திரும்பவில்லை, இதனால் விஜயின் தொலைபேசிக்கு போன் செய்துள்ளனர். தொலைபேசி ஆப் என வந்துள்ளது.

 

அதன் பிறகு காணாமல் விஜய்யை அவருடைய குடும்பத்தினர் பல இடங்களில் தேடிவந்துள்ளனர். ஆனால் எங்கேயும் கிடைக்கவில்லை, பின்னர் காணமல் போன விஜயின் தாய் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் நகர காவல் நிலைய காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். ஆனால் இதில் எந்த துப்பும் கிடைக்கவில்லை, இந்நிலையில் விஜய் கடைசியாக நண்பர் அருண் என்பவருடன் தொலைபேசியில் பேசிவிட்டு அவருடன் சென்றதாக கூறப்படுகிறது. 

 


Crime: கொடுத்த கடனை திருப்பி கேட்ட நண்பன்.. கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபர் - தி.மலையில் நடந்தது என்ன?

அழுகிய நிலையில் சடலம்:

இதையடுத்து காவல்துறையினர் அருணை பிடித்து விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்து உள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரிடம் கிடுக்கிப்பிடி தீவிர விசாரணை நடத்தினர்.பின்னர் அவர் கொடுத்த தகவலின் பேரில் காவல்துறையினர் திருவண்ணாமலையை அடுத்த அய்யம்பாளையம் புதூர் பகுதியில் உள்ள மக்கள் பயன்பாட்டில் இல்லாத கிணற்றில் காவல்துறையினர் சோதனை நடத்தினர்.

அப்போது விஜயின் பிணம் அழுகிய நிலையில் கிடந்தது. மேலும் பிணம் மிகவும் அழுகி பாதியாக இருந்தது. அதனைத்தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்பு வீரர்களுடைய உதவியுடன் கிணற்றில் இருந்து பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கான திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தொடர்ந்து காவல்துறையினர் அருணிடம் விசாரணை நடத்தினர். 

 

 


Crime: கொடுத்த கடனை திருப்பி கேட்ட நண்பன்.. கத்தியால் குத்திக் கொலை செய்த வாலிபர் - தி.மலையில் நடந்தது என்ன?

 

இதுகுறித்து காவல்துறையினர் கூறியதாவது;

விஜய்க்கும், அருணுக்கும் இடையே பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்சினை இருந்து வந்துள்ளது. கடந்த ஆகஸ்டு மாதம் 10-ந் தேதி அவர்கள் இருவரும் அய்யம்பாளையம் புதூர் பகுதியில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இல்லாத கிணற்றின் அருகில் அமர்ந்து மது அருந்தி உள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே பணம் கொடுக்கல், வாங்கல் குறித்து வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரம் அடைந்த அருண் அவர் வைத்திருந்த கத்தியால் விஜயை குத்தியுள்ளார். இதில் காயம் அடைந்த அவர் அங்கிருந்து தப்பியோட முயன்று அருகில் இருந்த கிணற்றில் குதித்தார். விஜய் எப்படியும் கிணற்றில் இருந்து வெளியே வந்து விடுவார் என்று அங்கிருந்து அருண் சென்று உள்ளார். இவ்வாறு அருண் தெரிவித்ததாக காவல்துறையினர் கூறினர்.தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து திருவண்ணாமலை நகர காவல்துறையினர் அருணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கடனை திருப்பி கேட்டதற்கு நண்பனையே கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

EPS on BJP ADMK Alliance | அதிமுகவினரை வைத்தே ஸ்கெட்ச் ஆட்டம் காட்டிய பாஜக வழிக்கு வந்த EPS | Election 2026Tamilisai vs MK Stalin | தெலுங்கில் பிறந்தநாள் வாழ்த்து!முதல்வரை சீண்டிய தமிழிசை ஸ்டாலின்பதிலடிGovt School Issue | அரசு பள்ளியில் அவலம்!’’பாத்ரூம் கழுவ சொல்றாங்க’’  மாணவிகள் பகீர் புகார்PTR vs Karan Thapar | ’’உ.பி, பீகார் பத்தி பேசுவோமா?’’PTR தரமான சம்பவம் வாயடைத்துப்போன கரண் தபார்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
TVK VIJAY: சொன்னதை செய்தால் தண்டனையா? நாங்க தோள் கொடுப்போம் - பொங்கி எழுந்த விஜய்
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
PM Modi: சிங்கத்திற்கே பால் கொடுத்த பிரதமர் மோடி.. வந்தாரா வனக்காப்பகத்தில் மாஸ்!
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
ALL Party Meeting: இன்று அனைத்துக் கட்சி கூட்டம் - சி.எம். ஸ்டாலின் முக்கிய முடிவு? பங்கேற்பது, புறக்கணிப்பது யார்?
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
Watch Video: ஆத்தி..! களேபரமான நாடாளுமன்றம், கண்ணீர் புகை குண்டுகள், திக்குமுக்காடிய எம்.பிக்கள், வீடியோ வைரல்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IPL 2025 Rules: அதெல்லாம் முடியவே முடியாது..! ஐபிஎல், வீரர்களுக்கு பிசிசிஐ விடுத்த கடும் கட்டுப்பாடுகள்
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
IND vs AUS: திக்.. திக்.. கோலி, ஹர்திக் மிரட்டல்! பழி தீர்த்தது இந்தியா! அழும் ஆஸ்திரேலியா!
EPS Slams DMK:
EPS Slams DMK:"ஏழை மக்களை ஏமாற்றுகின்ற ஆட்சி திமுக ஆட்சி... திமுக ஆட்சிக்கு முடிவு காலம் வந்துவிட்டது".
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
மக்களே! பட்டா, கிரையப் பத்திரம் உடனே வாங்கனுமா? இதுதான் வழி!
Embed widget