மேலும் அறிய

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்! தாராவி மக்களின் காலா.. யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்!

மும்பையில் உள்ள சயான் கோலிவாட தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் கேப்டன் தமிழ் செல்வன்.

துபாய்க்கு அழைத்துச் செல்வதாக கூறி ஏமாற்றப்பட்டு மும்பை விமான நிலையத்தில் இறக்கி விடபட்ட தமிழன், பின்னர் அதே மும்பையில் வாழ்க்கையை தொடங்கி ரயில் நிலையத்தில் கூலி தொழிலாளியாக பணியாற்றி, இன்று அதே மும்பையில் உள்ள சயான் கோலிவாடா தொகுதியை தொடர்ந்து மூன்றாவது முறையாக கைப்பற்றி ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார் கேப்டன் தமிழ்செல்வன். அவருக்கு நிச்சயம் இந்த முறை அமைச்சர் பதவி வழங்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மராட்டிய மண்ணில் வெற்றி கொடி நாட்டிய தமிழன்:

தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள பிலாவிடுதி என்னும் கிராமம் தான் தமிழ்செல்வனின் பூர்வீகம். இவரது தாய், தம்பி ஆகியோர் தற்போதும் புதுக்கோட்டை மாவட்டத்தில் தான் வசித்து வருகிறார்கள்.

ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த தமிழ் செல்வன் எப்படியாவது வெளிநாடு சென்று பணம் சம்பாதித்து வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வேண்டும் என்ற கனவோடு சுமார் 35 ஆண்டுகளுக்கு முன் துபாய் செல்ல முயற்சிகளை மேற்கொண்டார்.

அப்போது துபாயில் வேலை வாங்கி தருவதாக கூறி, ஏஜென்ட் ஒருவர், தமிழ் செல்வனை மும்பைக்கு அழைத்துச் சென்று ஏமாற்றி விமான நிலையத்தில் விட்டுவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். துபாய்க்குச் செல்வதாக ஊரில் கூறிவிட்டு வந்து ஏமாந்து போய் மீண்டும் வெறுங்கையுடன் திரும்புவதை தமிழ்ச்செல்வன் விரும்பவில்லை.

யார் இந்த கேப்டன் தமிழ்ச்செல்வன்?

அதனால் மும்பையிலேயே தங்கிவிட்டார் அவர். ஒரு வேலை சாப்பிட கூட கையில் பணமில்லை, மும்பை ரயில் நிலையத்திலேயே தங்கிய தமிழ் செல்வன், கூலித் தொழிலாளியாக தன் வாழ்க்கையைத் தொடங்கினார். உதவும் மணம் கொண்ட தமிழ் செல்வன், தன்னுடைய தேவைகளை பூர்தி செய்து கொள்வதில் மட்டும், கவனம் செலுத்தாமல் தாராவி உள்ளிட்ட தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் பல மக்களுக்கு உதவத் தொடங்கினார்.

குறிப்பாக, மும்பை தாஜ் ஹோட்டலில் தீவிரவாதி தாக்குதல் நிகழ்வு தமிழ் செல்வன் வாழ்வில் மறக்கமுடியாத ஒன்றாக மாறியது. தீவிரவாத தாக்குதலின் போது காயமடைந்து உயிருக்கு போராடிய 50க்கும் அதிகமான நபர்களை தன்னுடைய ரிக்‌ஷாவில் ஏற்றிக்கொண்டு அவசர அவசரமாக, மருத்துவமனை நோக்கி மூச்சு இறைக்க சென்றார்.

பலரின் உயிரை காப்பாற்றிய தமிழ் செல்வனை மக்கள் கையெடுத்து கும்பிட்டனர். இவரது சேவையை பாராட்டிய, மகாராஷ்டிர மாநில ஆளுநர் தமிழ் செல்வனுக்கு விருது வழங்கி கவுரவித்தார். அதனால் அதுவரை சாதரண தமிழ் செல்வனாக அழைக்கப்பட்டு வந்தவர் அதன் பின் கேப்டன்' தமிழ்ச்செல்வனாக உருவெடுத்தார்.

மும்பை வாழ் தமிழ் மக்கள் இவரை பெயரை சொல்லி அழைப்பதை விட, கேப்டன் என்று அழைக்கிறார்கள். இந்நிலையில், படிப்படியாக உயர்ந்த தமிழ் செல்வனின் கிராஃப் அவரை உலகத் தமிழர் கூட்டமைப்பின் மாநில தலைவராக மாற்றியது.

