மேலும் அறிய

crime: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தல் - காட்பாடியில் சிக்கியது எப்படி..?

ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கடத்தபட்ட 23 கிலோ கஞ்சா காட்பாடி சோதனை சாவடியில் பறிமுதல். காருடன் 5 பேரை சுற்றுவளைத்த காவல்துறையினர்.

ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களுக்கு கடத்தி செல்கின்றனர். இந்த கடத்தலை தடுக்கும் வகையில் மாநில எல்லைகளில் காவல்துறையினர் 24 மணிநேரம் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  மேலும் வேலூர் மாவட்ட எல்லையான காட்பாடி கிருஷ்டியான் பேட்டை சோதனை சாவடியில் மதுவிலக்கு காவல்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலூர் மதுவிலக்கு பிரிவு ஆய்வாளர் தேவி தலைமையிலான காவல்துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.  அப்போது ஆந்திராவில் இருந்து சந்தேகத்திற்கு இடமான சரக்கு லாரி ஒன்று  வந்து கொண்டு இருந்தது. அப்போது காவல்துறையினர் லாரியை மடக்கி  சோதனை செய்தனர். அந்த லாரியில் சிறிய வகையான லெதர் பைகள் இருந்தது. இதையடுத்து ஓட்டுனரை அமர்ந்து வந்த கேபின் பகுதியில் காவல்துறையினர் சோதனை செய்தனர். அந்த சீட்டுக்கு அடியில் கஞ்சா பதுக்கி வைத்து இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 


crime: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தல் - காட்பாடியில் சிக்கியது எப்படி..?

 

அதனைத்தொடர்ந்து லாரியிலிருந்து இருவரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இந்த விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தை சேர்ந்த கார்த்திக் வயது (28), திருச்செந்தூர் பகுதியைச் சேர்ந்த கல்லாண்ட குமார் வயது (33) என்பதும் இவர்கள் கொல்கத்தாவில் இருந்து லெதர் பைகளை ஏற்றிக்கொண்டு பெங்களூருக்கு கொண்டு செல்லும் போது கஞ்சாவை வேலூர் மாவட்ட எல்லையில் வேறு கும்பலிடம் கொடுத்து தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்வதும் தெரியவந்தது.  இதனைத்தொடர்ந்து 23 கிலோ கஞ்சாவுடன் லாரியை பறிமுதல் செய்து தீவிர விசாரணை நடத்தினர். மேலும் இந்த கஞ்சாவை கொண்டு செல்ல ஒரு கும்பல் காரில் வேலூரில் தயார் நிலையில் இருப்பது காவல்துறையினருக்கு  தெரியவந்தது . உடனடியாக காவல்துறையினர் பிடிபட்டவர்களை வைத்து காரில் உள்ள அந்த கும்பலை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு குறிப்பிட்ட இடத்திற்கு வந்து கஞ்சாவை பெற்று கொள்ளுங்கள் என கூற அந்த கும்பலை வரவைத்துள்ளனர்.

 


crime: ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தல் - காட்பாடியில் சிக்கியது எப்படி..?

பின்னர் அந்த கும்பலும் காரில் அவர்கள் சொன்ன இடத்திற்கு வந்தனர். அப்போது அங்கு மறைந்திருந்து காவல் துறையினர் காரில் இருந்த மூன்று நபர்களையும் வளைத்தனர். அந்த மூன்று நபரை பிடித்த காவல்துறையினர் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீ வைகுண்டத்தைச் சேர்ந்த மாடசாமி வயது (25), பிரேம்குமார் வயது (24) தூத்துக்குடி மாவட்டம் ஏரல் பகுதியைச் சேர்ந்த தங்கதுரை வயது (19) ஆகிய மூவரையும் ஆந்திராவில் இருந்து சரக்கு லாரிகளில் வரும் கஞ்சாவை வேலூர் மாவட்டத்தில் கஞ்சாவை வாங்கிக்கொண்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு கொண்டு செல்வது தெரிய வந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து 23 கிலோ கஞ்சா லாரி மற்றும் காருடன் 5 நபர்களை காவல் துறையினர் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?BJP MP Bajan in Vande Bharat : ஓடும் ரயிலில் பஜனை! பாஜக MP-யின் சர்ச்சை வீடியோVCK Issue : திருமாவுக்கு எதிராக சதி?ரவிக்குமார் வீட்டில் Meeting..ஆதவ்-க்கு கடும் எதிர்ப்புBigil Mani Surrender : ”ENCOUNTER பண்ணிடாதீங்க” ACTION-ல் இறங்கிய அருண் IPS! பீதியில் சரணடைந்த ரவுடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aadhav Arjuna :  “ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த பரபரப்பு விளக்கம் இதுதான்..!
“ஆதவிற்கு உள்நோக்கமா?” திருமாவிடம் அர்ஜூனா கொடுத்த விளக்கம் இதுதான்..!
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Nitin Gadkari: பிரதமர் ஆக ஆசையா? மோடிகிட்ட கேளுங்க? மத்திய அமைச்சர் நிதின் கட்கரி நச் பதில்
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
Breaking News LIVE 27th Sep 2024: இன்றுடன் முடிவடைகிறது காலாண்டுத் தேர்வு! நாளை முதல் தொடங்குது விடுமுறை!
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
சிறுமிக்கு ஆபாச வீடியோ அனுப்பி மிரட்டல்... யூடியூபர் மகன் கைது... சிக்கிய ரவுடி பேபி சூர்யா...
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
IND Vs Ban 2nd Test: வங்கதேசத்துடன் இன்று 2வது டெஸ்ட் போட்டி - தொடரை கைப்பற்றுமா இந்தியா? கோலி, ரோகித் ஜொலிப்பார்களா?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
CM Stalin Delhi: இன்று பிரதமர் மோடியை சந்திக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின் - தமிழ்நாட்டிற்கான நிதியை கொடுக்குமா மத்திய அரசு?
Rasi Palan Today, Sept 27: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan: மேஷத்துக்கு நிம்மதியான நாள், ரிஷபத்துக்கு எதிர்ப்புகள் மறையும்.. உங்கள் ராசிக்கான பலன்
தமிழகத்தில் இன்று ( 27.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம்?
தமிழகத்தில் இன்று ( 27.09.24 ) மின் தடை ஏற்படும் பகுதிகள்: எங்கெல்லாம்?
Embed widget