மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
பைக்கில் வீலிங்...? - தடுப்புச் சுவரில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு
விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
![பைக்கில் வீலிங்...? - தடுப்புச் சுவரில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு Accident news Two youths were killed when a two-wheeler collided with a barricade near Ambur - TNN பைக்கில் வீலிங்...? - தடுப்புச் சுவரில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/7c99137390e6e5161603be66c2da76101705317647611113_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
விபத்தில் உயிரிழந்த இளைஞர்
ஆம்பூர் அருகே இருசக்கர வாகனம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்தனர்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த மின்னூர் பகுதியில் பெங்களூர் சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் ஆம்பூர் ரபீக் நகர் பகுதியை சேர்ந்த அசீம்(21) மற்றும் புதுமனைப் பகுதியை சேர்ந்த ஷாமித் (22) ஆகிய இரண்டு இளைஞர்கள் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
விபத்தில் உயிரிழந்த இளைஞர்களின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. விபத்து குறித்து ஆம்பூர் கிராமிய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
![பைக்கில் வீலிங்...? - தடுப்புச் சுவரில் மோதி இரு இளைஞர்கள் உயிரிழப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/15/261bbc8580faea67f2307a11b73457fe1705317691766113_original.jpg)
மேலும் முதற்கட்ட விசாரணையில் இருசக்கர வாகன விபத்தில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரும் வாணியம்பாடியில் இருந்து ஆம்பூர் நோக்கி செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்து வந்ததாக கூறப்படுகிறது.
ஆம்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் வீலிங் செய்த போது தேசிய நெடுஞ்சாலை நடுவே உள்ள தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானதில் இரு இளைஞர்கள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
காஞ்சிபுரம்
கோவை
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion