மேலும் அறிய

இனிவரும் காலங்களில்...சமூக வலைதளங்களில் தவறாக.. - போலீஸ் விடுத்த எச்சரிக்கை என்ன?

சைபர் கிரைம் குற்றங்கள் குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு இடையே விழிப்புணர்வு ஏற்படுத்திய காவல்துறை.

தற்போது டிஜிட்டல் உலகில் குற்றங்களும் அதிகம் டிஜிட்டலாக நடைபெறுகின்றன. தகவல் திருட்டுகளாக, பண மோசடிகளாக, சமூக வலைதள அவதூறுகளாக எனக் குற்றங்களும் டிஜிட்டல் வடிவம் பெற்றிருக்கின்றன. இந்த சைபர் குற்றங்கள் குறித்து எங்குப் புகார் அளிப்பது என நம்மில் பலருக்குத் தெரிவதில்லை. மேலும், இவையெல்லாம் சைபர் குற்றங்கள் என பொதுவாக சில குற்றங்களைப் பற்றி நாம் தெரிந்து வைத்திருப்போம். ஆனால் எவையெல்லாம் சைபர் குற்றங்களுக்குள் அடங்கும் எனத் தெளிவாக நமக்குத் தெரிவதில்லை. 

குறிப்பாக நம் கையிலுள்ள தொழில்நுட்ப விஷயங்களான கைபேசி, இணையம், கணினி இவற்றைப் பயன்படுத்தி நிகழ்த்தப்படும் அனைத்து குற்றங்களுமே சைபர் குற்றங்களுக்குள் தான் அடங்கும். உதாரணத்திற்கு‌ சில குற்றங்களைச் சொல்லலாம்.

நீங்கள் ஆன்லைனில் ஏதாவது பொருள் வாங்கும்போது உங்களுக்கு அந்த பொருளை அனுப்பாமல் வேறு ஏதாவது பொருளை அனுப்புவது, உங்களுடைய கைபேசி எண்ணைத் தெரிந்துகொண்டு ஃபோன் கால் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்தி மூலமாகவோ ஏதாவது தொந்தரவு தருவது, இணைய வழி பரிவர்த்தனையில் உங்கள் பணத்தைத் திருடுவது இவை அனைத்துமே சைபர் குற்றங்கள் ஆகும். 


இனிவரும் காலங்களில்...சமூக வலைதளங்களில் தவறாக.. - போலீஸ் விடுத்த எச்சரிக்கை என்ன?

சமூக வலைதளத்தினால் அதிகரிக்கும் குற்றங்கள்

இந்நிலையில் திருச்சி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக சைபர் க்ரைம் குற்றங்கள் அதிகரித்து வருவதாக புகார்கள் எழுந்துள்ளது. அதேசமயம் இளைஞர்கள் சமூக வலைதளங்களை தவறாக பயன்படுத்துவதால் ஏற்படும் குற்றங்களும் அதிகரித்து வருகிறது. 

ஆகையால் சமூக வலைதளங்களில் ஏற்படும் குற்றங்களை தடுப்பதற்காக திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்.

குறிப்பாக பண மோசடி ,ஆன்லைன் குற்றங்கள் அதிகரிப்பதை தடுப்பதற்கு தனி குழுக்கள் அமைக்கப்பட்டு சைபர் கிரைம் போலீசார் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. 

அதேசமயம் சமூக வலைதளங்களை இளைஞர்கள் தொடர்ந்து தவறாக பயன்படுத்தி வருவதால் பல்வேறு சட்ட பிரச்சனைகள் ஏற்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதளங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்தும் , அவற்றிலிருந்து எவ்வாறு பாதுகாப்பாக இருப்பது குறித்தும் தொடர்ந்து இளைஞர்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. 


இனிவரும் காலங்களில்...சமூக வலைதளங்களில் தவறாக.. - போலீஸ் விடுத்த எச்சரிக்கை என்ன?

சைபர் க்ரைம் குற்றங்கள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

இந்நிலையில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமார்  உத்தரவின்படியும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கோடிலிங்கம் (சைபர்கிரைம் பிரிவு) அறிவுறுத்தலின்படியும்,  திருச்சி மாவட்ட சைபர்கிரைம் காவல்நிலையம் சார்பில் MIET Engineering கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு சைபர் குற்றங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வில் இணையவழி நிதிமோசடி சம்பந்தப்பட்ட குற்றங்கள் பற்றியும் அக்குற்றங்களிலிருந்து எவ்வாறு தங்களை தற்காத்துக் கொள்வது என்பது பற்றியும், சமூக வலைதள குற்றங்கள் பற்றியும், வலைதளங்களை எவ்வாறு பாதுகாப்பாக உபயோகப்படுத்துவது என்பது பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேலும் சைபர் கிரைம் சம்பந்தப்பட்ட புகார்களை பதிவு செய்யும் வலைதளமான www.cybercriyme.gov.in www.cybercriyme.gov.in மற்றும் M-kavache2 app மற்றும் இலவச தொலைபேசி எண் 1930 பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, இனிவரும் காலங்களில் சமூக வலைதளங்களை முறைப்படி பயன்படுத்த வேண்டும். தவறாக பயன்படுத்தும் நபர்கள் மீது சட்ட ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
TATA Sierra Speed Milage: 222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
222 கி.மீ வேகம், 30 கி.மீ மைலேஜா.! என்னங்க சொல்றீங்க.?! சோதனையில் அசத்திய டாடா சியாரா
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
திட்டம் போட்டு குழி பறித்தார்.. தஞ்சையில் ரூ.44 லட்சம் வழிப்பறி சம்பவத்தில் 4 பேர் கைது
Embed widget