அதை தொடர்ந்து மும்பை மாநகராட்சியின் கவுன்சிலராக பொறுப்பேற்ற தமிழ்செல்வன், அடுத்ததாக பாஜகவில் இணைந்தார். அங்கிருந்து எகிற தொடங்கியது தமிழ்ச்செல்வனின் பொலிட்டிக்கல் கிராஃப். 2014 சட்டசபை தேர்தலில் சயான் கோலிவாடா தொகுதியில் சீட் கொடுத்தது பாஜக.

அதில் வெற்றி பெற்ற முதல் முறையாக எம்.எல்.ஏ ஆன தமிழ்செல்வன், மீண்டும் 2019, 2024 என  அடுத்தடுத்த தேர்தல்களில் வரிசையாக நின்று மூன்றாவது முறையாக தற்போது சயான் கோலிவாடா தொகுதியில் வெற்றிப்பெற்றுள்ளார்.

மும்பை சயான் கோலிவாடா தொகுதியில் பாஜகவும், காங்கிரஸ் கட்சிகள் நேரடியாக மோதின. பாஜக சார்பில் கேப்டன் தமிழ் செல்வனும், காங்கிரஸ் கட்சி சார்பில் கணேஷ் குமார் யாதவ் என்ற தமிழ் நாட்டை பூர்விகமாக கொண்ட இன்னோரு தமிழரும் போட்டியிட்டனர். இந்நிலையில் மகாராஷ்டிரா தேர்தலில் யார் அடுத்த முதல்வர் என்று எழுந்த எதிர்பார்ப்பை காட்டிலும், இந்த இரு தமிழர்களில் யார் கோலிவாடா தொகுதியை கைப்பற்றப் போகின்றனர் என்ற எதிர்பார்ப்பு தமிழ் நாட்டில் நிலவியது.  
 
இந்த நிலையில் தான் சயான் - கோலிவாட தொகுதியில் மூன்றாவது முறையாக போட்டியிட்டு ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ளார் கேப்டன் தமிழ் செல்வன். பாஜக தலைவர் தேவேந்திர பட்னாவிஸுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்படும் கேப்டன் தமிழ் செல்வனுக்கு இந்த முறை மகாராஷ்டிர கூட்டணி அரசில் நிச்சயம் அமைச்சர் பதவி கொடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
ABP Premium

வீடியோ

”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்
Virugambakkam DMK Candidate | விருகம்பாக்கம் சீட் யாருக்கு? பிரபாகர்ராஜாவா? தனசேகரனா? திமுகவில் காத்திருக்கும் Twist
கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Stalin Vs EPS: டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
டெல்லியைக் குளிர்விக்க...பட்டும் படாமல் தொட்டும் தொடாமல் அழுத்தமா.! இபிஎஸ்க்கு எதிராக சீறிய ஸ்டாலின்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
பாமகவில் இருந்து ஜி.கே.மணி நீக்கம்.?? ராமதாசுக்கு ஷாக் கொடுக்க அன்புமணி திடீர் நோட்டீஸ்
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Messi Visit Vantara: தியானம்.. கால்நடை.. என்ன ஒரு அழகு..! வந்தாராவிற்கு புகழாரம் சூட்டிய மெஸ்ஸி..!
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
Kartik Sharma: காசின்றி பட்டினி, இரவு விடுதியில் தஞ்சம் - ரூ.14.2 கோடியை அள்ளிய CSKவின் கார்திக் சர்மா கதை
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
TVK Vijay: செங்கோட்டையன் பிடியில் விஜய்.. ஈரோடு தவெக நிகழ்ச்சியில் நிகழப்போகும் மாற்றம்?
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Delhi Air Pollution: கார்களுக்கு தடை, பேருந்துகளும் ஓடாத சூழல் - இன்று முதல் புதிய விதிகள் அமல், மக்கள் குழப்பம்
Annamalai:
Annamalai: "நான் மோடிக்கு விசுவாசமான நாய்” - தவெகவுக்கு அண்ணாமலை பதிலடி.. நடந்தது என்ன?
HOLIDAY: 2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
2 நாள் விடுமுறை.! மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு சூப்பரான அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து துறை
Embed widget