மேலும் அறிய

Crime: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.2 லட்சம் மோசடி... இளைஞர் கைது

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி திருச்சி ரியல் எஸ்டேட் அதிபரிடம் ரூ.2 லட்சம் மோசடி செய்த ஈரோட்டை சேர்ந்த பட்டதாரி வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திருச்சி குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் கர்ணன் (வயது 30). ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் வெளிநாட்டிற்கு வேலைக்குச் செல்ல எண்ணி ஆன்லைன் மூலம் விண்ணப்பித்தார். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம், பெரிய செட்டிபாளையம் புதூர் பகுதியை சேர்ந்த வினோத் கண்ணன் (32) என்பவர் வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக போலி வெப்சைட்டில் தகவல் வெளியிட்டுள்ளார்.

இதனை நம்பி வேலை கேட்டு விண்ணப்பித்த கர்ணனனை தொடர்பு கொண்டு வெளிநாட்டில் வேலை உள்ளதாகவும், அதற்கு முன்பணம் செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார். இதனை நம்பிய கர்ணன் ரூ.2 லட்சத்தை வினோத் கண்ணன் வங்கிக் கணக்கிற்கு அனுப்பி வைத்தார்.

பின்னர் அடுத்த நாள் வினோத் கண்ணனை தொடர்பு கொண்டார். அப்போது அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. அதன் பின் அவரைத் தொடர்பு கொள்ளமுடியவில்லை. இதனையடுத்து தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த கர்ணன் திருச்சி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார்.

இன்ஸ்பெக்டர் அன்பு மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து இது குறித்து விசாரணை நடத்தி வந்தனர். விசாரணையில் வினோத் கண்ணன் அனுப்பிய இ-மெயில் முகவரி மூலம் கண்காணித்தனர்.


Crime: வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக்கூறி ரூ.2 லட்சம் மோசடி... இளைஞர் கைது

இதில் நேற்று (ஆக.19) வினோத் கண்ணன் அவரது வீட்டில் இருப்பதாக தகவல் தெரியவந்தது. இதையடுத்து சைபர் கிரைம் போலீசார் ஈரோட்டுக்கு சென்று வினோத் கண்ணனை கைது செய்தனர். மேலும் அவரது வங்கி கணக்கை சோதனை செய்த போது அதில் ரூ.15 லட்சம் வரை உள்ளது தெரியவந்தது.

மேலும் அவரிடம் பணம் செலுத்தி பலர் ஏமாந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. கைதான வினோத் கண்ணன் கேட்டரிங் முடித்துள்ளார். அவர் கம்ப்யூட்டர் நுணுக்கங்களை கற்றுக் கொண்டு மோசடியில் ஈடுபட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 

தொடர்ந்து காவல் துறையினர் கூறுகையில், ”தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மோசடி கும்பல் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். குறிப்பாக பணம் செலுத்தினால் மூன்று மடங்கு நான்கு மடங்கு லாபம் தருவதாக ஆசை வார்த்தை கூறி பலரிடம் மோசடி கும்பல் மோசடியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

திருச்சியில் கடந்த சில மாதங்களில் பலரிடம் ஆசை வார்த்தை கூறி சிலர் மோசடி செய்துள்ளனர். இவற்றை தடுப்பதற்காக காவல் துறையினர் தொடர்ந்து தீவிர கண்காணிப்பிலும், விசாரணையும் செய்து வருகிறார்கள். பொதுமக்கள் இவை குறித்து மிகுந்த விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்.

குறிப்பாக முன்பின் தெரியாத நபரிடம் பணத்தை கொடுப்பது, தனியார் நிதி நிறுவனத்திடம் பணத்தை கொடுப்பது, வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறும் நபர்களை நம்ப வேண்டாம். மேலும் நாம் செலுத்தும் பணத்தை விட மூன்று மடங்கு நான்கு மடங்கு அதிகமாக பணம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறுபவர்களிடம் நம்பி ஏமாற வேண்டாம்.

பொது மக்களுக்கு காவல்துறை தரப்பில் அறிவுரைகள் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் பலர் தொடர்ந்து இது போன்ற ஆசை வார்த்தைகளை நம்பி ஏமாற்றம் அடைந்து வருகிறார்கள். ஆகையால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புணர்வுடன், கவனத்துடன் செயல்படும் வேண்டும்” என அறிவுரை வழங்கி உள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5755
Active
5484
Recovered
59
Deaths
Last Updated: Sat 7 June, 2025 at 11:52 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அமைச்சர் அமித் ஷா சாமி தரிசனம்.. பூரண கும்ப மரியாதை அளித்த கோயில் நிர்வாகம்
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
TNEA 2025: பொறியியல் மாணவர் சேர்க்கை; சான்றிதழ் பதிவேற்ற நாளை கடைசி- அடுத்து என்ன?
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மணிப்பூரில் மீண்டும் கலவரம்.. ஊரடங்கு அமல்... இணைய சேவைகள் நிறுத்தம்! பதற்றத்தில் மக்கள்
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
மீண்டும் மீண்டுமா? அரசுப்பள்ளி ஆசிரியர்களின் இந்த உரிமைகளையும் பறிப்பதா? அன்புமணி கேள்வி
Putin Vs Zelensky: “ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
“ரஷ்யா கள்ள ஆட்டம் ஆடுகிறது“ - கதறும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி; அடித்து ஆடும் புதின்
Spl. Train to Tiruchendur: முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
முருக பக்தர்களுக்கு நற்செய்தி; வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு ரயில் இயக்கம்-முழு விவரம்
Maruti Suzuki Grand Vitara: மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
மாருதி சுசுகி அசத்தல் சலுகை; கிராண்ட் விதாரா எஸ்யூவி-க்கு 1.93 லட்சம் வரை பலன்கள் அறிவிப்பு
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Tamilnadu Roundup: மதுரையில் அமித் ஷா.. தைலாவரம் வர சொன்ன ராமதாஸ்- 10 மணி செய்திகள்
Embed widget