![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
தாலி கட்டும் போது மாப்பிள்ளைக்கு நோ சொன்ன மணப்பெண்: டிபன் வீணாகாமல் சாப்பிட்டு பிரிந்த குடும்பத்தினர்!
வேலூரில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்று கடைசி நேரத்தில் கல்யாண பெண் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
![தாலி கட்டும் போது மாப்பிள்ளைக்கு நோ சொன்ன மணப்பெண்: டிபன் வீணாகாமல் சாப்பிட்டு பிரிந்த குடும்பத்தினர்! bride who stopped the wedding last time because she did not like the groom in Vellore தாலி கட்டும் போது மாப்பிள்ளைக்கு நோ சொன்ன மணப்பெண்: டிபன் வீணாகாமல் சாப்பிட்டு பிரிந்த குடும்பத்தினர்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/12/07/5d600c9e8e9766292083ba509053489c_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
வேலுார் மாவட்டம், பாக்கம் பகுதியை சேர்ந்தவர் 25 வயதான சண்முகப்பிரியா, இவருக்கும் குச்சிப்பாளையத்தைச் சேர்ந்த 31 வயதான பாலமுருகன் என்பவருக்கும் கடந்த மாதம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்து திருமணத்திற்கான தேதியும் குறிக்கப்பட்டது.
இந்தநிலையில், நேற்று பள்ளிகொண்டாவில் உள்ள தனியார் மண்டபத்தில் இருவருக்கும் திருமண ஏற்பாடுகள் வெகு விமர்சையாக நடைபெற்றுள்ளது. அதன்படி, நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரி, விருந்துடன் வரவேற்பு நடந்தது.
நேற்று காலை 9:00 மணிக்கு இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்த நிலையில், தீடிரென மணப்பெண் காலை, 6:00 மணியளவில் தனது பெற்றோர் மற்றும் மணமகனின் பெற்றோரை அழைத்து எனக்கு மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றும், இதனால் திருமணத்தில் விருப்பம் இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.
இந்த தகவலை கேட்டு அதிர்ச்சியடைந்த இரு தரப்பினரும், கல்யாண பெண்ணிடம் திருமணம் செய்து கொள்ளுமாறு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, தனக்கு இந்த திருமணத்தில் விருப்ப மில்லை, மாப்பிள்ளையையும் பிடிக்கவில்லை, என்னை நீங்கள் திருமணம் செய்துகொள்ளுமாறு கட்டாயப்படுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டல் விடுத்து, தாலியை துாக்கி வீசியுள்ளார்.
இதையடுத்து, இரு வீட்டாரும் தனது சொந்தக்காரர்களிடம் மன்னிப்பு தெரிவித்து திருமணம் நின்றுவிட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர். மேலும், காலை டிபன் வீணாகி விடும் என்ற காரணத்திற்காக இரு தரப்பினரும் கேட்டு கொண்டதன்படி உறவினர்கள் சாப்பிட்டு காலி செய்துவிட்டு, சோகத்துடன் மண்டபத்தை காலி செய்து சென்றுள்ளனர்.
ஏற்கனவே, 90'ஸ் கிட்ஸுக்கு கல்யாணம் ஆகவில்லை என்று தொடர்ந்து சமூக இணையதளங்களில் செய்திகள் முதல் மீம்ஸ் வரை கிண்டல் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், கடைசி நேரத்தில் திருமணம் நின்றுவிட்டால் அந்த மணமகனின் நிலைமையை நினைத்து பாருங்கள்...
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
கணவர் ஜாக்கெட் தைத்து தராததால் மனைவி தற்கொலை… ஹைதராபாத் அருகே நிகழ்ந்த சோகம்!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
ஜூலிக்கு 3 காதலர்களா? காதலன் மீதான புகாரில் அவிழும் முடிச்சுகள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)